என் மலர்
நீங்கள் தேடியது "Tribal woman"
- கடுமையான இரத்தப்போக்கு காரணமாக இறந்தது தெரியவந்துள்ளது.
- குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டிலிருந்து அந்தப் பெண்ணின் படுகாயங்களுடன் குடுபத்தினரால் மீட்கப்பட்டார்.
மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் 45 வயது பழங்குடிப் பெண்ணை இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கல்வா தாலுகாவில் உள்ள ரோஷ்னி பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இந்த கொடூரமான சம்பவம் நடந்தது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) ராஜேஷ் ரகுவன்ஷி கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு, கடுமையான இரத்தப்போக்கு காரணமாக இறந்தது தெரியவந்துள்ளது.
கண்ட்வா மாவட்ட மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. அறிக்கை வந்த பிறகு கூடுதல் விவரங்கள் கிடைக்கும்" என்று கூறினார்.
இறந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், மேலும் பாதிக்கப்பட்டவரும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் குர்கு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் வெள்ளிக்கிழமை ஒரு திருமணத்தில் கலந்து கொண்டனர். சனிக்கிழமை காலை குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டிலிருந்து அந்தப் பெண்ணின் படுகாயங்களுடன் குடுபத்தினரால் மீட்கப்பட்டார். பிற்பகல் 2 மணியளவில் அவர் இறந்துவிட்டார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஏஎஸ்பி தெரிவித்தார்.
- ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதாக பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
- உறவினர்கள் அடித்து உதைத்து அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.
ராஞ்சி:
தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்ததால் 24 வயது பழங்குடி இன பெண்ணை உறவினர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்த சம்பவம் ஜார்க்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அம்மாநிலத்தில் உள்ள பலமு அருகே ஜோகிடிஹ் கிராமத்தை சேர்ந்த 24 வயது பழங்குடி இன இளம் பெண்ணின் பெற்றோர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர்.
இதையடுத்து அந்த பெண் தனது சகோதரர் மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர். இதற்காக ஒரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர். ஆனால் இந்த திருமணத்துக்கு இளம் பெண் மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை தான் நீ திருமணம் செய்யவேண்டும் என வற்புறுத்தினார்கள். ஆனாலும் அந்த பெண் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். தொடர்ந்து அவர்கள் தினமும் கொடுமைபடுத்தி வந்ததால் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் ஒருவர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.
இதையறிந்த அவரது சகோதரர்கள் அவரை மீட்டு மீண்டும் தங்களது கிராமத்துக்கு அழைத்து வந்தனர். அந்த பெண் வேறு யாரையாவது காதலிக்கலாம் என்றும் அதனால் திருமணத்துக்கு மறுக்கிறார் என்றும் அந்த கிராம மக்கள் கூறினார்கள். இதையடுத்து அந்த பெண் ஊர்பஞ்சாயத்து முன்பு நிறுத்தப்பட்டார்.
அவரிடம் உன் காதலன் யார்? அவன் பெயரை சொல். எதற்காக திருமணம் வேண்டாம் என சொல்கிறாய் என பஞ்சாயத்தார் கேட்டனர்.
ஆனால் இதற்கு எதுவும் பதில் அளிக்காமல் பஞ்சாயத்து முன்பு அந்த பெண் அமைதியாக நின்றார். இதனால் ஊரை விட்டு அவர் ஒதுக்கி வைக்கப்படுவதாக பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன் பிறகு அவரது உறவினர்கள் செய்த செயல் தான் மிகவும் கொடூரமானது. அந்த பெண்ணின் தலையை மொட்டையடித்து கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
இதனால் அந்த பெண் ஊரார் மத்தியில் கூனி குறுகி போனார். அவரை உறவினர்கள் அடித்து உதைத்து அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.
அதன்பிறகு அங்குள்ள இலுப்பை மரத்தில் கட்டி வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இரவு முழுவதும் அந்த பெண் சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் ஆள் நடமாட்டம் அற்ற காட்டுப்பகுதிக்குள் தவித்தார்.
சத்தம் போட்டால் உதவிக்கு யாரும் வராத அடர்ந்த காட்டுப்பகுதி அது. இந்த சூழ்நிலையில் காலை நேரம் காட்டுக்குள் சிலர் ஆடு, மாடு மேய்க்க சென்றனர். அவர்கள் இளம்பெண் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கைகளில் கட்டப்பட்டு இருந்த கயிறை அவிழ்த்துவிட்டனர்.
இது பற்றி உள்ளூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டனர். மிகவும் சோர்வாக இருந்த அவரை அங்குள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணின் உடலில் மர்ம உறுப்பு உள்பட பல இடங்களில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. இதனால் அப்பெண் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- ஸ்ரீபதியின் தாயார் மல்லிகா, தந்தை காளி ஆகியோர் ஓட்டலில் பணியாற்றி தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தனர்.
- வறுமையை உணர்ந்து முன்னேறி படித்த ஸ்ரீபதி தற்போது நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று பழங்குடியினத்திற்கே பெருமை சேர்த்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி, டி.என்.பி.எஸ்.சி. எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இந்த பணியிடங்களுக்கு 6,031 ஆண்களும், 6,005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்ற 472 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நேர்முக தேர்வு முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவும் வெளியானது. இதில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி (வயது 23) என்ற பழங்குடியின பெண்ணும் சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார்.
இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை என கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்.
அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள். சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்.
'நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல நிலை காண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தை தாய் மாரே, - நும் பெண்களைக் கற்க வைப் பீரே! இற்றைநாள் பெண் கல்வி யாலே, - முன்னேற வேண்டும் வையம் மேலே!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீபதிக்கு திருமணமாகி குழந்தை இருப்பதும், குழந்தை பிறந்த 2-வது நாளில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வந்து எழுத்து தேர்வில் கலந்துகொண்டு அவர் வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நீதிபதியாக தேர்வாகி உள்ள ஸ்ரீபதிக்கு ஜெயசூர்யா என்ற தம்பியும், சரண்யா என்ற ஒரு தங்கையும் உள்ளனர். இவர்களது தந்தைக்கு ஜவ்வாதுமலை அடிவாரத்தில் தற்போது குப்பநத்தம் அணை உள்ள இடத்தில் விவசாய நிலம் இருந்துள்ளது.
குப்பநத்தம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது இவர்களது குடும்பத்தினரின் நிலத்தையும் அரசு கையகப்படுத்தியது. இதனால் ஸ்ரீபதி குழந்தையாக இருக்கும்போதே, தாயார் மல்லிகா தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் குடும்பத்தினருடன் குடியேறினார்.
அங்கு ஸ்ரீபதியின் தாயார் மல்லிகா, தந்தை காளி ஆகியோர் ஓட்டலில் பணியாற்றி தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தனர்.
ஏலகிரி மலையில் உள்ள சார்லஸ் மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை ஸ்ரீபதி பள்ளிப்படிப்பு முடிந்ததும் சட்ட படிப்பை தேர்வு செய்து டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து 5 வருடம் சட்டம் பயின்று வக்கீலானார்.
வறுமையை உணர்ந்து முன்னேறி படித்த ஸ்ரீபதி தற்போது நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று பழங்குடியினத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். இதனால் அவரை கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- உன் முறுக்கிய முயற்சியில் இருக்கிற சமூகம் பாடம் கற்கட்டும்.
சென்னை:
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி (வயது 23) என்ற பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார். இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கும் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இரும்பைப் பொன்செய்யும்
இருட்கணம் எரிக்கும்
சனாதன பேதம்
சமன் செய்யும்
ஆதி அவமானம் அழிக்கும்
விலங்குகட்குச் சிறகுதரும்
அடிமைப் பெண்ணை
அரசியாக்கும்
விளக்குமாறு விளங்கிய கையில்
செங்கோல் வழங்கும்
கல்வியால் நேரும்
இவையென்று காட்டிய
பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி
உன் முறுக்கிய முயற்சியில்
இருக்கிற சமூகம்
பாடம் கற்கட்டும்
வளர்பிறை வாழ்த்து!
இரும்பைப் பொன்செய்யும்
— வைரமுத்து (@Vairamuthu) February 14, 2024
இருட்கணம் எரிக்கும்
சனாதன பேதம்
சமன் செய்யும்
ஆதி அவமானம் அழிக்கும்
விலங்குகட்குச் சிறகுதரும்
அடிமைப் பெண்ணை
அரசியாக்கும்
விளக்குமாறு விளங்கிய கையில்
செங்கோல் வழங்கும்
கல்வியால் நேரும்
இவையென்று காட்டிய
பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி
உன் முறுக்கிய… pic.twitter.com/HwbzKRGdBm
- மகனுடன் குடிசையில் குடியேறி வசித்து வருகிறார்.
- குழந்தைகள் படிப்பை தொடர வேண்டியது அவசியம்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் குனோ பாய். பழங்குடியின பெண்ணான இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்தார். இதையடுத்து பண்ணைகள் மற்றும் வீடுகளுக்கு வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.
தனது மகனுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்துவந்த குனோ பாய்க்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் (அனைவருக்கும் வீடு திட்டம்) மூலம் வீடு கிடைத்தது. அந்த வீட்டில் தனது மகனுடன் வாழ்ந்து வந்தார். அவரது வீட்டின் அருகே பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
மிகவும் பழைய பாழடைந்த கட்டிடத்தில் இயங்கிவந்த அந்த பள்ளியில் தான், அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படித்துவந்தனர்.
அந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைகள் மற்றும் சுவர்கள் இடிந்த நிலையில் மிகவும் சேதமடைந்து இருந்தது. இதனைப்பார்த்த குனோ பாய் வேதனை அடைந்தார்.
அனைவருக்கும் வீடு திட்டத்தில் கிடைத்த புதிய வீட்டின் தான் வசித்துவரும் நிலையில், சிறிய குழந்தைகள் பாழடைந்த கட்டிடத்தில் படித்து வருவதை நினைத்து வேதனைப்பட்டார்.
ஆகவே தனது வீட்டை பள்ளி நடத்துவதற்கு கொடுக்க முன்வந்தார். இதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குனோ பாய் தனது மகனுடன் வீட்டை காலி செய்து ஓலைக்குடிசையில் குடியேறினார்.
பின்பு தனது வீட்டை பள்ளி நடத்துவதற்கு வழங்கினார். அதன்பிறகு அவரது வீட்டில் பள்ளி நடந்து வருகிறது. அங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
பள்ளி நடந்துவரும் தனது வீட்டை கடந்து செல்லும் போதேல்லாம், குனோ பாய் அங்கு சிறிதுநேரம் நின்று குழந்தைகள் பாடம் படிக்கும் சத்தத்தை கேட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் தன்னுடைய குடிசைக்கு செல்கிறார்.
பள்ளி குழந்தைகளுக்காக தங்கியிருந்த தனது வீட்டை கொடுத்து விட்டு, குடிசைக்கு மாறியது குறித்து குனோ பாய் கூறியிருப்பதாவது:-
கிராமத்து குழந்தைகள் பாழடைந்த கட்டிடத்தில் படிக்கிறார்கள் என்பதை அறிந்து என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. குழந்தைகள் படிப்பை தொடர வேண்டியது அவசியம். சரியான கூரை மற்றும் சுவர்கள் இல்லாத தால் நான் அவர்களுக்கு எனது வீட்டை கொடுத்தேன். நான் குடிசையில் வாழ்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறி னார்.
குனோபாய் வீட்டில் செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியை குந்திபாய் ஜகத் கூறும்போது, 'குனோ பாய் அவரது வீட்டை எங்களுக்கு இலவசமாக கொடுத்தார். அங்கு குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறோம்.
எங்கள் பள்ளியில் மொத்தம் 22 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு ஒரே அறையில் கற்பிப்பது கடினம். ஆனால் நாங்கள் எப்படியோ சமாளித்து வருகிறோம்' என்றார்.






