என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக மந்திரி"

    • கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என ம.பி. பா.ஜ.க. அமைச்சர் பேசினார்.
    • கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. அமைச்சர் மன்னிப்பு கோரினார்.

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.

    கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

    இதற்கிடையே, இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரினார்.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக மந்திரி விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

    இதனையடுத்து, ராணுவ கர்னல் சோபியா குரேஷி மீதான அவதூறு கருத்துக்கு தன் மீது வழக்குப்பதிவு செய்ய ம.பி. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாஜக அமைச்சர் முறையீடு செய்தார்.

    நம் நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது, அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் பொறுப்புணர்வோடு பேசவேண்டும் என்று கூறி குன்வர் விஜய் ஷாவை உச்ச நீதிமன்றம் அப்போது கடுமையாக கண்டித்தது.

    இந்த வழக்கை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்னல் சோபியா குரேஷி குறித்து அமைச்சர் குன்வர் விஜய் ஷாவை இழிவாக பேசியதற்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது.

    அமைச்சரின் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், "நீங்கள் ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. நீங்கள் பேசும்போது உங்கள் வார்த்தைகளை கவனித்து பேச வேண்டும். நாம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தது.

    மேலும், அமைச்சர் விஜய் ஷா கைது செய்யப்படுவதற்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், விஜய் ஷா கூறிய கருத்துகள் தொடர்பாக விசாரிக்க, மத்தியப் பிரதேசத்திற்கு வெளியே இருந்து வந்த ஒரு பெண் அதிகாரி உட்பட 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவிற்கு விஜய் ஷா முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    • கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என ம.பி. பா.ஜ.க. அமைச்சர் பேசினார்.
    • கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. அமைச்சர் மன்னிப்பு கோரினார்.

    பயங்கரவாதிகளின் சகோதரி: சோபியா குரேஷி பற்றி இழிவாக பேசிய பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.

    கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

    இதற்கிடையே, இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரினார்.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக மந்திரி விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

    இதனையடுத்து, ராணுவ கர்னல் சோபியா குரேஷி மீதான அவதூறு கருத்துக்கு தன் மீது வழக்குப்பதிவு செய்ய ம.பி. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாஜக அமைச்சர் முறையீடு செய்தார்.

    நம் நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது, அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் பொறுப்புணர்வோடு பேசவேண்டும் என்று கூறி குன்வர் விஜய் ஷாவை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.

    மேலும், இந்த வழக்கை நாளை (மே 16) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. .

    • ராணுவ கர்னலை பயங்கரவாதிகளின் சகோதரி என ம.பி. பாஜக மந்திரி குன்வார் விஜய் ஷா கூறினார்.
    • கர்னல் சோபியா குரேஷியின் தியாகம் பற்றி பேச தகுதி இல்லை என தமிமுன் அன்சாரி கூறினார்.

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரு பெண் ராணுவ அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

    இதற்கிடையே, இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ராணுவ கர்னலை பயங்கரவாதிகளின் சகோதரி எனப் பேசிய ம.பி. பாஜக மந்திரி குன்வார் விஜய் ஷாவுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நமது ராணுவத்தில் பணியாற்றும் ஒரு பெண் உயர் ராணுவ அதிகாரியை இழிவுபடுத்தும் வகையில், அவரை மதத்துடன் தொடர்புப்படுத்தி, எதிரி நாட்டின் மகள் என்று கூறக்கூடிய அளவிற்கு பாஜகவினரின் மனதில் ஃபாசிச பயங்கரவாதம் பரவி இருக்கிறது. தேசப்பற்றை அரசியல் வியாபாரமாக மாற்றுபவர்களுக்கு, கர்னல் சோபியா குரேஷியின் தியாகம் பற்றி பேச தகுதி இல்லை.

    என அன்சாரி கூறினார்.

    • கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என ம.பி. பா.ஜ.க. மந்திரி பேசினார்.
    • கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. மந்திரி மன்னிப்பு கோரினார்.

    போபால்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.

    கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

    இதற்கிடையே, இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரினார்.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக மந்திரி விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

    பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பெண் மந்திரியின் இடுப்பை திரிபுரா மந்திரி பிடித்தப்படி நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. #TripuraMinister #ManojKanti
    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் முதல்-மந்திரி பிப்லாப் குமார் தேப் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

    சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய சென்று இருந்தார்.

    அப்போது சில நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த விழாவில் பா.ஜனதா மந்திரிகள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு திட்டத்தை தொடங்கி வைத்த போது திரிபுரா மந்திரிகள் மேடையின் இருபக்கமும் அணிவகுத்து நின்றார்கள். அப்போது ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்த சமூக நலத்துறை பெண் மந்திரி சந்தனாவின் இடுப்பை பிடித்தப்படி அமைச்சர் மனோஜ்காந்தி என்பவர் நின்று கொண்டு இருந்தார்.



    பெண் மந்திரியின் இடுப்பை மனோஜ்காந்தி பிடித்தப்படி நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பெண் மந்திரிக்கு விழா மேடையிலேயே பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதையடுத்து மந்திரி மனோஜ்காந்திக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் அதை ஏற்க முதல்-மந்திரி பிப்லாப் குமார் மறுத்து விட்டார்.

    இதற்கிடையே மந்திரி மனோஜ்காந்தி ராஜினாமா செய்யாவிட்டால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக மூத்த தலைவர்களில் ஒருவரான பிஜந்தர் எச்சரித்துள்ளார்.

    ஆனால் தன்னிடம் யாரும் அத்துமீறவில்லை என்று பெண் மந்திரி சந்தனா அறிவித்துள்ளார். என்றாலும் திரிபுராவில் சந்தனாவின் இடுப்பை பிடித்தப்படி மந்திரி நிற்கும் காட்சிகள் பரபரப்பை நீடிக்க செய்துள்ளன. #TripuraMinister #ManojKanti
    உத்தரகாண்டில் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாது என பாரதிய ஜனதா மந்திரி தெரிவித்துள்ளார். #Uttarakhand #Panchayatpolls #BJPMinister
    டேராடூன்:

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டுவதில் மத்திய பா.ஜனதா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளில் கழிவறை இல்லாவிட்டால் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட இயலாது என்று அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த மாநில பஞ்சாயத்து ராஜ் மந்திரி அரவிந்த் பாண்டே கூறியதாவது:-

    பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுபவர்களின் வீடுகளில் கழிப்பறை இருப்பது கட்டாயம். வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாது என்று பரிந்துரைத்துள்ளோம்.

    மேலும் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்பது பற்றிய பரிசீலனையும் இருக்கிறது. அதோடு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியும் நிர்ணயிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படுகிறது. #Uttarakhand #Panchayatpolls #BJPMinister
    உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால் அதற்கு என்ன? சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் தான் இருக்கிறது என்று பா.ஜ.க. மந்திரி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்தது.

    அங்கு பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தது. ஆனாலும் இதுவரை ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

    உத்தரபிரதேசத்தில் கூட்டுறவு துறை கேபினட் மந்திரியாக இருப்பவர் முகுத் பிகாரி வர்மா. இவர் பக்ரைச் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவரிடம் நிருபர்கள் உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடித்தால் ராமர் கோவில் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். இன்னும் கோவில் கட்டவில்லையே என்று கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த முகுத் பிகாரி வர்மா, ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும். அதற்கான முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

    இதற்கு நிருபர்கள் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ராமர் கோவில் எப்படி கட்ட முடியும் என்று திருப்பி கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த மந்திரி, வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்தால் அதற்கு என்ன? சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் தான் இருக்கிறது. நீதி எங்கள் கையில் இருக்கிறது. அதன் நிர்வாகம் எங்கள் கையில் இருக்கிறது. சட்டசபையும் எங்களிடம் உள்ளது. இந்த நாடே எங்களிடம் தான் இருக்கிறது. இது எங்கள் கோவில். எனவே நாங்கள் ராமர் கோவில் கட்டுவோம் என்று பதில் அளித்தார்.

    சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் இருக்கிறது என்று அவர் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி மந்திரி முகுத் பிகாரி வர்மா கருத்தை அறிய விரும்பியபோது அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். #UttarPradesh #RamaTemple #MukutBihariVerma
    ×