

மத்தியபிரதேச மாநிலம் டாடியா நகரில் பெய்து வரும் கனமழையால் 400 ஆண்டுகள் பழமையான ராஜ்கர் கோட்டை சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
#WATCH | Madhya Pradesh: 7 members of a family died and 2 injured after the wall of a house collapsed due to the incessant rainfall in the Khalka Pura area of Datia. pic.twitter.com/u8yYIIqcbr