search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி- கவிதை மூலம் வாழ்த்திய வைரமுத்து
    X

    பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி- கவிதை மூலம் வாழ்த்திய வைரமுத்து

    • ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    • உன் முறுக்கிய முயற்சியில் இருக்கிற சமூகம் பாடம் கற்கட்டும்.

    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி (வயது 23) என்ற பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார். இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கும் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இரும்பைப் பொன்செய்யும்

    இருட்கணம் எரிக்கும்

    சனாதன பேதம்

    சமன் செய்யும்

    ஆதி அவமானம் அழிக்கும்

    விலங்குகட்குச் சிறகுதரும்

    அடிமைப் பெண்ணை

    அரசியாக்கும்

    விளக்குமாறு விளங்கிய கையில்

    செங்கோல் வழங்கும்

    கல்வியால் நேரும்

    இவையென்று காட்டிய

    பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி

    உன் முறுக்கிய முயற்சியில்

    இருக்கிற சமூகம்

    பாடம் கற்கட்டும்

    வளர்பிறை வாழ்த்து!


    Next Story
    ×