என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வெப்ப காற்று பலூனில் சென்றார்.
    • இந்த பலூனில் திடீரென தீப்பிடித்தது. இதில் நல்வாய்ப்பாக அவர் உயிர்தப்பினார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தின் சுற்றுலா தலமான காந்திசாகருக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் சென்றுள்ளார். மாண்ட்சோர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் வெப்ப காற்று பலூன் ஒன்றில் அவர் பறக்க விரும்பினார்.

    இதற்காக மோகன் யாதவ் பலூனில் ஏறினார். அடுத்த சில நிமிடங்களில் பலூன் தயாராக இருந்தபோது எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது.

    பலத்த காற்றினால் பலூன் மேலே எழும்ப முடியாமல் தடுமாறியது. இதையடுத்து, சமயோசிதமாக செயல்பட்ட பாதுகாவலர்கள் முதல்மந்திரி மோகன் யாதவை காப்பாற்றினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்நிலையில், முதல் மந்திரி மோகன் யாதவ் கூறுகையில், சுற்றுலா பயணிகளை கவர இங்கு பல அம்சங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. மத்திய பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா மையமாக இந்தப் பகுதி உள்ளது என தெரிவித்தார்.

    • ஏழைகளுக்கு, அரசு மருத்துவமனைகள் இனி உயிர் காக்கும் இடங்களாக இல்லை, ஆனால் மரணக் குகைகளாக மாறிவிட்டன.
    • உங்கள் அரசாங்கம் நாட்டின் மில்லியன் கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது.

    மத்தியப் பிரதேச தலைநகர் இந்தூரில் மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் வார்டுக்குள் எலி கடிதத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில் இதுகுறித்து தனதுஎக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,

    "மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலி கடித்து இரண்டு பிறந்த குழந்தைகள் இறந்தனர். இது தற்செயல் நிகழ்வு அல்ல, இது முழுமையான கொலை. இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் அர்த்தமற்றது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டாலே முதுகுத்தண்டில் நடுக்கம் ஏற்படுகிறது.

    சுகாதாரத் துறை வேண்டுமென்றே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது சிகிச்சை பணக்காரர்களுக்கு மட்டுமே. ஏழைகளுக்கு, அரசு மருத்துவமனைகள் இனி உயிர் காக்கும் இடங்களாக இல்லை, ஆனால் மரணக் குகைகளாக மாறிவிட்டன.

    பிரதமர் மோடியும் மத்தியப் பிரதேச முதல்வரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். உங்கள் அரசாங்கம் நாட்டின் மில்லியன் கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது.

    இப்போது குழந்தைகள் அவர்களின் தாய்மார்களின் மடியில் இருந்து பறிக்கப்படுகிறார்கள்" என்று ராகுல் கடுமையாக சாடினார்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க இந்தூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

    • பச்சிளம் குழந்தைகள் வலியால் அலறி துடித்தன.
    • காயம்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. மாநிலத்தின் மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளில் ஒன்றான இங்கு எலித்தொல்லை அதிகரித்துள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்தநிலையில் குழந்தைகள் நல வார்டில் புதிதாக பிறந்த 2 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தன.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது அந்த குழந்தைகளின் கை விரல்கள் மற்றும் காதுகளை அங்கு சுற்றித்திரிந்த எலிகள் கடித்து குதறின. இதனால் பச்சிளம் குழந்தைகள் வலியால் அலறி துடித்தன. காயம்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    • குவாலியர் மண்டல கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக மகாநாரியமன் இருந்தார்.
    • மிக இளைய வயதில் (29) ம.பி. கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்ற அவர் பெருமையை பெற்றுள்ளார்.

    மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய பாஜக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மகாநாரியமன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    குவாலியர் மண்டல கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அவர் மிக இளைய வயதில் (29) ம.பி. கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானவர் என்ற அவர் பெருமையை பெற்றுள்ளார்.

    மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ தலைவராக இருந்து இப்போது ஐசிசி தலைவராக உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்பது மாவட்ட ஆட்சியரின் உத்தரவு.
    • பைக்கில் வந்த நபர்கள் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மத்தியப் பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாததால் பெட்ரோல் கொடுக்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரை பைக்கில் வந்த இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

    மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் , நேற்று அதிகாலை 5 மணியளவில் பிந்த்-குவாலியர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பெட்ரோல் பம்புக்கு பைக்கில் இருவர் வந்துள்ளனர்.

    ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, 55 வயதான தேஜ் நாராயண் நர்வாரியா என்ற ஊழியர் அவர்களுக்கு பெட்ரோல் வழங்க மறுத்துவிட்டார்.

    இதனால் பைக்கில் வந்த நபர்கள் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தின் போது, அவர்கள் துப்பாக்கியை எடுத்து ஊழியரை சுட்டனர். இதில் அவரின் கையில் குண்டடி பட்டது.

    தாக்குதல் தொடர்பான காட்சிகள் பெட்ரோல் பங்கின் சிசிடிவிவியில் பதிவானது.

    காயமடைந்த நர்வாரியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    சிசிடிவி காட்சிகளிலின் மூலம் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

    • நீண்ட நேரம் காத்திருந்தும் அவருடைய காதலன் வரவில்லை.
    • போன் மூலம் காதலனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார்.

    காதலனுக்காக பெற்றோரை விட்டு ஓடி போய் ஏமாற்றமடைந்து வேறு ஒருவரை திருமணம் செய்யும் சம்பவங்கள் சினிமாவில் பார்த்திருக்கிறோம்.

    ஆனால் அது போன்ற ஒரு ஆச்சரியப்பட வைக்கும் சம்பவம் ஒன்று மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

    அங்குள்ள இந்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா திவாரி. கல்லூரி படிப்பை முடித்த இவர் வீட்டில் பெற்றோர் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர். அவருடைய காதலன் எந்த சமயத்திலும் உன்னை கைவிடவே மாட்டேன் என அடிக்கடி வாக்குறுதி அளித்தார்.

    இது ஒருபுறம் இருக்க காதல் விவகாரம் ஷ்ரத்தா திவாரி வீட்டிற்கு தெரிய வந்தது. அவர்கள் இந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஷ்ரத்தா திவாரி வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்ய முடிவு செய்தார். இது பற்றி அவருடைய காதலனிடம் தெரிவித்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

    சம்பவத்தன்று ஷ்ரத்தா திவாரி தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டார். வீட்டில் இருந்த பெற்றோர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது நான் எனது காதலனை திருமணம் செய்து கொண்டு தான் வருவேன் என கூறினார்.

    அவரிடம் பெற்றோர்கள் கெஞ்சி கதறி அழுது பார்த்தனர். ஆனால் தன்னுடைய காதலனை திருமணம் செய்வதில் ஷ்ரத்தா திவாரி உறுதியாக இருந்தார். பெற்றோரை உதறி விட்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர் காதலனிடம்ஏற்கனவே கூறியபடி அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    நீண்ட நேரம் காத்திருந்தும் அவருடைய காதலன் வரவில்லை. போன் மூலம் காதலனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார். அவர் அழைப்பை எடுக்கவில்லை.

    ஒரு கட்டத்தில் காதலனிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது. அதில் இப்போது எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    காதலனை நம்பி பெற்றோரை உதறி விட்டு வந்த ஷ்ரத்தா திவாரி கதறி அழுதார். ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றனர். வீட்டிற்கும் செல்ல முடியாது காதலனும் கைவிட்டு விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் ஷ்ரத்தா திவாரி நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார்.



    அந்த நேரத்தில் ரெயில் ஒன்று வந்தது. அந்த ரெயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்தார். அந்த பெட்டியில் ஷ்ரத்தா திவாரி கல்லூரியில் படித்த போது நண்பராக இருந்த கரண் என்பவர் இருந்தார்.

    இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது கண்கலங்கியபடி இருந்த ஷ்ரத்தா திவாரியிடம் ஏன் இப்படி இருக்கிறாய் என கரண் கேட்டார்.

    திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி வந்து விட்டேன். காதலன் கைவிட்டதால் அதுவும் நடக்கவில்லை. இனிமேல் என்னால் வாழ முடியாது என்றார்.

    கரண் அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை. இறுதியாக கரண் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.

    நம்பிக்கை துரோகம் செய்த காதலனை விட ஆபத்தில் உதவும் நண்பன் எவ்வளவோ மேல் என சிந்தித்த ஷ்ரத்தா திவாரி சம்மதம் தெரிவித்தார். இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் தம்பதியினர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசார் இளம்பெண் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அவரது தந்தை நான் எனது மகளை 10 நாட்கள் கணவரிடம் இருந்து பிரித்து எனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 10 நாட்களுக்கு பிறகும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் விரும்பினால் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    அதற்கு ஷ்ரத்தா திவாரி, கரண் இருவரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இளம்பெண் பெற்றோருடன் சென்றார்.

    சினிமா போல் நடந்த இந்த சம்பவம் இந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போதைப் பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • போதைப் பொருள் வர்த்தகத்தில் மத்திய பிரதேசம் முந்திவிட்டது என்றார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய பிரதேச மாநில பெண்கள், நாட்டின் பிற பகுதிகளை விட அதிகமாக மது அருந்துகின்றனர். இதற்காக மத்திய பிரதேசத்துக்கு பதக்கம் அளிக்கவேண்டும்.

    மத்திய பிரதேசத்தை வளமான மாநிலமாக மாற்ற கனவு காணும் பா.ஜ.க. தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

    போதைப் பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நமது சகோதரிகளும், மகள்களும் போதைப் பொருளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். போதைப் பொருள் பயன்பாட்டிலும் மத்திய பிரதேச பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.

    போதைப் பொருள் வர்த்தகத்தில் பஞ்சாப் போன்ற மாநிலங்களை மத்திய பிரதேசம் முந்திவிட்டது என தெரிவித்தார்.

    ஜிது பட்வாரியின் இந்தக் கருத்து அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஜிது பட்வாரிக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிது பட்வாரியின் கருத்து, பெண்களுக்கு எதிரான காங்கிரசின் குறுகிய மனப்பான்மையை காட்டுவதாகவும், இதற்காக காங்கிரஸ் தலைவர் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • சூடான கத்தியால் மார்பு, கைகள் மற்றும் கால்களில் கடுமையாக சூடு வைத்தார்.
    • குஷ்பு அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.

    மத்தியப் பிரதேசத்தின் வரதட்சணை கொண்டு வராத மனைவியை கணவன் கொடூரமான முறையில் சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    கார்கோன் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குஷ்பூ பிப்லியா (23) போலீசில் அளித்த வாக்குமூலத்தின்படி, இந்த ஆண்டு பிப்ரவரியில் எனக்கு திருமணம் நடந்தது. திருமணமான நாளிலிருந்தே கணவர் என்னை துன்புறுத்தத் தொடங்கினார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, குடிபோதையில் இருந்த கணவர், முதலில் என்னை கண்மூடித்தனமாக அடித்தார். பின்னர் சமையலறைக்கு இழுத்துச் சென்று கால்கள் மற்றும் கைகளைக் கட்டினார்.

    சூடான கத்தியால் மார்பு, கைகள் மற்றும் கால்களில் கடுமையாக சூடு வைத்தார். வலியால் அலறியபோது கொதிக்கும் கத்தியை என் வாயில் வைத்து துன்புறுத்தினார். 

    "எனது பெற்றோர் உன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர், எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை" என்றும் கூறி என்னை தொடர்ந்து தாக்கினார்.

    தாக்குதல் நடந்தபோது வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர்" என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    திங்கள்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் குஷ்பு எப்படியோ அங்கிருந்து தப்பித்து, வீட்டு வேலைக்காரரின் செல்போன் மூலம் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் குஷ்புவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று குஷ்புவிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

    வரதட்சணை கேட்டும் தனது மகளை பிடிக்கவில்லை என்றும் மருமகன் துன்புறுத்தியுள்ளான். அவளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குஷ்புவின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார் .இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    முன்னதாக உத்தரப் பிரதேசத்தில், வரதட்சணை கொண்டுவராத மனைவியை கணவன் தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • 26 வயது ஆசிரியையை ஒருதலைபட்சமாக காதலித்துள்ளான்.
    • ஆசிரியை புகார் அளித்ததால் வேறு பள்ளிக்கு மாறி படித்து வந்துள்ளார்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் 26 வயது ஆசிரியையை ஒருதலையாக காதலித்த மாணவன், அந்த ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கபூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியில் 18 வயது மாணவன் சூர்யான்ஸ் கோச்சார் படித்து வந்துள்ளான். இதே பள்ளியில் 26 வயதான ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.

    கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு, ஆசிரியை மீது அந்த மாணவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியையிடம், தாங்களை விரும்புவதாக தெரிவித்துள்ளான். ஆனால் ஆசிரியை அதை ஏற்கவில்லை. அந்த மாணவன் மீது புகார் அளித்ததாக தெரிகிறது. இதனால் அந்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு, மற்றொரு பள்ளியில் சேர்ந்துள்ளான்.

    கடந்த 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, அந்த ஆசிரியை சேலை அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவன் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். இதனால் அந்த ஆசிரியை புகார் அளித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த மாணவன், பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு நேராக அந்த ஆசிரியை வீட்டிற்கு சென்றுள்ளான்.

    ஆசிரியை சுதாரிப்பதற்குள் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான். அருகில் உள்ளவர்கள் தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆசிரியை உடலில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதி செய்து அநத் மாணவனை கைது செய்துள்ளனர்.

    • படுக்கை அறையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்தது.
    • வெறும் 4 நிமிடம் 10 நொடிகளில் கொள்ளையை அரங்கேற்றி அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீதிபதி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, தலைநகர் இந்தூரில் உள்ள ரமேஷ் கார்க் உடைய வீட்டுக்குள் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நுழைந்து படுக்கை அறையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்தது.

    ஒரு திருடன் நகைகளை எடுத்துக்கொண்டிருந்த நிலையில் மற்றொரு திருடன் இரும்புக் கம்பியை அங்கு படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த நீதிபதியின் மகன் ரித்விக் -ஐ நோக்கி நீட்டியபடி இருந்தான்.

    ரித்விக் ஒருவேளை தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தால் அவரை அந்த கம்பியால் தாக்க திருடன் தயாராக இருந்தது அறையின் சிசிடிவி வீடியோவில் தெரிந்தது.

    வெறும் 4 நிமிடம் 10 நொடிகளில் கொள்ளையை அரங்கேற்றி அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. ஜன்னல் இரும்பு கிரில் கதவை வெட்டி அவர்கள் உள்ளே நுழைந்தது தெரியவந்தது.

    சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர். 

    • எல்லாருக்கும் முதலாளி நான் தான் என நினைக்கும் சிலர் யோசிக்கிறார்கள்.
    • எந்த உலக சக்தியாலும் நாம் ஒரு வல்லரசாக மாறுவதைத் தடுக்க முடியாது.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீதம் வரிவிதித்தார். இதனால் இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் உமரியா கிராமத்தில் 'பிரஹ்மா' பெம்ல் (BEML) ரயில் உற்பத்தி மையத்திற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்வில் பேசிய அவர், "இந்தியா இவ்வளவு வேகமாக வளர்வதைச் சிலர் விரும்பவில்லை. எல்லாருக்கும் முதலாளி நான் தான் என நினைக்கும் சிலர் இந்தியா எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது என்று யோசிக்கிறார்கள்.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை அதிக விலை கொண்டதாக மாற்ற முயற்சி நடக்கிறது. இதன் மூலம் விலை உயர்ந்து, உலக நாடுகள் அவற்றை வாங்குவதை நிறுத்தும் என நினைக்கிறார்கள்.

    இதற்காகவே இந்த முயற்சி நடந்து வருகிறது. ஆனால் இந்தியா முன்னேறி வரும் வேகத்தில், எந்த உலக சக்தியாலும் நாம் ஒரு வல்லரசாக மாறுவதைத் தடுக்க முடியாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார். 

    • மனைவி திரௌபதி, தனது கணவரின் பால்ய நண்பருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தார்.
    • தனது கணவர் மற்றும் மாமியார் மீது பொய்யான வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்வதாகவும் மிரட்டினார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகர் லோதி (45). இவரது மனைவி திரௌபதி, தனது கணவரின் பால்ய நண்பருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தார்.

    மனோகரின் குடும்ப உறுப்பினர்கள் இது குறித்து அறிந்ததும், அவர்கள் திரௌபதியை உறவை முறித்துக் கொள்ளுமாறு அவர்கள் எச்சரித்தனர்.

    இருப்பினும், அவர் மறுத்தது மட்டுமல்லாமல், தனது கணவர் மற்றும் மாமியார் மீது பொய்யான வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்வதாகவும் மிரட்டினார்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மனோகர் லோதி, அவரது தாயார் புல்ரானி லோதி (70), மகள் ஷிவானி (18) மற்றும் மகன் அங்கித் (16) ஒரு கடுமையான முடிவை எடுத்தனர்.

    ஜூலை 26 ஆம் தேதி இரவு, நால்வரும் சல்பாஸ் மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர்.

    இந்த சம்பவத்தில், பூல்ராணி மற்றும் அங்கித் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஷிவானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். மனோகர் லோதி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

    முழு குடும்பத்தையும் தற்கொலைக்கு தூண்டியதாக மனோகரின் மனைவி திரௌபதி மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

    கைது செய்யப்பட்ட திரௌபதி- அவரது காதலன்

     

    ×