என் மலர்
கேரளா
- வருகிற 15-ந்தேதி மண்டல பூஜை வழிபாட்டுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
- பயணம் தாமதமானால் 24 மணி நேரம் (திட்டமிட்ட நேரத்திற்கு முன் அல்லது பின்) சலுகை காலம் வழங்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களுக்காக பல்வேறு வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.
பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது சபரிமலை வரும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து வரும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
வருகிற 15-ந்தேதி மண்டல பூஜை வழிபாட்டுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. டிசம்பர் மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. இந்த கால கட்டங்களில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற்படுகளை தேவசம்போர்டு தற்போதே செய்து வருகிறது.
ஆன்லைனில் அறைகளை முன்பதிவு செய்து விட்டு தாமதமாக பக்தர்கள் வந்தாலும் அவர்களது அறை பறிபோகாது. இதற்காக பம்பையில் சிறப்பு செக்-இன் கவுண்டர் திறக்கப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பயணம் தாமதமானால் 24 மணி நேரம் (திட்டமிட்ட நேரத்திற்கு முன் அல்லது பின்) சலுகை காலம் வழங்கப்படும்.
இதேபோல் ஆன்லைன் முன்பதிவில் பிரசாத முன்பதிவும் இடம் பெறும். ஆன்லைன் முன்பதிவு திரும்ப பெறப்பட்டாலும் பிரசாத முன்பதிவுகள் பாதிக்கப்படாமல் இருக்கும். ஒரு பிரசாதம் முன்பதிவு ரத்து செய்யப்பட்டால், அந்த நபரின் வங்கி கணக்கில் நேரடியாக தொகை திரும்ப அளிக்கப்படும்.
பக்தர்கள் குடிநீர் தேவைக்காக 3 ஆயிரம் ஸ்டீல் பாட்டில்களை நன்கொடையாளர்கள் மூலம் விநியோகிக்கவும் பம்பையில் உள்ள கவுண்டரில் ரூ.100 செலுத்தி குடிநீர் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மலையில் இருந்து இறங்கிய பிறகு பக்தர்கள் பாட்டில்களை திரும்ப கொடுத்துவிட்டு வைப்புத் தொகையை திரும்ப பெறலாம் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
- வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன.
திருவனந்தபுரம்:
வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அன்று வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 310க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் முதல் மந்திரியான பினராயி விஜயன் கட்சி நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பேரிடர் நேரத்திலும் மாநிலத்தை அழிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கிய மாநிலத்திற்கு மத்திய உதவி விரைவில் கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனாலும் அது இன்னும் கிடைக்கவில்லை.
நாங்கள் இன்னும் மையத்தின் உதவிக்காக காத்திருக்கிறோம்.
பேரிடர் நேரத்திலும் மாநிலத்தை அழிக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசும், பா.ஜ.க.வும் கடைப்பிடித்துள்ளன என தெரிவித்தார்.
மேலும், மாநிலத்தில் நடப்பதை எதிர்க்கட்சிகள் பார்க்க விரும்பவில்லை என காங்கிரசையும் சாடினார்.
- போராளிக்கான பயணமாக இருக்காது.
- அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள பிரச்சனைகளுக்காக போராடுவது எனது வாழ்வின் மையமாக இருக்கும்.
புதுடெல்லி:
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கேரள மாநிலம் வயநாடு எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதில் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்தார். இதனால் அங்கு நவம்பர் 13-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
பிரியங்கா நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். வயநாடு தொகுதியில் பா.ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாசும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் சத்யன் மோகெரியும் போட்டியிடு கின்றனர்.

இந்த நிலையில் வயநாடு மக்களுக்கு பிரியங்கா கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உங்கள் மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள். மக்கள் பிரதிநிதியாக எனது முதல் பயணமாக இருக்கும். ஆனால் போராளிக்கான பயணமாக இருக்காது.
ஜனநாயகம், நீதி, அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள பிரச்சனைகளுக்காக போராடுவது எனது வாழ்வின் மையமாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கேரளாவில் மழை பெய்து வருகிறது.
- பொன்முடி, கல்லாறு, மாங்கயம் ஆகிய இடங்களில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கேரளாவில் மழை பெய்து வருகிறது. அங்கு நாளை (27-ந்தேதி) வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் பத்தினம்திட்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
நாளை (27-ந்தேதி) திருவனந்தபுரம், பத்தினம் திட்டா, கொல்லம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களுக்கு "மஞ்சள் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் ஆற்று பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி சுற்றுலா தலங்களுக்கு செல்வதையும் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
முக்கியமாக பொன்முடி, கல்லாறு, மாங்கயம் ஆகிய இடங்களில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு சில இடங்களில் பிரபல சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக கேரள மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மற்றும் தாலுகா அளவில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
திருவனந்தபுரம்:
வங்கக்கடலில் உருவாகி யிருக்கும் "டானா" புயல் தீவிர புயலாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
"டானா" புயல் காரண மாக கேரள மாநிலத்திலும் மழை பெய்து வருகிறது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் கர்நாடகா கடற் கரை பகுதியில் புயல் நிலை கொண்டிருப்பதன் காரணமாகவே கேரளாவில் மழை பெய்து வருகிறது.
அங்கு வருகிற 27-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கோட்டயம், எர்ணாகுளம் இடுக்கி, திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்டும், திருவனந்த புரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த மாவட்டங்களில் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
- திரும்பிச் செல்ல வாகனம் வராததால் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்தார்.
- போலீசாரின் பைலட் வாகனம் வரவும் தாமதமானது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில், திருச்சூர் தொகுதியில் மட்டும் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றிபெற்று எம்.பி.யானார்.
அவரது வெற்றி கேரளாவில் பா.ஜ.க. காலூன்ற செய்தது. இந்த பெருமையை பெற்றுத்தந்த சுரேஷ்கோபிக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. அவர் மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம்-இயற்கை எரிவாயு துறை இணை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
மத்திய மந்திரி என்ற முறையில் கேரளாவில் நடக்கும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் சுரேஷ் கோபி பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில், திரும்பிச் செல்ல அதிகார பூர்வ வாகனம் வராததால் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்தார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரி பாட் நாகராஜா கோவிலில் நடந்த பூஜையில் மத்திய மந்திரி சுரேஷ்கோபி நேற்று பங்கேற்றார். பின்பு அங்கிருந்து திரும்பிச் செல்ல நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அவரை அழைத்துச் செல்ல அவரது அதிகார பூர்வ வாகனம் வரவில்லை.
மேலும் பாதுகாப்புக்காக வரும் போலீசாரின் பைலட் வாகனம் வரவும் தாமதமானது. சிறிதுநேரம் காத்துநின்ற சுரேஷ் கோபி, அங்கிருந்து ஒரு ஆட்டோவில் புறப்பட்டு சென்றார். மத்திய மந்திரி சுரேஷ் கோபி ஆட்டோவில் சென்று கொண்டிருந்ததை அறிந்த பைலட் மற்றும் மத்திரியின் அதிகாரபூர்வ வாகனம், அவர் சென்ற வழியில் பின்தொடர்ந்து சென்றன.
சிறிது தூரததிற்கு பிறகு சுரேஷ்கோபி சென்ற ஆட்டோவை பைலட் மற்றும் அதிகாரபூர்வ வாகனம் சென்றடைந்தது. அதன்பிறகு அதிகாரபூர்வ வாகனத்தில் சுரேஷ் கோபி பயணித்தார்.
காவல்துறையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தான், மத்திய மந்திரி ஆட்டோவில் பயணிக்க காரணம் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியிருக்கிறது.
- கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசனில் பல நாட்கள் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகினர்.
- தேர்வு செய்யப்படும் 120 போலீசார் சன்னிதானத்தில் 3 கட்டங்களாக பணியில் இருப்பார்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்தபடியே தான் இருக்கும். இதனால் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிகைகளை கேரள மாநில அரசு எடுக்கும்.
கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசனில் பல நாட்கள் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகினர். அதுபோன்று வருகிற ஆண்டுகளில் நடக்காது என்று கேரள அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. அதற்கு தகுந்தாற்போல் பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு எடுத்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் அடுத்தமாதம் (நவம்பர்) 15-ந்தேதி திறக்கப்படுகிறது. டிசம்பர் 26-ந்தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை யும் நடைபெறுகிறது. இதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் இந்த மாத தொடக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன.
முக்கியமாக பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்ய உள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு என்பது கட்டாயமாக இருக்கிறது. ஸ்பாட் புக்கிங் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் வருகை எப்படியும் அதிகமாக இருக்கும் என்பதால், பதினெட்டாம் படியில் பக்தர்களை விரைவாக ஏற்றுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பதினெட்டாம் படியில் பக்தர்கள் சிரமமின்றி ஏறுவதற்கு அங்கு போலீசார் பணிய மர்த்தப்பட்டு இருப்பார்கள்.
அவர்கள் பதினெட்டாம் படியின் இரு புறங்களிலும் ஓரமாக அமர்ந்துகொண்டு, படியேறும் பக்தர்களுக்கு உதவுவார்கள். மேலும் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில், பக்தர்களை வேகமாக படியேற்றி விடுவார்கள். பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்போது கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசாரின் இந்த பணி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அந்த பணிக்கு தற்போதைய சீசன் காலத்தில் முக்கியத்துவம் கொடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் வார நாட்களில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் ஒரு நிமிடத்திற்கு 65 பக்தர்களையும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நிமிடத்திற்கு 80 பக்தர்களையும் பதினெட்டாம் படி ஏறச்செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 120 போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களில் 50 சதவீதம் அனுபவம் வாய்ந்தவர்களும், 50 சதவீதம் புதிய பணியாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படும் 120 போலீசார் சன்னிதானத்தில் 3 கட்டங்களாக பணியில் இருப்பார்கள்.
மேலும் அவர்களுக்கு பக்தர்களை பதினெட்டாம் படியில் விரைவாக ஏறச் செய்ய 10 நாட்கள் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. அது மட்டுமின்றி சன்னிதானத்தில் 30 பேர் கொண்ட சிறப்பு கமாண்டோ குழுவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
போக்குவரத்தை கட்டுப்படுத்த சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் எரிமேலியில் 5 நிலைகளாக போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த பம்பை முதல் சன்னிதானம்ம வரை 60 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் பம்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு உரிய அறிவுரைகள் உடனுக்குடன் வழங்கப்படும்.
சபரிமலையில் பாதுகாப்பு தொடர்பாக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக தேவசம்போர்டு மந்திரி தலைமையில் பம்பையில் 29-ந்தேதி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- வயநாடு தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ராகுல்காந்தி எதுவும் செய்யவில்லை.
- வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட போது பிரதமர் மோடி விமானம் மூலம் இங்கு வந்து மீட்பு பணிகளை கண்காணித்தார்.
திருவனந்தபுரம்:
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது தாய் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி உள்ளிட்டோருடன் வந்து மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ரோடு-ஷோ சென்றனர். அதன் தொடர்ச்சியாக நடந்த பிரசார கூட்டத்தில் இருவரும் பேசினர்.
அப்போது பேசிய ராகுல்காந்தி, "பாராளுமன்றத்தில் 2 பிரதிநிதிகள் உள்ள தொகுதியாக வயநாடு இருக்கும். பிரியங்கா காந்தி அதிகாரபூர்வ வயநாடு தொகுதி எம்.பி.யாக இருப்பார். நான் அதிகாரபூர்வமற்ற எம்.பி.யாக இருப்பேன்" என்று கூறினார்.
ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கருத்து தெரிவித்திருக்கிறார். நீலம்பூரில் நடந்த பா.ஜக. வட்டார கூட்டத்தில் அவர் பேசியிருப்பதாவது:-
வயநாடு தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ராகுல்காந்தி எதுவும் செய்யவில்லை. காந்தி குடும்பத்தை சேர்ந்த இளைய மைந்தர்கள் சுற்றுலா பயணிகளை போல இங்கு வர தொடங்கி உள்ளனர். மக்களுடன் எப்போதும் இருக்கக்கூடிய ஒருவர் தான் வயநாடு தொகுதிக்கு தேவை. பொம்மை எம்.பி. தேவையில்லை.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட போது பிரதமர் மோடி விமானம் மூலம் இங்கு வந்து மீட்பு பணிகளை கண்காணித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிவாரண உதவியை கூட கேரள அரசு வழங்கவில்லை. மத்திய அரசின் கடந்த சில ஆண்டுகால வளர்ச்சி கொள்கைகளை முன்வைத்து வாக்கு கேட்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பிரியங்கா வயநாடு எம்.பி.யாக இருந்து அவர் சிறப்பாக பணியாற்றுவார்.
- ராகுல்காந்தி சகோதரி பிரியங்கா காந்தியுடன் ரோடு-ஷோ.
திருவனந்தபுரம்:
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு ஆதரவு திரட்டுவதற்காக, ராகுல்காந்தி நேற்று கேரளா வந்தார். அவர் தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் ரோடு-ஷோ சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மேலும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசி பிரியங்காவுக்கு ஆதரவு திரட்டினார். நேற்றைய நிகழ்வுகளின் போது சகோதரி பிரியங்காவுடன் ராகுல்காந்தி பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அந்த பஸ்சில் பயணித்த ஒருவர் கேட்ட கேள்விக்கு விளையாட்டுதனமாக பதிலளித்தார்.
அந்த பயணி ராகுல்காந்தியிடம், "வயநாடு தொகுதியில் உங்களை விட சிறந்த எம்.பி.யாக பிரியங்கா காந்தி இருப்பாரா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு, "இது கடினமான கேள்வி" என்று பதிலளித்த ராகுல்காந்தி, சிரித்துக்கொண்டே "நான் அப்படி நினைக்கவில்லை" என்று விளையாட்டாக தெரிவித்தார்.
இந்த வீடியோ ராகுல்காந்தியின் "எக்ஸ்" வலைதளம் வழியாக வெளியிடப்பட்டது. இதையடுத்து அந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் ராகுல்காந்தி மேலும் பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
வயநாடு தொகுதியின் எம்.பி.யாக என்னைத்தவிர வேறு யாரை நான் தேர்ந்தெடுப்பேன். அது எனது சகோதரியாகத்தான் இருக்கும். நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். பிரியங்காவுக்கு பல குணங்கள் இருக்கின்றன. வயநாடு எம்.பி.யாக இருந்து அவர் சிறப்பாக பணியாற்றுவார். பிரியங்காவுக்கும் வயநாடு ரொம்ப பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.
- வயநாடு எனக்காக செய்ததை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட சகோதரி பிரியங்கா காந்தி வேத்ரா வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
முன்னதாக, வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வயநாடு மக்களுடன் நான் பகிர்ந்து கொள்ளும் உறவை நீங்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
வயநாடு எனக்காக செய்ததை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உணர்வுகள் மிகவும் ஆழமாக இருக்கும்போது, அவற்றை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி செயல் மட்டுமே.
நாட்டில் இரண்டு எம்.பி.க்களை கொண்ட ஒரே தொகுதி வயநாடு என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஒன்று அதிகாரப்பூர்வமானது, மற்றொன்று அதிகாரப்பூர்வமற்றது. மேலும் வயநாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்க அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.
நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது, நான் என் சகோதரியை அவளுடைய நண்பர்களுடன் பார்த்தேன். நான் அவளிடம் சொன்னேன், பிரியங்கா, உங்கள் நண்பர்களைக் கவனிக்க நீங்கள் இவ்வளவு தூரம் செல்ல முடியாது. ஆனால், அவள் எதையும் செய்ய தயாராக இருந்தாள்.
சில சமயம் நண்பர்கள் பாராட்டமாட்டார்கள். நான் அவளிடம் சொல்வேன், நீ ஏன் இதைச் செய்கிறாய்? நான் விரும்புவதால் அதை செய்கிறேன், அவர்கள் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை என்று அவள் சொல்வாள்.
ஒரு நபர் தனது நண்பர்களுக்காக அதைச் செய்யத் தயாராக இருக்கிறார். அவர் குடும்பத்திற்காக என்ன செய்யத் தயாராக இருக்கிறார் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம். என் அப்பா இறந்தபோது, என் அம்மாவை என் சகோதரி கவனித்துக் கொண்டார். அவளுக்கு அப்போது 17 வயது.
தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தைப் பற்றி நான் ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். காரணம், பிரியங்கா வயநாட்டு மக்களை தனது குடும்பமாக கருதுகிறார்.
வயநாட்டு மக்களிடமிருந்து தனக்கு ஒரு உதவி தேவை. அவள் தயாரித்த ராக்கியை என் கையில் வைத்திருக்கிறேன். அது உடையும் வரை நான் அதைக் கழற்றமாட்டேன். இது ஒரு சகோதரன் தன் சகோதரிக்கான பாதுகாப்பின் சின்னம். எனக்கு பிறகு, என் சகோதரியை பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வயநாடு மக்களைக் கவனிப்பதில் அவர் தனது முழு ஆற்றலையும் செலுத்துவார். மேலும் நான் அதிகாரப்பூர்வமற்ற எம்.பி என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, நான் இங்கு வந்து தலையிட அனுமதி பெற்றுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் 35 ஆண்டுகளாக பல்வேறு தேர்தல்களுக்காக பிரசாரம் செய்து வருகிறேன்.
- உங்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள்.
திருவனந்தபுரம்:
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று ரோடு-ஷோ மூலமாக தனது பிரசாரத்தை இன்று தொடங்கினார். ரோடு-ஷோவிற்கு பிறகு நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:-
நான் 35 ஆண்டுகளாக பல்வேறு தேர்தல்களுக்காக பிரசாரம் செய்து வருகிறேன். பலமுறை கட்சி நிர்வாகிகளுக்கு பிரசாரம் செய்துள்ளேன். 1989-ம் ஆண்டு 17 வயதில் என்னுடைய தந்தைக்காக பிரசாரம் செய்தேன். எனது தாய், சகோதரர் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்காக பல்வேறு தேர்தல்களில் பிரசாரம் செய்துள்ளேன்.
இப்போது எனக்காக பிரசாரம் செய்கிறேன். எனக்காக பிரசாரம் செய்வதே இதுவே முதன்முறையாகும். இது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நானும், எனது குடும்பமும் எப்போதும் உங்களுடன் இருப்போம். உங்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக காங்கிரஸ் போராடி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- வயநாடு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
- பொதுமக்களை பார்த்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் உற்சாகமாக கைகளை அசைத்தனர்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தபோது ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
அந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
ரேபரேலி தொகுதியில் அவர் மொத்தம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 649 வாக்குகள் பெற்றார். சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று இருந்தார். அதுபோல வயநாடு தொகுதியில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 444 வாக்குகள் பெற்று இருந்தார். அந்த தொகுதியில் அவர் 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆனால் ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி. பதவியில் நீடிக்க முடியும் என்பதால் ராகுல்காந்தி வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் ரேபரேலி தொகுதி எம்.பி. பதவியை தக்க வைத்துக்கொண்டார்.
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியின் கீழ் தற்போது அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 13-ந்தேதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பா.ஜனதா சார்பில் நவ்யா அரிதாஸ், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகின்றனர்.
வயநாடு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி நேற்று கேரளா வந்தார். அவர் மைசூருவில் இருந்து கார் மூலமாக வந்தார்.
அவருடன் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தலைவரான சோனியா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வரோதா, குழந்தைகள் ரைஹான், மராயா ஆகியோரும் வந்தார்கள். அவர்கள் சுப்தான் பத்தேரி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இரவில் தங்கினர். வயநாடு வரும் வழியில் பிரியங்கா காந்தி அவரை வரவேற்க திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
பிரியங்கா இன்று வயநாடு தொகுதியில் உள்ள கல்பெட்டா பகுதியில் தனது சகோதரர் ராகுல்காந்தி எம்.பி.யுடன் ரோடு-ஷோ நடத்தினார். அவருடன் கணவர் ராபர்ட் வரோதா, குழந்தைகள் ரைஹான், மராயா ஆகியோரும் பங்கேற்றனர்.
அவர்கள் கல்பெட்டா பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1.4 கிலோ மீட்டர் தூரம் திறந்தவெளி வாகனத்தில் ரோடு-ஷோ நடத்தினார்கள். அவர்கள் சென்ற சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் உற்சாகமாக கைகளை அசைத்தனர்.
ரோடு-ஷோ நிறைவடைந்த இடத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமின்றி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டம் முடிந்ததும் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு தேர்தல் அதிகாரியிடம் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி முன்னிலையில் பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பிரியங்கா காந்தி இன்று டெல்லிக்கு செல்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்துக்காக அடுத்த வாரம் வயநாட்டிற்கு மீண்டும் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






