என் மலர்
இந்தியா

ராஜஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு
- இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது
- வடக்கு குஜராத்தில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
தேசிய நில அதிர்வு மையம் (NCS) அறிக்கையின்படி, இன்று காலை 9.30 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. தற்போது நிலைமை கண்காணிக்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு குஜராத்தில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது
Next Story






