என் மலர்tooltip icon

    கேரளா

    • வேட்பு மனுக்கள் வாபஸ் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
    • வயநாடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதியாகி விட்டதால் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால், அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார்.

    வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானது. அதேபோன்று செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இந்தவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக பதிவியேற்றதால் அந்த தொகுதிகளும் காலியாகின.

    இதனால் வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்தமாதம் 18-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி முடிந்தது.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்கள் கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.

    அவர்களுடன் சேர்த்து வயநாடு தொகுதியில் மொத்தம் 21 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 28-ந்தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரியங்கா காந்தி உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    இந்நிலையில் வேட்பு மனுக்கள் வாபஸ் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. அன்றைய தினம் வரை யாரும் மனுவை வாபஸ் பெறவில்லை. இதையடுத்து வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

    அங்கு பிரியங்கா காந்தி, நவ்யா ஹரிதாஸ், சத்யன் மொகேரி உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர். வயநாடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதியாகி விட்டதால் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மண்டல பூஜைக்காக வருகிற 15-ந்தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.
    • சாமி தரிசனம் செய்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக் கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.

    மண்டல பூஜைக்காக வருகிற 15-ந்தேதி மாலை கோவிலின் நடை திறக்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரம மின்றி சபரி மலைக்கு வந்து செல்வதற்கும், அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டு மின்றி, முன்பதிவு செய்யா மல் வரக்கூடிய பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற் கான ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது.

    இந்தநிலையில் சபரி மலை ஐயப்பன் கோவி லில் பதினெட்டாம் படி அருகே உள்ள கல் தூண்கள் அகற்றப்பட உள்ளன. மழை பெய்யும் போது படி பூஜைக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், பதினெட்டாம் படியை பாதுகாக்கவும் பதினெட்டாம் படி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு செதுக்கப்பட்ட கல் தூண்கள் அமைக்கப்பட்டன.

    ஆனால் அந்த தூண்கள் பதினெட்டாம் படி ஏறக் கூடிய பக்தர்கள் மற்றும் படிகளில் பக்தர்கள் ஏறிச்செல்ல உதவுவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள போலீசாருக்கும் மிகவும் இடையூறாக இருந்துவந்தது.

    இதன் காரணமாக பதினெட்டாம் படி பகுதியில் தேவையில்லாத கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

    இதையடுத்து ஆய்வு மேற்கொண்டதில், கல்தூண்கள் பக்தர்கள் செல்வதற்கு தடையாக இருப்பதும், நெரிசல் ஏற்படுவதும் கண்டறியப்பட்டது. இதனால் அந்த கல்தூண்களை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    பதினெட்டாம் படி அருகே உள்ள கல் தூண்களை கட்டிய கட்டுமான கலைஞர்கள் சன்னிதானத்துக்கு வரவழைக்கப்பட்டனர். கல் தூண்களை இடித்து அகற்ற அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கல் தூண்களை இடித்து அகற்றும் பணி உடனடியாக தொடங்கப் பட்டன.

    மண்டல பூஜைக்கு முன்னதாகவே கல்தூண்கள் முழுவதுமாக இடித்து அகற்றப்பட உள்ளது. இதனால் பதினெட்டாம் படி ஏறும் பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கும், பக்தர்கள் படியேறுவதற்கு உதவும் போலீசார் தங்களின் பணியை சரியாக மேற்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.

    • பட்டாசு வெடித்து சிதறியதில் எழுந்த தீப்பிளம்பு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 154 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
    • பட்டாசுகள் வெடித்ததில் விதிமுறைகளை கடைபிடிக்காததே வெடிவிபத்து காரணம் என்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அருகே உள் அஞ்சூற்றம்பலம் பகுதியில் வீரர் காவு கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தெய்யம் என்ற பாரம்பரிய திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்துவந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தெய்யம் ஊர்வலம் நடந்தது. இதில் கலந்துகொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர்.

    ஊர்வலம் தொடங்கிய போது கோவில் வளாகத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது தீப்பொறி பறந்து பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் விழுந்தது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் மொத்தமாக வெடித்து சிதறியது.

    இந்த பயங்கர வெடி விபத்தில் கோவில் திருவிழாவில் பங்கேற்றிருந்த பக்தர்கள் சிக்கினர்.

    பட்டாசு வெடித்து சிதறியதில் எழுந்த தீப்பிளம்பு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 154 பக்தர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள், போலீசார் உள்ளிட்டோர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    அவர்களில் 10 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காசர்கோடு மாவட்ட கலெக்டர் இன்பசேகர், கண்ணூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜ்பால் மீனா, போலீஸ் சூப்பிரண்டு ஷில்பா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    மேலும் வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். பட்டாசுகள் வெடித்ததில் விதிமுறைகளை கடைபிடிக்காததே வெடிவிபத்து காரணம் என்பது தெரியவந்தது. வெடி விபத்து நடந்த இடத்தை மாநில தொழில்துறை மந்திரி ராஜீவ் பார்வையிட்டார்.

    மாவட்ட நிர்வாகம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த வெடிவிபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கேரள மாநில அரசு கூறியுள்ளது.

    இந்நிலையில் இந்த வெடி விபத்து தொடர்பாக நீலேஸ்வரம் போலீசார் வழக்கு பதிந்து கோவில் கமிட்டி தலைவர் சந்திரசேகரன், செயலர் பரதன், பட்டாசுகளை வெடித்த ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். வெடிவிபத்து தொடர்பாக கோவில் கமிட்டி நிர்வாகிகள் பாஸ்கரன், தம்பி, சந்திரன், பாபு, சசி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    • முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்.
    • பக்தர்கள் அமருவதற்காக 1,000 இரும்பு நாற்காலிகள் பொருத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த ஆண்டுக் கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகரவிளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சபரிமலைக்கு வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யாமல் வரக்கூடிய பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. அதற்கான பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவசம்போர்டு மந்திரி வாசவன் கூறியிருப்ப தாவது:-

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் சபரிமலைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்கள் சரிபார்க்கப்படும் போது ஆதார் அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

    அவர்களின் பதிவு எப்படி செய்யப்பட வேண்டும்? என்பதை காவல்துறையும், தேவசம்போர்டும் கூட்டாக முடிவு செய்யும். அது தொடர்பான முடிவு நவம்பர் 10-ந்தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும்.

    பதினெட்டாம்படியில் ஒரு நிமிடத்தில் 70 முதல் 75 பக்தர்கள் வரை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். நிலக்கல்லில் ஒரே நேரத்தில் 15,500 வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். பம்பை வரை சிறிய வாகனங்கள் செல்ல கோர்ட்டின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

    பம்பையில் இருந்து சபரி மலைக்கு ஏறிச்செல்லும் பக்தர்கள் அமருவதற்காக 1,000 இரும்பு நாற்காலிகள் பொருத்தப்படும்.

    மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் மின் கழிப்பறைகள் வசதி செய்யப்படும். யாத்திரை காலங்களில் 13,600 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • கோவில் விழாவை கண்டுகளிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கதர்கள் வளாகத்தில் கூடியிருந்தனர்.
    • பட்டாசு வெடிக்கும்போது மொத்தமாக வைக்கப்பட்ட இடத்தில் தீப்பொறி விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் பகுதியில் வீரராகவர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா மிகவும் பிரபலமாகும். இதில் காசர்கோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழா நடந்து வந்தது. இதையடுத்து நேற்று இரவு பல்வேறு நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    அதனை கண்டுகளிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவு 12:30 மணியளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது பட்டாசுகள் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெடித்து சிதறிய பட்டாசுகளில் இருந்து தெறித்த தீப்பொறிகள் விழுந்தன.

    இதையடுத்து மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த வெடி விபத்தால் கடும் தீப்பிளம்பு ஏற்பட்டது. இதனால் கோவில் வளாகத்தில் திரண்டு நின்ற பக்தர்களின் மீது தீப்பிடித்தது. இந்த விபத்தில் 154 பேர் காயம் அடைந்துள்ளனர். 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த தீ விபத்து செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    காசர்கோடு பட்டாசு வெடிவிபத்தால் 154 பேர் காயம் அடைந்த நிலையில், 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்ற செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் என்னுடைய நினைவும் மற்றும் பிரார்த்தனை காயம் அடைந்தவர்கள் மற்றம் அவர்களுடைய குடும்பத்தினரோடு உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் முழு மனதுடன் ஒன்றுகூடி மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    • கோவில் திருவிழாவின்போது வாணவேடிக்கை நிகழ்ச்சிக்காக பட்டாசுகள் குவிக்கப்பட்டிருந்தது.
    • திடீரென பட்டாசு வெடித்து சிதறியதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் பகுதியில் வீரராகவர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா மிகவும் பிரபலமாகும். இதில் காசர்கோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழா நடந்து வந்தது. இதையடுத்து நேற்று இரவு பல்வேறு நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    அதனை கண்டுகளிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவு 12:30 மணியளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது பட்டாசுகள் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெடித்து சிதறிய பட்டாசுகளில் இருந்து தெறித்த தீப்பொறிகள் விழுந்தன.

    இதையடுத்து மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த வெடி விபத்தால் கடும் தீப்பிளம்பு ஏற்பட்டது. இதனால் கோவில் வளாகத்தில் திரண்டு நின்ற பக்தர்களின் மீது தீப்பிடித்தது.

    இதையடுத்து கோவில் வளாகத்தில் திரண்டு நின்ற பக்தர்கள் அனைவரும் அலறியடித்தபடி நாலா புறமும் சிதறி ஓடினர். தீ விபத்தில் சிக்காமல் இருப்ப தற்காக ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த பயங்கர வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்காயம் அடைந்தனர்.

    அவர்கள் வெடிவிபத்து நடந்த இடத்தில் உடலில் பலத்த தீக்காயங்களுடன் ஆங்காங்கே சிதறிக் கிடந்தனர். இந்த பயங்கர வெடிவிபத்து குறித்து தகவல றிந்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    மேலும் மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீக்காயமடைந்த பக்தர்களை சம்பவ இடத்தில் இருந்து மீட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். வெடிவிபத்தில் மொத்தம் 154 பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.

    அவர்கள் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணங்காடு, நீலேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 10 பேருக்கு மிகவும் அதிக தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

    அவர்கள் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்ததும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    மேலும் வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். வெடிவிபத்து நடந்த கோவிலில் சிறிய ரக பட்டாசுகளை வெடிக்க திட்டமிட்டிருந்தால் போலீசாரிடம் அனுமதி எதுவும் பெறவில்லை என்றும், ஆனால் விதிகளை மீறி அனுமதியில்லாத பெரிய அளவிலான பட்டாசுகளை வெடித்ததாக கூறப்படுகிறது.

    மேலும் பட்டாசுகள் வெடிக்கும்போது, மக்கள் கூட்டம் உள்ள பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் வைத்துதான் வெடிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் அதனை மீறி பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதனால் தான் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெடிவிபத்து நடந்த வீரராகவர் கோவிலில் நேற்று நடந்த விழாவில் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்டதும் அவர்கள் அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது கீழே விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

    மேலும் இந்த வெடி விபத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் காயமடைந்திருக்கின்றனர். பாதுகாப்புக்காக கோவிலுக்கு அருகே உள்ள கட்டிடத்தில் நின்றபோது வெடி விபத்து ஏற்பட்டதால் அவர்கள் அதில் சிக்கி விட்டனர். 

    • பிரியங்காவை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர்.
    • என்னைப் பார்க்க அன்னை தெரசா எனது அறைக்கே வந்தார்.

    கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக நீடிப்பதால் வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம், வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது.

    இதன்படி வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் ராகுலின் தங்கையுமான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதன் மூலம் அவர் முதல் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் கடந்த கடந்த 23-ந் தேதி வயநாடு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

    பிரியங்காவை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று முதல் வயநாட்டில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் பிரியங்கா காந்தி. இன்றும், நாளையும் வயநாட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் வந்தடைந்தார். பின்னர் நீலகிரியில் இருந்து வயநாடு தொகுதி சென்ற பிரியங்கா காந்தி அங்கு ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.

     

    இதனை தொடர்ந்து, சுல்தான்பத்தேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மீனங்காடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வயநாட்டு மக்களை நான் ஏமாற்ற மாட்டேன்; அவர்களுக்காக கடுமையாக உழைப்பேன். வேலையில்லா திண்டாட்டம், நீர் பிரச்சினை உள்ள பல்வேறு பிரச்சனைக்கள் உள்ளன. தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் வயநாட்டு மக்களுடனான எனது தொடர்பு முறிந்துபோகாது.

    பெண்கள், விவசாயிகள், பழங்குடியினரின் தேவைகளை புரிந்து கொள்ள விரும்புகிறேன். தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களை சந்தித்து அவர்களுடன் பேசி, தேவைகளை புரிந்து திட்டங்களை உருவாக்குவேன் என்று தெரிவித்தார். 

    மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது பல்வேறு மக்களோடு நான் பேசினேன். அவர்களில் ஒருவர் ராணுவ வீரர். அவரது வீட்டுக்கு சென்று அவருடன் பேசினேன். அவர் என்னிடம் ஒரு ஜெபமாலையை கொடுத்தார். அதனை நான் எனது அம்மாவிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது எனது கடந்த கால சம்பவம் ஒன்றை நினைவுபடுத்தியது.

    அதனை நான் பொதுவெளியில் பகிர்ந்தது கிடையாது. ஆனால் இப்போது அது பொருத்தமாக இருப்பதால் அதை பகிர்கிறேன். எனக்கு 19 வயது இருக்கும். என் தந்தை இறந்து 6-7 மாதங்களுக்குப் பிறகு, அன்னை தெரசா, என் அம்மாவைச் சந்திக்க எங்கள் வீட்டிற்கு வந்தார்.

    காய்ச்சல் காரணமாக நான் படுக்கை அறையிலேயே இருந்தேன். என்னைப் பார்க்க அன்னை தெரசா எனது அறைக்கே வந்தார். என் தலையில் கை வைத்து ஆசீர்வதித்து ஒரு ஜபமாலையை கொடுத்தார். அப்பா இறந்த சோகத்தாலும், காய்ச்சல் காரணமாகவும் சோர்வுடன் இருந்த என்னை பார்த்து, நீ என்னோடு சேர்ந்து சேவை செய்ய வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    5-6 வருடங்கள் கழித்து டெல்லியில் உள்ள அன்னை தெரசா சேவை இல்லத்தில் பணிபுரிந்தேன்.குழந்தைகளுக்கு ஆங்கிலம், இந்தி சொல்லிக் கொடுப்பேன். சுத்தம் செய்வது, சமைப்பது, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது என பல்வேறு பணிகளைச் செய்தேன். அப்போதுதான் அவர்களின் துயரம், வலி ஆகியவற்றை நான் புரிந்து கொள்ளத் தொடங்கினேன்.

    பாதிக்கப்படும் மக்களுக்கு எவ்வாறு நாம் ஒன்றாக சேர்ந்து உதவ முடியும் என்பதும் புரிந்தது. சமூகமாக சேர்ந்து எப்படி உதவ முடியும் என்பதை கற்றுக்கொண்டேன். வயநாடு நிலக்காரிவின் போது எனது சகோதரர் ராகுல் காந்தியுடன் இங்கு வந்து மக்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் சமூகமாக இனணந்து உதவி செய்வதை பார்த்து அதன்மூலம் நிறைய கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். 

    • கேரளா முதல்வர் பினராயி விஜயன் கான்வாய் விபத்தில் சிக்கியது.
    • ஸ்கூட்டர் திடீரென நின்றதால் விபத்து ஏற்பட்டது.

    திருவனந்தபுரத்தை அடுத்த வாமனபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கான்வாய் விபத்தில் சிக்கியது. அவரது கான்வாய் வாகனங்களுக்கு முன்பு சென்ற ஸ்கூட்டர் திடீரென குறுக்கே சென்றதால் விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக கான்வாயில் ஐந்து வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.

    கான்வாய் வாகனங்கள் முன்பு சென்று கொண்டிருந்த ஸ்கூட்டரை தவிர்க்க முற்பட்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. முதலமைச்சரின் வாகனம் சிறிதளவு சேதம் அடைந்தாலும், முதல்வர் காயமின்றி தப்பித்தார். இதனால் சிறிது நேரம் அவரது பயணம் தடைப்பட்டது. அதன்பிறகு முதல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

    • பிரியங்கா காந்தி முதன்முறையாக தேர்தலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.
    • நீலகிரி வந்த பிரியங்கா காந்தி கல்லூரி மாணவர்களை சந்தித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி முதன்முறையாக தேர்தலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.

    வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் வந்தடைந்தார்.

    நீலகிரி வந்த பிரியங்கா காந்தி கல்லூரி மாணவர்களை சந்தித்தார். அவரை பார்ப்பதற்காக நீண்ட வரிசையில் நின்றிருந்த மாணவர்களிடம் பிரியங்கா காந்தி புன்னகைத்தவாறு கைக்கொடுத்து சென்றார்.

    பின்னர் நீலகிரியில் இருந்து வயநாடு தொகுதி சென்ற பிரியங்கா காந்தி அங்கு ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.

    ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக வருகிற 13-ந்தேதி வயநாட்டிற்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    • மகரவிளக்கு பூஜை முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரம்.
    • மகர விளக்கு பூஜையில் நெரிசலால் பகதர்கள் அவதிப்படாமல் இருக்க நடவடிக்கை.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற டிசம்பர் மாதம் 26-ந்தேதி நடைபெற உளளது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை அடுத்தமாதம் (நவம்பர்) 15-ந்தேதி திறக்கப் படுகிறது.

    சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசனுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மேற்கொண்டு வருகிறது.

    மேலும் கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனில் கூடட நெரிசலால் பகதர்கள் அவதிப்பட்டதை போன்று, நடக்காமல் இருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

    அது தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    தேவசம்போர்டின் டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக இணையதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது விரிவான மாற்றங்களுடன் மண்டல பூஜை காலத்திற்கு முன் அமைக்கப்படும்.

    பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் "வைபை" வசதி செய்வது பரிசீலனையில் உள்ளது. சன்னிதானம், பதினெட்டாம்படி, கோவில் முற்றம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • நிலக்கல், எருமேலியில் கூடுதலாக 4,500 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • மண்டல காலத்தில் 25 லட்சம் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் தினமும் பூஜை நடைபெறும்.

    இந்த சீசனையொட்டி சாமி தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்து கேரள தேவஸ்தான துறை மந்திரி வாசவன் எருமேலி, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் நேரில் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பின்னர் அவர் கோட்டயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடப்பு மண்டல மகர விளக்கு சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, ஐயப்ப பக்தர்களின் தேவைக்கு ஏற்ப அப்பம், அரவணை பிரசாதம் இருப்பு வைக்கப்படும். குறைந்தது 25 லட்சம் டின் அரவணை மற்றும் அப்பம் பாக்கெட்டுகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நிலக்கல், எருமேலியில் கூடுதலாக 4,500 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் 2,500 வாகனங்கள் எருமேலியிலும், 2,000 வாகனங்கள் நிலக்கல் பகுதியிலும் கூடுதலாக நிறுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

    நிலக்கல்லில் மட்டும் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையில் 540 கழிப்பிட வசதி, நிலக்கல்லில் 1,120 கழிப்பிட வசதி செய்யப்பட்டு உள்ளது. மண்டல காலத்தில் 25 லட்சம் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பம்பை, அப்பச்சி மேடு, சன்னிதானம் உள்பட பக்தர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் நடைபாதைகளிலும் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும்.

    சன்னிதானத்தின் பல்வேறு இடங்களில் 1,005 கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. 18 அரங்குகளில் 3,600 பேர் ஓய்வு எடுக்க வசதி செய்து உள்ளோம். நிலக்கல்லில் 7 ஆயிரம் பேர் தங்கி ஓய்வு எடுக்க விசாலமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரை 24 மணி நேரமும் சுக்கு நீர் வழங்க 60 மையங்கள் செயல்படும். சரம் குத்தி முதல் சன்னிதானம் வரை கியூ மண்டபத்தில் காத்து நிற்கும் பக்தர்களுக்கு சுக்கு நீர் வினியோகம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 7 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிக்கிறார்.
    • மற்ற கட்சியினர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவர் கடந்த 23-ந் தேதி தனது சகோதரரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அதன்பிறகு டெல்லி சென்ற அவர், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட நாளை (28-ந்தேதி) வயநாடு வருகிறார். தொகுதியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரியங்கா காந்தி 7 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.

    இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ பயண விவரங்களை வண்டூர் தொகுதி எம்.எல்.ஏ. அனில் குமார் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    வயநாடு பாராளுமன்ற தொகுதியில் மக்களை சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி நாளை (திங்கட்கிழமை) வருகிறார். பகல் 12 மணிக்கு சுல்தான் பத்தேரியில் உள்ள மீனங்காடி பகுதியில் இருந்து அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தொடர்ந்து பனமரம் மானந்தவாடி, கல்பெட்டாவில் வைத்திரி அருகே பொழுதானா பகுதிகளுக்கும் சென்று ஆதரவு திரட்டுகிறார்.

    நாளை மறுநாள் (29-ந் தேதி) காலை 10 மணிக்கு திருவம்பாடியில் எங்கப்புழா பகுதியில் இருந்து அவர் பிரசாரம் தொடங்குகிறார். ஏர்நாடு, வண்டூர், மலப்புரம் என 7 சட்டசபை தொகுதிகளுக்கும் பிரியங்கா காந்தி சென்று மக்களை சந்திக்கிறார். மாலை 5 மணிக்கு நீலம்பூரில் பிரசாரத்தை முடிக்கிறார்.

    தொகுதியில் ஏற்கனவே தொகுதி அளவிலான மாநாடுகளை கட்சியினர் முடித்து விட்டனர். பூத் அளவிலான பணிகள் வெள்ளிக்கிழமைக்குள் முடிவடையும்.

    பிரியங்கா காந்தி தனது 3-வது கட்ட சுற்றுப்பயணத்தின் போது அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வயநாடு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், கம்யூனிஸ்டு வேட்பாளர் சத்யன் மொகேரி ஆகியோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×