கணவரின் நண்பருடன் உறவு வைத்த மனைவி.. குடும்பம் எடுத்த விபரீத முடிவு - 4 பேர் தற்கொலை

மனைவி திரௌபதி, தனது கணவரின் பால்ய நண்பருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தார்.தனது கணவர் மற்றும் மாமியார் மீது பொய்யான வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்வதாகவும் மிரட்டினார்.
கணவரின் நண்பருடன் உறவு வைத்த மனைவி.. குடும்பம் எடுத்த விபரீத முடிவு - 4 பேர் தற்கொலை
Published on

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகர் லோதி (45). இவரது மனைவி திரௌபதி, தனது கணவரின் பால்ய நண்பருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தார்.

மனோகரின் குடும்ப உறுப்பினர்கள் இது குறித்து அறிந்ததும், அவர்கள் திரௌபதியை உறவை முறித்துக் கொள்ளுமாறு அவர்கள் எச்சரித்தனர்.

இருப்பினும், அவர் மறுத்தது மட்டுமல்லாமல், தனது கணவர் மற்றும் மாமியார் மீது பொய்யான வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்வதாகவும் மிரட்டினார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மனோகர் லோதி, அவரது தாயார் புல்ரானி லோதி (70), மகள் ஷிவானி (18) மற்றும் மகன் அங்கித் (16) ஒரு கடுமையான முடிவை எடுத்தனர்.

ஜூலை 26 ஆம் தேதி இரவு, நால்வரும் சல்பாஸ் மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சம்பவத்தில், பூல்ராணி மற்றும் அங்கித் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஷிவானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். மனோகர் லோதி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

முழு குடும்பத்தையும் தற்கொலைக்கு தூண்டியதாக மனோகரின் மனைவி திரௌபதி மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட திரௌபதி- அவரது காதலன்
கைது செய்யப்பட்ட திரௌபதி- அவரது காதலன்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com