என் மலர்
டெல்லி
- 10வது போட்டி டெல்லியில் நடைபெற்றது.
- நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகின்றன. இந்தத் தொடரின் 10வது போட்டியில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி நிதானமாக இன்னிங்ஸை தொடங்கியது. இந்த அணியின் துவக்க வீரரான லௌரென் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஜான் ஃபிரைலிங்க் பொறுப்பாக ஆடி 26 பந்துகளில் 30 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். இவருடன் ஆடிய ஜான் நிகோல் 38 பந்துகளுக்கு 42 ரன்கள் (1 பவுண்டரி, 2 சிக்சர்கள்) எடுத்தார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஜெர்ஹார்டு மற்றும் ஜெ.ஜெ. ஸ்மித் முறையே 18 மற்றும் 22 ரன்களை எடுத்தனர். போட்டி முடிவில் நமீபியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்துள்ளது. நெதர்லாந்து சார்பில் லோகன், பேஸ் டி லீட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆர்யன் தத், ஃபிரெட் கிளாசன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தற்போது நெதர்லாந்து அணி 157 ரன்களை இலக்காக கொண்டு ஆடுகிறது.
- அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.
- ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியிடன் முடிவடைகிறது.
இந்நிலையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீது திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று (பிப்ரவரி 9) உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 3 அன்று, அமைச்சர் பியூஷ் கோயல் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஒப்பந்தத்தின் விரிவான விவரங்கள் அடங்கிய கூட்டு அறிக்கை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 7 அன்று அமைச்சர் பியூஷ் கோயல் பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் அம்சங்களை விளக்கினார்.
பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு.
ஆனால், அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியது நாடாளுமன்ற மரபுகளை மீறிய செயல் என்றும், இது அவையின் உரிமை மீறல் ஆகும் என்றும் திருச்சி சிவா தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஏற்கனவே அவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த உரிமை மீறல் நோட்டீஸை பின்னர் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
சபாநாயகர் பதிலால் அதிருப்தியடைந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த விவகாரத்தை உடனடியாக விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.
- தர்காவில் பக்ரீத், ரலமான் பண்டிகைகள் மட்டுமே தொழுகை நடத்த உயர்நீதிமன்ற அனுமதி உள்ளது.
- அங்கு விலங்குகளை பலியிட கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகே நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள தர்காவில் பக்ரீத், ரலமான் பண்டிகைகள் மட்டுமே தொழுகை நடத்த உயர்நீதிமன்ற அனுமதி உள்ளது.
அனைத்து நாள்களிலும் தொழுகை நடத்த அனுமதி கோரி இமாம் உசேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண், ''நெல்லித்தோப்பு பகுதி இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அங்கு தொழுகை நடத்த அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. தொழுகை நடத்துவதால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதில்லை'' என வாதிட்டார்.
ஆனால்,உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சமநிலையாக உள்ளதாகவும், இதில் தலையிட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், அங்கு விலங்குகளை பலியிட கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.
- டெல்லியிலுள்ள பல பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- பாராளுமன்றவளாகத்தில் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், பாராளுமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
பாராளுமன்றவளாகம் மற்றும் டெல்லியிலுள்ள பல பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பாராளுமன்றவளாகத்தில் காவல் துறையினர் சோதனை நடத்தினர் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.
இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஜப்பானில் நடந்த தேர்தலில் சானே தகைச்சி அபார வெற்றி பெற்றார்.
- அவருக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
ஜப்பான் நாட்டில் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் ஆளும் எல்டிபி கட்சி மெஜாரிட்டியைப் பெற்று சானே தகைச்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.
இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை சானே தகைச்சி பெற்றுள்ளார். அபார வெற்றி பெற்ற சானே தகைச்சிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற சானே தகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தேர்தலில் நீங்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள் சானே தகைச்சி. இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பான மற்றும் உலகளாவிய உறவுகள், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. உங்கள் தலைமை இந்தியா-ஜப்பான் நட்புறவை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என நான் உறுதியாக நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
புதுடெல்லி:
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 118 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட
இளவேனில் வாலறிவன், அர்ஜுன் பாபுடா ஜோடி 505 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றது.
கொரியா ஜோடி வெள்ளியும், ஜப்பான் ஜோடி வெண்கலமும் வென்றன.
- மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
- இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும்.
இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
NTA (National Testing Agency) என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு மே 3-ந்தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் நுழைவுத்தேர்வுக்கு www.neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இளநிலை நீட் நுழைவுத்தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் மே 3-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.
இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
புதுடெல்லி:
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 118 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் அபாரமாக செயல்பட்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றாா்.
ஜப்பானின் நோபடோ மிஸாகி, இந்தியாவின் மேக்னா சஜ்நாா் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா்.
- பீகாரின் பூர்ணியா தொகுதியின் சுயேட்சை எம்.பி.யாக பப்பு யாதவ் உள்ளார்.
- பீகார் போலீசார் பப்பு யாதவை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
புதுடெல்லி:
பப்பு யாதவ் என்ற ராஜேஷ் ரஞ்சன், பீகார் மாநிலத்தின் பூர்ணியா தொகுதியின் சுயேட்சை மக்களவை உறுப்பினராக உள்ளார்.
பீகார் போலீசார் பப்பு யாதவை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். 1995-ம் ஆண்டுக்கு முந்தைய ஒரு நிலத்தகராறு வழக்கு தொடர்பாக போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். பப்பு யாதவுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடந்தது.
இந்நிலையில், பப்பு யாதவ் கைதுக்கு காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்..
இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாட்னாவில் நீட் தேர்வு எழுதவிருந்த ஒரு மாணவி மர்மமான முறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்ததும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும், இந்த ஆட்சியில் உள்ள ஆழமான சீரழிவை வெளிப்படுத்தியது. அந்த மகளுக்கு நீதி கோரி குரல் கொடுத்த பப்பு யாதவ் எம்.பி. கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது ஒரு அரசியல் பழிவாங்கல் செயல் என்பது தெளிவாகத் தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.
- போலீசார் லத்திகளால் அந்த இளைஞர்களைத் தாக்கி, ரத்தம் வழியும் நிலையிலும் தேசிய கீதம் மற்றும் 'வந்தே மாதரம்' பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது பதிவாகியிருந்தது.
- உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இளைஞர் ஃபைசான் உயிரிழந்தார்.
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறியது. கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கலவரத்தின்போது படுகாயமடைந்த ஃபைசான் என்ற 23 வயது இஸ்லாமிய சமூக இளைஞர் உட்பட நான்கு பேரை சாலையில் கிடத்தி வைத்து தேசிய கீதம் பாடச் சொல்லி வற்புறுத்திய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில், போலீசார் லத்திகளால் அந்த இளைஞர்களைத் தாக்கி, ரத்தம் வழியும் நிலையிலும் தேசிய கீதம் மற்றும் 'வந்தே மாதரம்' பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது பதிவாகியிருந்தது.
இதன்பின் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இளைஞர் ஃபைசான் உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஃபைசான் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் எனக் கருதப்படும் 7 காவலர்கள் நேரில் ஆஜராமாகசம்மன் அனுப்பியுள்ளது.
அவர்கள் மீது கடத்தல், முறையற்ற சிறைபிடிப்பு மற்றும் கொலைக் குற்றம் தொடர்பான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் டெல்லி போலீஸாரின் குற்றப்பிரிவு தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிமன்றம், அந்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்கான ஒரு முக்கிய நகர்வாக இந்த நீதிமன்ற உத்தரவு பார்க்கப்படுகிறது.
- மகாராஷ்டிராவை சேர்ந்த உருது கவிஞர் இம்ரான் பிரதாப்கர்ஹி காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம். பி ஆக உள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த உருது கவிஞர் இம்ரான் பிரதாப்கர்ஹி. இவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம். பி ஆக உள்ளார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் மாநிலங்களவையில் இம்ரான் உணர்ச்சிபொங்க உரையாற்றி உள்ளார்.
அவையில் அவர் பேசியதாவது, நாட்டில் சட்டம் என்பது சிலரைத் தேர்ந்தெடுத்து மட்டுமே பாய்கிறது. பரேலியில் தொழுகை நடத்தியவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுகிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தயாரான கிறிஸ்தவர்கள் மீது வழக்குகள் போடப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தின் பெதுல் பகுதியில், மக்களின் எதிர்ப்பையும் மீறி ஒரு பள்ளிவாசல் இடிக்கப்படுகிறது.
வாரணாசியில் நீதிமன்றத் தடை உத்தரவு இருந்தும் இஸ்லாமியர்களின் கடைகள் இடிக்கப்படுகின்றன. 42 முஸ்லிம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற பிறகு, அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்தனர்.
சில மாநிலத் தலைவர்கள் ஜனநாயக நெறிமுறைகளை வெளிப்படையாக மீறி வருகிறார்கள். கலவரத்தை தூண்டுபவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு அமைதிக்கு குரல் கொடுப்பவர்களை குறிவைக்கிறது.
சிறுபான்மையினரை இலக்கு வைப்பதும், நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை ஒடுக்குவதும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.
வரலாறு இந்த அரசாங்கத்தை அதன் கோஷங்களை வைத்து மதிப்பிடாது. எளிய மக்களை அது எவ்வாறு பாதுகாத்தது மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை எவ்வாறு நிலைநாட்டியது என்பதை வைத்தே மதிப்பிடும் என்று பேசிய அவர், இறுதியாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரைக் குறிப்பிட்டு தனது உரையை முடித்தார்.
அதாவது, பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் பெயரை நாடு நினைவில் வைத்திருக்கும் அதே வேளையில், நேரு நினைவுகூரப்படுவார், அதே நேரத்தில் நரேந்திர மோடி எப்ஸ்டீன் கோப்புடன் நினைவுகூரப்படுவார் என்று அவர் கூறினார்.
எப்ஸ்டீன் கோப்புகள்:
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார்.
கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
மேலும் உலக பணக்காரர் பில் கேட்ஸ், ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி அதற்கான மருந்துகளை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம் எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் இடம்பெற்றுள்ளது. ஆனால் இவற்றில் உண்மை இல்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
- எனது நண்பரும் மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் அழைப்பின்பேரில் மலேசியா செல்கிறேன்.
- நமது புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா புறப்பட்டு சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின்போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எனது நண்பரும் மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் அழைப்பின்பேரில் மலேசியா செல்கிறேன்.
அன்வர் இப்ராகிமுடனான பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளுக்கிடையே ஏற்பட போகும் வலுவான உறவை எதிர்பார்த்துள்ளேன்.
இந்தப் பயணம் நமது விரிவான மூலோபாய கூட்டாண்மையை அதிகரிக்கும் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
மலேசியா துடிப்பான இந்திய புலம்பெயர்ந்தோரின் தாயகமாகும். அங்கு நமது புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் மலேசியப் பயணத்தின்போது செமிகண்டக்டர் துறையில் இணைந்து செயல்பட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.






