search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohan Yadav"

    • தலைமை செயலகமான வல்ல பவனில் 4 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேச தலைமை செயலகத்தில் மட்டும் ஏன் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது?

    மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசின் தலைமை செயலகமான வல்ல பவன் (Vallabh Bhavan), உள்ளது. இன்று காலை, தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து கரும் புகை வெளியேறி அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    தீ விபத்து குறித்து பேசிய ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ், "ஆட்சியரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிய வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பட்வாரி, "ஏற்கனவே தலைமை செயலகமான வல்லப் பவனில் 4 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பேற்பது? ஆனால் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேச தலைமை செயலகத்தில் மட்டும் ஏன் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் உமாங் சிங்கார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், முதலமைச்சர் மோகன் யாதவுக்கும் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. அதனால் தான் சிவராஜ் சிங் சவுகான் தனது ஊழல் கோப்புகளை வல்ல பவனில் வைத்து எரித்து வருகிறார். பாஜக அரசின் உள்கட்சி பிரச்சினைகளால் லட்சக்கணக்கான மக்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. மோசடி செய்து தீ வைப்பது பாஜக அரசின் பழைய வழக்கம் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார் மோகன் யாதவ்

    மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசின் தலைமை செயலகமான வல்லப் பவன் (Vallabh Bhavan), உள்ளது.

    இன்று காலை, தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து கரும் புகை வெளியேறி அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    தீ விபத்து குறித்து ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ், "ஆட்சியரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிய வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.

    தற்போது வரை உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

    • மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 163 இடங்களில் வெற்றி பெற்றது.
    • மோகன் யாதவ் முதல் மந்திரியாக பதவியேற்றார்.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வரும் பா.ஜ.க. சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியது. அங்கு மோகன் யாதவ் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். 54 வயதாகும் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும், பா.ஜ.க.விலும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர்.

    மேலும், துணை முதல் மந்திரிகளாக ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெக்தீஷ் தேதா ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட மோகன் யாதவ் இன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அப்போது துணை முதல் மந்திரிகளும் உடனிருந்தனர். மேலும், உள்துறை மந்திரி அமித்ஷாவையும் முதல் மந்திரி மோகன் யாதவ் நேரில் சந்தித்தார்.

    • பா.ஜனதா 163 இடங்களில் வெற்றி பெற்றது.
    • சிவ்ராஜ் சிங் தொடர்ந்து முதல்வராக நீடிப்பார் எனக் கருதப்பட்ட நிலையில் மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சியை பிடித்து சாதனை படைத்தது.

    இந்த 3 மாநிலங்களிலும் 3 புதிய முகங்களை முதல்-மந்திரி பதவிக்கு பா.ஜனதா மேலிடம் தேர்வு செய்திருக்கிறது.

    மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வரும் பா.ஜனதா இந்த தடவை அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது. அங்கு மோகன் யாதவ் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். 54 வயதாகும் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும், பா.ஜனதா கட்சியிலும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில புதிய முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. மோகன் யாதவ் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    பதவி ஏற்கும் விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மோகன் யாதவுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மோகன் யாதவுடன் மந்திரிகளும் பதவியேற்றுக் கொண்டனர். ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவ்தா இருவரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.

    • சிம்ஹாஸ்த மேலா நடைபெற 872 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது
    • தகாத வார்த்தைகள் பேசியவருக்கு முதல்வர் பதவியா என ஜெய்ராம் விமர்சித்தார்

    மத்திய பிரதேச மாநில சட்டசபையில் உள்ள 230 இடங்களுக்கு நவம்பர் 17 அன்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது.

    வெளியான முடிவுகளின்படி 230 இடங்களில் 163 இடங்களில் பா.ஜ.க. வென்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 66 இடங்களில் மட்டுமே வென்றது.

    இத்தேர்தலுக்கான பிரசார காலம் முழுவதும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளையும் ம.பி.க்கான தேர்தல் அறிக்கையை மட்டுமே பிரசாரத்தில் முன்னெடுத்த பா.ஜ.க., முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கூறாமலே தேர்தலில் களம் இறங்கி வென்றது.

    வெற்றியை தொடர்ந்து இதுவரை முதல்வராக இருந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கட்சியில் வேறு பொறுப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், ஒரு புதிய முகம் முதல்வராக முன்னிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகின.

    நேற்று, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து உஜ்ஜயின் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் அடுத்த முதல்வர் என அக்கட்சி அறிவித்தது.

    ம.பி.யின் உஜ்ஜயின் நகரத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்து திருவிழா "உஜ்ஜயின் சிம்ஹாஸ்த மேலா." இந்த பண்டிகை கொண்டாட்டத்திற்காக 872 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    ஆனால், விவசாய நிலங்கள் எனும் பிரிவிலிருந்து குடியிருப்புக்கான நிலங்கள் என யாதவ், யாதவின் மனைவி, யாதவின் சகோதரி ஆகியோர் பயன்பெறும் வகையில் திட்டம் மாற்றப்பட்டதாக நவம்பர் மாத தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது.

    மேலும், இது குறித்து மோகன் யாதவ் தகாத வார்த்தைகளால் பேசுகின்ற வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

    இந்நிலையில், மோகன் யாதவ் முதல்வராக பா.ஜ.க.வினரால் தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ஜெய்ராம் பதிவிட்டிருப்பதாவது:

    தேர்தல் முடிவுகள் வெளியான 8 நாட்களில் ம.பி.யின் முதல்வராக உஜ்ஜயின் நகர வளர்ச்சி திட்டத்தில் பெருமளவு நிலங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிம்ஹாஸ்தாவிற்காக ஒதுக்கப்பட்ட 872 ஏக்கர் நில திட்டம் யாதவ் பயன்பெறும் வகையில் மாற்றப்பட்டது. பேசக்கூடாத வார்த்தைகளை யாதவ் பேசிய வீடியோவும் இணையத்தில் பரவி கிடக்கிறது. இதுதான் பிரதமர் மோடி ம.பி.க்கு அளிக்கும் உத்தரவாதமா?

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அறிவிப்பு வெளியானதும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர்.
    • தேசிய அளவிலும் கூட பா.ஜ.க. மூத்த தலைவர்களுக்கு இது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

    மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் நேற்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் புதிய முதல்-மந்திரியாக மோகன் யாதவ் என்ற எம்.எல்.ஏ. தேர்வானார். முதல்-மந்திரியாக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார் என்ற அறிவிப்பு வெளியானதும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். ஒருவர் கூட இதை எதிர்பார்க்கவில்லை. தேசிய அளவிலும் கூட பா.ஜ.க. மூத்த தலைவர்களுக்கு இது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

    ஏனெனில் மத்திய பிரதேச முதல்- மந்திரி பதவிக்கான போட்டியில் மோகன் யாதவ் பெயர் இடம் பெற்றிருக்கவில்லை. முன்னாள் முதல்- மந்திரி சிவராஜ்சிங் சவுகான் உள்பட 3 பேர் பெயர்தான் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் மிக மிக சாதாரண நிலையில் இருந்த ஒருவரை மிக உயர்ந்த பதவிக்கு பா.ஜ.க. மேலிடம் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் 48 சதவீதம் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களுக்கு பா.ஜனதா முக்கியத்துவம் கொடுத்து இருப்பதாக கருதப்படுகிறது.

    சிவராஜ்சிங் சவுகானின் அமைச்சரவையில் உயர் கல்வித்துறை மந்திரியாக மோகன் யாதவ் இருந்து வந்துள்ளார். உஜ்ஜைன் தெற்கு தொகுதியில் இருந்து 2013, 2018, 2023-ம் ஆண்டுகளில் அவர் 3 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார்.

    உஜ்ஜைன் நகரில் 1965-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி பிறந்த இவர் சட்டம் படித்துள்ளார். முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இளம் வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1991-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். மாணவர் இயக்கத்தின் தேசிய செயலாளராக பதவி வகித்தார்.

    1993-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை தீவிர அரசியலுக்கு கொண்டு வந்தவர் உமா பாரதி ஆவார். அவர்தான் மோகன் யாதவுக்கு பல்வேறு முக்கிய பதவிகளை வழங்கினார்.

    இதன் காரணமாகவே அவர் 2013 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். ஊழல் செய்யாத அரசியல்வாதி என்று புகழ் பெற்றுள்ள இவர் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இத்தனைக்கும் இவரது தந்தை சாதாரண டீ விற்கும் பணியைத்தான் செய்து வந்தார். கட்டுக்கோப்பான வாழ்க்கை காரணமாக இவரது திட்டமிட்ட பணிகள் பா.ஜ.க. மேலிடத்துக்கு தெரிய வந்திருந்தது.

    எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி வந்த அவருக்கு பல்வேறு காரணங்களால் பா.ஜனதா முதல்-மந்திரி பதவியை கொடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. முதல்-மந்திரி தேர்வு நடந்து கொண்டிருந்தபோது மோகன் யாதவ் எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்த வரிசையில் கடைசி இருக்கையில் நெருக்கி அடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

    மேடையில் இருந்த தலைவர்கள் மோகன் யாதவ் பெயரை அறிவித்தபோது யாராலும் நம்ப முடியவில்லை. மோகன் யாதவும் ஆச்சரியத்தில் மற்றவர்களை பார்த்தார். அவரிடம் மகிழ்ச்சிக்கு பதில் அதிர்ச்சிதான் அதிகமாக காணப்பட்டது.

    ஒரு நிமிடம் அவர் தனது இருக்கையிலேயே அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தார். அப்போது மேடையில் இருந்த சிவராஜ்சிங் சவுகான் சத்தமாக, 'மோகன்ஜி எழுந்து வாருங்கள்' என்று அழைத்தார்.

    அதன் பிறகு மோகன் யாதவ் இயல்பு நிலைக்கு திரும்பி மேடைக்கு சென்றார். அவருக்கு தலைவர்கள் மாலை அணிவித்தனர். சிறிது நேரம் கழித்துதான் மோகன் யாதவ் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

    மத்திய பிரதேச முதல்-மந்திரி யார்? என்பது கடைசி நிமிடம் வரை பரபரப்பாகவும், சஸ்பென்சாகவும் இருந்தது. மோகன் யாதவ் பெயர் அறிவிக்கப்பட்டபோது இந்த சஸ்பென்ஸ் உச்சகட்டத்தை எட்டியது.

    மோகன் யாதவை முதல்-மந்திரி பதவிக்கு தேர்வு செய்திருப்பதன் மூலம் பா.ஜனதா புதிய வியூகம் ஒன்றை வகுத்திருப்பதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசம், பீகாரில் யாதவ இன மக்கள் கணிசமாக உள்ளனர். அடுத்த ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடக்கும்போது இந்த இரு மாநில யாதவர்களின் வாக்குகளை அகிலேஷ் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரிடம் இருந்து தட்டி பறிக்கவே பா.ஜ.க. மோகன் யாதவை முன்னிலைப் படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய முதல்-மந்திரியாகி இருக்கும் மோகன் யாதவ் சிறந்த சிவ பக்தர். அவர் தனது சொந்த ஊரான உஜ்ஜைனிக்கு வரும் போதெல்லாம் சிவ ஆலயத்துக்கு சென்று வழிபட தவறுவதில்லை. அந்த சிவன்தான் தனது கணவருக்கு உயர்ந்த பதவியை வழங்கிக் கொண்டிருப்பதாக அவரது மனைவி சீமா யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    58 வயதாகும் மோகன் யாதவ் சிறந்த மல்யுத்த வீரர் ஆவார். அவரை மல்யுத்த பயில்வான் என்றே அழைப்பார்கள். முதல்-மந்திரியாக தேர்வானதும் அவர் மல்யுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

    • 4 மாநிலங்களில் கடந்த மாதம் பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற்றது.

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இதில், தெலுங்கானாவில் காங்கிரஸ், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவும் வெற்றி பெற்றது.

    தெலுங்கானாவில் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றார். சத்தீஸ்கரில் முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் தேர்வானார்.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வாகியுள்ளார்.

    தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்எல்ஏவாக தேர்வான மோகன் யாதவ் அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். கடந்த சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசில் மோகன் யாதவ், கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

    ×