என் மலர்
மத்தியப்பிரதேசம்
- கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
- கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா ரகுவன்ஷி என உறவினர்கள் உறுதி செய்தனர்.
இந்தூர்:
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜா ரகுவன்ஷி(வயது 30). இவருக்கும் சோனம் ரகுவன்ஷி(27) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது, கடந்த மாதம் 23-ந் தேதி மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள சோஹ்ரா பகுதியில் தேனிலவு கொண்டாட பயணம் மேற்கொண்டனர். முதலில் ஷில்லாங் சென்ற அவர்கள், அங்கிருந்து இரு சக்கர வாகனம் வாடகைக்கு எடுத்துக் கொண்டு சோஹ்ராவிற்கு சென்றனர். கிழக்கு காசி மலை மாவட்டத்தில், தொடர்மழை பெய்யும் சிரபுஞ்சிக்கு சென்றனர். அங்குள்ள நான்கிரியாட் கிராமத்தில் விடுதியில் தங்கி தேனிலவை கொண்டாடினர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை, அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் வாடகைக்கு எடுத்த இரு சக்கர வாகனம், ஓஸ்ரா மலைப் பகுதியில் உள்ள சோஹ்ரா ரிம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அதனால் அவர்கள் ட்ரெக்கிங் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்பட்டது. தகவலறிந்த மேகாலயா போலீசாரும் உள்ளூர் மக்களும் இணைந்து தீவிர தேடுதல் பணியைத் தொடங்கினர். இந்தூர் காவல் ஆணையர் சந்தோஷ் சிங், குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் குமார் மேகாலயா விரைந்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், மேகாலயா முதல்-மந்திரிகான்ராட் சங்மாவுடன் பேசி, புதுமணத் தம்பதியை கண்டுபிடிக்க உதவி கோரினார். ராஜாவின் சகோதரர் விபின் மற்றும் சோனமின் சகோதரர் கோவிந்த் ஆகியோர் இந்தூரிலிருந்து ஷில்லாங் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஓஸ்ரா மலைப் பகுதி குற்றச் செயல்களுக்கு பெயர் பெற்றது. புதுமணத் தம்பதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் சோஹ்ரா பகுதி அருவிக்கரையில், ராஜா ரகுவன்ஷி இறந்த நிலையில் உடல் பாதி சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா ரகுவன்ஷி என உறவினர்கள் உறுதி செய்தனர்.
ராஜாவின் உடலில் இருந்து இரண்டு மோதிரங்கள், ஒரு தங்கச் சங்கிலி, வளையல், பர்ஸ், மொபைல் ஆகியவற்றை காணவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே ராஜா ரகுவன்ஷி இறந்த நேரம் மற்றும் பிற தகவல்கள் தெரியவரும். போலீசார் அரிவாள் போன்ற ஆயுதத்தையும் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ராஜா ரகுவன்ஷி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடர்ந்து அவரது மனைவி சோனத்தை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். முன்னதாக தேனிலவின் போது, சோனம் தனது மாமியாருடன் தொலைபேசியில் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- ஒரு சித்தாந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது.
- எப்போதும் வல்லரசுகளுக்கு எதிராகப் போராடியுள்ள காங்கிரஸ் ஒருபோதும் தலைவணங்காது.
காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த கட்சிப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக-ஆர்.எஸ்.எஸ். மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
அவர் பேசியதாவது, "ஒரு சித்தாந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது.ஒரு பக்கம் காங்கிரசும் அரசியலமைப்பும் நிற்கின்றன; மறுபுறம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், அதைக் கடைப்பிடிக்கவோ அல்லது பாதுகாக்கவோ விரும்பவில்லை. அவர்கள் இந்தியாவின் நிறுவனங்களை முறையாகக் கைப்பற்றி, நாட்டை மெதுவாக மூச்சுத் திணறடிக்கிறார்கள்.
இரண்டாவது போராட்டம் சமூக நீதிக்கானது. பாஜக-ஆர்எஸ்எஸ் தலைமை சாதி கணக்கெடுப்பை நிர்ப்பந்தத்தின் பேரில் வாய்மொழியாகவே நடத்தி வருகிறது. அதே நேரத்தில் அதை செயல்படுத்துவதை தீவிரமாகத் தடுக்கிறது. அவர்கள் சமூக நீதியின் அடிப்படையில் நிறுவப்பட்ட இந்தியாவை அல்ல, அதானி மற்றும் அம்பானிக்கு சேவை செய்யும் இந்தியாவை விரும்புகிறார்கள்.
நான் பாஜகவையும் ஆர்எஸ்எஸ்ஸையும் நன்றாகப் புரிந்துகொண்டேன். சிறிதளவு அழுத்தம் கொடுத்தாலும், அவர்கள் பயத்தில் பின்வாங்குவார்கள். டிரம்ப் போன் செய்து, 'நரேந்தர், சரண்டர்' என்று சொன்னபோது ஜி அப்படியே ஆகட்டும் என மோடி போர் நிறுத்தத்தை அறிவித்தார் என்று ராகுல் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் வல்லரசுகளை துணிச்சலுடன் எதிர்கொண்டதை நினைவுபடுத்திய ராகுல், "அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை மீறி 1971 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையின்கீழ் இந்தியா பாகிஸ்தானை அடித்தது.
எப்போதும் வல்லரசுகளுக்கு எதிராகப் போராடியுள்ள காங்கிரஸ் ஒருபோதும் தலைவணங்காது. காந்தி, நேரு, சர்தார் படேல் போன்ற சிறந்த மனிதர்கள் அனைவரும் வல்லரசுகளுக்கு எதிராகப் போராடிய போர்வீரர்கள்" என்று கூறினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூருக்கு பின் கடந்த மே 9 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டை நிறுத்தத்திற்கு தானே காரணம் என்றும், வர்த்தகத்தை வைத்து இருவரையும் பணிய வைத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முறை திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்க நீதிமன்றத்திலும் டிரம்ப் நிர்வாகம் இதை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் வெற்றிகளில் சிறந்தது ஆபரேஷன் சிந்தூர்.
- ஆபரேஷன் சிந்தூர் பெண்கள் சக்திகளின் உதாரணமாகும்.
போபால்:
பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய பிரதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காலை 11.30 மணியளவில் அவர் போபாலில் உள்ள ஜம்பூரி மைதானத்தில் லோக மாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
விழா நடைபெறும் இடத்துக்கு மோடி காரில் ஊர்வலமாக வந்தார். அங்கு திரண்டு இருந்த மக்கள் தேசிய கொடியுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குங்குமப்பூ கலர் சேலை அணிந்த 15 ஆயிரம் பெண்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று மோடிக்கு வரவேற்பு கொடுத்தனர்.
அஹில்யா பாய் நினைவு அஞ்சல் தலையையும், சிறப்பு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். ரூ.300 மதிப்புள்ள அந்த நாணயம் ஹோல்கரின் உருவப்படத்தை கொண்டது.
பழங்குடியினர், நாட்டுப்புறக்கலை, பாரம்பரிய கலைகள் ஆகியவற்றின் பங்களிப்புக்காக பெண் கலைஞர் ஒருவருக்கு தேவி அஹில்யா பாய் தேசிய விருதினையும் மோடி வழங்கினார். போபாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி பேசியதாவது:-
மத்திய பிரதேசத்தில் இன்று பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மாநிலத்தின் வசதிகளை அதிகரிக்கும். வளர்ச்சியை துரிதப்படுத்தும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
அஹில்யா பாய் எங்களுக்கு எல்லாம் உத்வேகம் அளித்தார். இந்தியாவின் சக்தி பெண்கள். நான் அவர்களை மதிக்கிறேன்.
அஹில்யாபாய் பழங்குடி சமூகத்திற்காக காலி நிலத்தில் விவசாயம் செய்வதற்கான கொள்கையை உருவாக்கினார். இந்தியாவின் ஜனாதிபதியாக இருக்கும் ஒரு பழங்குடி மகளின் வழிகாட்டுதலின் கீழ் எனது பழங்குடி சகோதர-சகோதரிகளுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்.
ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அதிகாரத்துக்கான அடையாளமாகும். அது தற்போது வீரத்துக்கான அடையாளமாக மாறி விட்டது. தீவிரவாதிகளுக்கு பெண்கள் சக்தி சவாலாக இருந்தது.
இந்தியாவின் வெற்றிகளில் சிறந்தது ஆபரேஷன் சிந்தூர். ஆபரேஷன் சிந்தூர் பெண்கள் சக்திகளின் உதாரணமாகும். தீவிரவாதிகள் இந்தியாவை துண்டாக்க முயற்சி செய்தனர். இதற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்தது.
எங்களை காயப்படுத்த முயற்சிப்பவர்கள் பாதிப்புகளை சந்திப்பார்கள். எங்கள் மீது தோட்டாக்களை வீசினால், நாங்கள் தோட்டாக்களால் பதிலடி கொடுப்போம் என்று 140 கோடி இந்தியர்கள் கர்ஜிக்கிறார்கள்.
நீங்கள் ஒரு தோட்டாவை வீசினால் அதற்கு பீரங்கி குண்டு மூலம் பதிலடி கொடுப்போம். ஆபரேஷன் சிந்தூர் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாகும். பயங்கரவாத எதிர்ப்புக்கு மிகப்பெரிய வெற்றிகரமான நடவடிக்கையாகும்.
பயங்கரவாதிகள் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்கள் இனி பொறுத்துக் கொள்ளப்படாது என்பதை ஆபரேஷன் சிந்தூர் சத்தமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியுள்ளது. இப்போது அவர்களின் (பயங்கரவாதிகள்) மறைவிடங்களுக்குள்ளும் கூட நாங்கள் தாக்குவோம். பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
ஜம்முவில் இருந்து குஜராத் எல்லை வரை பல பெண் பி.எஸ்.எப் (எல்லை பாதுகாப்பு படை) வீராங்கனைகள் எல்லையை பாதுகாப்பதில் முன்னணியில் இருந்தனர். எல்லைக்கு அப்பால் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு அவர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருக்கிறது. அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
இவ்வாறு மோடி பேசினார்.
மேலும் பிரதமர் மோடி தாத்தியா, சத்னா விமான நிலையங்களையும் , இந்தூர் மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் உயர் முன்னுரிமை சேவைகளையும் தொடங்கி வைத்தார். ரூ.480 கோடி மதிப்பில் 1271 அடல் கிராம நல் ஆளுமை பவன்கள் கட்டுவதற்கான முதல் தவணைத் தொகையையும் வழங்கினார்.
இந்தக் கட்டிடங்கள் கிராம பஞ்சாயத்துகளுக்கு நிரந்தர கட்டுமானங்களாக இருக்கும். இந்த வசதியானது நிர்வாக செயல்பாடுகள், கூட்டங்கள் நடத்துதல், ஆவணங்களைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்கு பஞ்சாயத்துகளுக்கு உதவியாக இருக்கும்.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
- சம உயரம் கொண்ட எதிரியுடன் போர் நடத்தப்படுகிறது என்றார் பா.ஜ.க. தலைவர்.
போபால்:
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முன்னாள் எம்பியான பிரக்ஞா சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் இந்தியாவுடன் அளவு மற்றும் ராணுவ பலத்தில் பொருந்தவில்லை. சம உயரம் கொண்ட எதிரியுடன் போர் நடத்தப்படுகிறது.
பாகிஸ்தானின் வெடிமருந்துகளும் பயங்கரவாதிகளும் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் ஏவிய அனைத்து ஆயுதங்களும் இந்திய எல்லைக்கு வெளியே அழிக்கப்பட்டன. அவர்களால் ஒரு தாக்குதலைக் கூட நடத்த முடியவில்லை, இந்தியா அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது.
நீங்கள் ஏன் போரை நிறுத்தினீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்? போர் சமமானவர்களுக்கு இடையே நடைபெறுவது. யானை ஒருபோதும் நாயுடன் சண்டையிடாது என தெரிவித்தார்.
- சட்ட விரோதமாக யார் மதுபானம் விற்பது? என்பது தொடர்பாக மோதல்.
- பிரச்சினை அதிகரிக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் இருவர் உயிரிழப்பு.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வது தொடர்பாக இரண்டு கும்பலுக்கு இடையில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த விரோதம் துப்பாக்கிச்சண்டை வரை செல்ல இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பாய் கான் கா புரா என்ற கிராமத்தில் பண்டி பதாரியா (39), அவருடைய மருமகன் போலா பதாரியா (23) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக பிரதீப் தோமர், லூக்கா தோம், லால்கி பண்டிட் ஆகியோரும் சட்டவிரோதமாக மதுபானம் விற்று வந்துள்ளனர்.
இதனால் இரு கும்பலுக்கும் இடையில் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சிலர் பாய் கான் கா பூரா கிராமத்திற்கு மதுபானம் கொண்டு வருவதாக பண்டிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பண்டி தனது மருமகன் போலா பதாரியா உடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு மற்றொரு கும்பல் மதுபானம் விற்றுக் கொண்டிருந்துள்ளது. இருவரும் அவர்களுடன் தகராறு செய்துள்ளனர். இதனால் அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் இருவரையும் சரமாரி சுட்டுள்ளனர். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சட்டவிரோதமாக மதுபானம் விற்ற விவகாரத்தில் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், அக்கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சியான காஙகிரஸ் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பாஜக தலைமையில் காட்டு ராஜ்ஜியம் நடப்பதாக ஆளுங்கட்சியை விமர்சித்துள்ளது.
- பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக முழு நாடும் தேசபக்தி உணர்வோடு ஒன்றுபட்டது.
- இந்தியா மாறிவிட்டது என்று நாம் பெருமையுடன் சொல்லலாம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக கடந்த 7ஆம் தேதி அதிகாலை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷசன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் நடத்திய இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு உலகின் பெரும்பலான நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற தெளிவான தகவலை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உலகிற்கு தெரிவித்துள்ளது என துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெகதீப் தன்கர் கூறியதாவது:-
நமது சகோதரிகளின் நெற்றியில் அணிந்த குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு இந்த பூமியில் வாழ உரிமை இல்லை என்பது பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாடாகும். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக முழு நாடும் தேசபக்தி உணர்வோடு ஒன்றுபட்டது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் அந்த நாட்டின் தலைவர்களும் கெல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதி ஊர்வலத்தில் நிற்பதைக் காண முடிந்ததால், யாரும் ஆதாரம் கேட்கவில்லை.
இந்தியா மாறிவிட்டது என்று நாம் பெருமையுடன் சொல்லலாம். பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்ற கூற்றுடன் (சிந்து) நீர் விநியோகத்தை நிறுத்தியன் மூலம் கடந்த 70 ஆண்டுகளில் எடுக்கப்படாத முடிவை பிரதமர் மோடி எடுத்தார்.
இவ்வாறு ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.
- கடுமையான இரத்தப்போக்கு காரணமாக இறந்தது தெரியவந்துள்ளது.
- குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டிலிருந்து அந்தப் பெண்ணின் படுகாயங்களுடன் குடுபத்தினரால் மீட்கப்பட்டார்.
மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் 45 வயது பழங்குடிப் பெண்ணை இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கல்வா தாலுகாவில் உள்ள ரோஷ்னி பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இந்த கொடூரமான சம்பவம் நடந்தது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) ராஜேஷ் ரகுவன்ஷி கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு, கடுமையான இரத்தப்போக்கு காரணமாக இறந்தது தெரியவந்துள்ளது.
கண்ட்வா மாவட்ட மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. அறிக்கை வந்த பிறகு கூடுதல் விவரங்கள் கிடைக்கும்" என்று கூறினார்.
இறந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், மேலும் பாதிக்கப்பட்டவரும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் குர்கு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் வெள்ளிக்கிழமை ஒரு திருமணத்தில் கலந்து கொண்டனர். சனிக்கிழமை காலை குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டிலிருந்து அந்தப் பெண்ணின் படுகாயங்களுடன் குடுபத்தினரால் மீட்கப்பட்டார். பிற்பகல் 2 மணியளவில் அவர் இறந்துவிட்டார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஏஎஸ்பி தெரிவித்தார்.
- மத்திய பிரதேசத்தில் இயற்கை பேரிடர்களால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
- சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
மத்திய பிரதேச மாநில அரசிடமிருந்து அரசு நிதியுவியை பெறுவதற்காக பாம்பு கடித்து, நீரில் மூழ்கி, மின்னல் தாக்கி இறந்ததாக போலியாக சான்றிதழ் தயாரித்து ரூ.11 கோடியை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சியோனி, கியோலாரி தாலுகா பகுதியை சேர்ந்தவர் தரம் சச்சின் தஹாயக். மோசடி மன்னனான இவர் பாம்பு கடித்து இறந்தவர்கள், நீரில் மூழ்கி பலியானவர்கள், மின்னல் தாக்கி இறந்ததாக கூறி போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து அரசு நிதி உதவி தொகை ரூ.11.26 கோடியை மோசடி செய்துள்ளார்.
அந்த பணத்தை தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். 2018-19 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்த மோசடி நடந்துள்ளது.
இதில் ரமேஷ் என்பவர் பாம்பு கடித்து 30 முறை இறந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதேபோல் ராம்குமார் என்பவர் 28 முறை பாம்பு கடித்து இறந்ததாக போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். மேலும் நீரில் மூழ்கி இறந்ததாகவும், மின்னல் தாக்கி பலியானதாகவும் போலி சான்றிதழ் தயாரித்து இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இயற்கை பேரிடர்களால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த தொகையை பெறுவதற்காக போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து இந்த மோசடி நடந்துள்ளது. இதற்கு சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
கியோலாரி தாலுகா அலுவலகத்தில் பதிவேடுகளை நிதித்துறை சமீபத்தில் ஆய்வு செய்ததில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து 47 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று இணை இயக்குனர் ரோகித் கவுசல் தெரிவித்துள்ளார்.
- பல் வலி நிவாரணத்திற்கு மாத்திரை வாங்க சென்ற பெண்ணுக்கு சல்பாஸ் மாத்திரை கொடுத்த விற்பனையாளர்.
- உடல்நிலை மோசமானதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழப்பு.
மத்திய பிரதேச மாநிலத்தில் 32 வயது பெண் ஒருவருக்கு மெடிக்கல் ஸ்டாஃப் மாத்திரை மாற்றி கொடுத்ததால், பெண் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது தரம்பூரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா (வயது 32). இவர் பல் வலியால் துடித்துள்ளார். இதனால் வலி நிவாரண மாத்திரை வாங்குவதற்காக ஜாபுவா மாவட்டத்தில் உள்ள மெடிக்கலுக்கு சென்றுள்ளார்.
மெடிக்கல் ஸ்டாஃபிடம் பல் வலியாக உள்ளது. வலி நிவாரண மருந்து (painkiller) வேண்டும் எனக் கேட்டுள்ளாளர். ஆனால் மெடிக்கல் ஸ்டாஃப் சல்பாஸ் மாத்திரை (sulphas tablet) வழங்கியுள்ளார். ரேகாவும் பல் வலிக்கான நிவாரண மாத்திரை என நினைத்து உட்கொண்டுள்ளார்.
இதனால் ரேகாவின் உடல்நிலை மிகவும் மோசடைந்துள்ளது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்வதற்குள் உயிர் பிரிந்துள்ளது. இது தொடர்பாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உடற்கூறு பரிசோதனையில் சல்பாஸ் மாத்திரை உட்கொண்டதால் உயிர் பிரிந்தது எனத் தெரியவந்தது. இதனால் மெடிக்கல் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். மெடிக்கலில் விற்பனையாளராக இருந்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.
- கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என ம.பி. பா.ஜ.க. மந்திரி பேசினார்.
- கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. மந்திரி மன்னிப்பு கோரினார்.
போபால்:
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.
கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.
இதற்கிடையே, இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக மந்திரி விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
- ஆபரேஷன் சிந்தூர் குறித்து கர்னல் சோபியா குரேஷி விளக்கம் அளித்தார்.
- கர்னல் சோபியா குரேஷி இணையத்தில் வைரலானார்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.
இந்நிலையில், இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷா, "பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்" என்று பேசினார்.
கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி (35), இந்திய ராணுவத்தின் சிக்னல் கார்ப்ஸில் அதிகாரியாக உள்ளார். 1999 ஆம் ஆண்டு ஆபிஸர்ஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்து ராணுவத்தில் நியமிக்கப்பட்ட பிறகு, கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். சோபியாவின் தாத்தாவும் தந்தையும் இராணுவத்தில் இருதவர்கள். சோபியா குரேஷி மெக்கானைஸ்டு காலால் படையைச் சேர்ந்த அதிகாரியை மணந்துள்ள்ளார். இதனால் சோபியா முழுமையான ராணுவ குடும்ப பின்னணியை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரின்சிபல் அவரின் தொலைபேசியை பிடுங்கி தரையில் வீசி உடைத்தார்.
- சுற்றியிருந்த மற்றவர்கள் தங்கள் மொபைல் போன்களில் சண்டையை படம் பிடித்துக் கொண்டு நின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் பள்ளி பிரின்சிபலும் நூலகரும் ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு சண்டையிடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பள்ளி முதல்வருக்கும் அதே பள்ளியில் பணிபுரியும் நூலகருக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், நூலகர் தனது மொபைல் போனில் வாக்குவாதத்தைப் படம்பிடிக்கத் தொடங்கினார். இதைக் கவனித்த முதல்வர் கோபமடைந்தார். பிரின்சிபல் அவரின் தொலைபேசியை பிடுங்கி தரையில் வீசி உடைத்தார். இது நூலகரை கோபப்படுத்தியது. அவரும் தலைமை ஆசிரியரைத் தாக்கினார். இருவரும் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.
ஒன்று சிலர் அவர்களைத் தடுக்க முயன்ற போதிலும், சுற்றியிருந்த மற்றவர்கள் தங்கள் மொபைல் போன்களில் சண்டையை படம் பிடித்துக் கொண்டு நின்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, பள்ளியில் பணிபுரியும் மற்றொரு பெண் தலையிட்டு அவர்கள் இருவரையும் பிரித்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் அவர்கள் இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






