search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய பகுதிகளை சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
    • சீன ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி தடுக்கவில்லை.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்ரமணிய சாமி தனியார் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இந்திய பகுதிகளைத் தொடர்ந்து சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. சீன ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி தடுக்கவில்லை.

    இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனப்படைகளை ஏற்கனவே நாம் இரு முறை விரட்டியுள்ளோம்.

    நம்மிடம் உள்ள ராணுவ வலிமையால் சீனா ஆக்கிரமித்த பகுதிகளை எளிதில் கைப்பற்றிவிடலாம். ஆனால் பிரதமர் மோடி அதை செய்வதில்லை. காரணம் என்னவென்றால் பிரதமர் மோடியை சீனா பிளாக்மெயில் செய்து வருகிறது.

    சீனா பிரதமர் மோடியை பிளாக்மெயில் செய்வதற்கான காரணத்தை தேர்தலுக்குப் பிறகு வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

    மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வரக்கூடாது என கடந்த மாதம் கருத்து தெரிவித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலரவனுக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தான் பெயர் வைத்தார்.
    • சில மாதங்களாக மலரவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    கோவை:

    கோவை மாநகராட்சி முன்னாள் மேயராகவும், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் மலரவன்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவர் தீபா கட்சியில் இணைந்து செயல்பட்டார். பின்னர் அங்கிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    கடந்த சில மாதங்களாக மலரவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அரசியலில் இருந்து விலகி கோவை கணபதி பாரதிநகரில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று காலை மலரவன் மரணம் அடைந்தார்.

    மலரவனுக்கு இந்த பெயரை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தான் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலரவன் அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் நெருங்கிய பழக்கத்தில் இருந்தவர்.

    • சாதாரண ரெயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
    • ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் விழுப்புரம் மாவட்டம் அரசியலிலும், அரசு உயர் பதவியிலும் பலர் தடம் பதிக்க வைத்த பெருமையை கொண்டுள்ள மாவட்டமாகத்தான் இருக்கிறது.

    அரசு உயர் பதவியிலும், ஒன்றிய, மாநில அரசின் பல சாதனை திட்டங்களிலும் அங்கம் வகித்தவர்கள் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

    சமீபத்தில் உலக நாடுகளே வியந்து பார்க்கக் கூடிய திட்டமான சந்திராயன்-2 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழுப்புரம் பகுதியை சேர்ந்த சாதாரண ரெயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவருக்கு இன்னும் பாராட்டு விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் விழுப்புரம் அருகே ஒரு சாதாரண கிராமத்தை சேர்ந்த இளைஞர், ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    விழுப்புரம் அருகே ராதாபுரம் என்ற சாதாரண கிராமத்தை சேர்ந்த அப்பர்-புனிதா தம்பதியின் மகன் சந்துரு (வயது42) என்பவர் தான் ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    1982-ம் ஆண்டு பிறந்த சந்துரு விழுப்புரம் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து விட்டு பின்னர் காரைக்குடியில் பி.எஸ்.சி. விவசாய பட்டப்படிப்பை முடித்த அவர் தொடர்ந்து டெல்லியில் எம்.எஸ்.சி. அக்ரி, பி.ெஹ.ச்.டி. படிப்பை முடித்துள்ளார்.

    2009 யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதிய சந்துரு 2-வது முயற்சியிலேயே அவருக்கு ஐ.எப்.எஸ். பிரிவில் அயல்நாட்டு பணி வாய்ப்பு கிடைத்தது.

    பணியில் சேர்ந்தது முதல் 2016 வரை ஸ்ரீலங்காவில் இந்தியாவிற்கான தூதராக அலுவலக முக்கிய பொறுப்பில் இருந்தார்.

    அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தூதராக அலுவலகத்திலும், பின்னர் 2020-ம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வகிக்கும் துறையில் அலுவலக தனிச்செயலர் பதவி என முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

    ஜப்பான் நாட்டில் இந்தியாவிற்கான 3 துணைத் தூதரகங்கள் உள்ளன. அதில் ஒன்றான ஓசாகா பகுதி தூதுவராக நியுமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    விழுப்புரம் அருகே சாதாரண கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இந்திய நாட்டின் சார்பில் மிகப் பெரிய பொருளாதார நாடான ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது.

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
    • குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த தமிழ் நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

    கடந்த சில மாதங்களாகவே, தொடர்ச்சியாக அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், 4 மாத கர்ப்பமான நிலையிலேயே வெளியில் தெரியவந்துள்ளது.

    காவல் துறை விசாரணையில், இந்த கொடூரச் செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. தற்போது, நெஞ்சை பதைபதைக்கும் இத்தகு குற்றச் செயல்களைக் கூட சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செய்யத் துணிந்துவிட்டனர் சமூக விரோதிகள்.

    அன்று தன்னை பெண்களின் பாதுகாவலராக அறிவித்து முழங்கிய ஸ்டாலின், தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் இந்த தி.மு.க. ஆட்சியில், தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இத்தகு பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தத் தவறிய தி.மு.க. அரசை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல், ஒரு தந்தை என்கிற அக்கறையுடனே கண்டிக்கிறேன்.

    உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தி.மு.க. உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.
    • அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் வரவேற்றனர்.

    அறிவாலயத்தில் சுமார் 1மணி நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். கழக பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலுவுடன் வடமாநில தேர்தல் நிலவரம் குறித்து விவாதித்தார்.

    இந்தியா கூட்டணிக்கு எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு 'சீட்' கிடைக்கும். வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றியும் ஆலோசித்தார். சுமார் 1 மணி நேரம் அரசியல் நிலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

    தி.மு.க. உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.

    அறிவாலயத்தில் உள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் அறை, முரசொலி மாறன் வளாகம் உள்ளிட்ட பல அறைகள் இடிக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்து விடுவார்கள்.
    • ராமர் மீண்டும் கூடாரத்துக்குச் செல்ல நேரிடுவார் என் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    அயோத்தி தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இது எப்படி சாத்தியம் என்று சிலர் நினைக்கலாம்.

    சுதந்திரப் போராட்டத்தின் போது நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று பேசும்போது, நாட்டைப் பிரிக்கமுடியாது என்று மக்கள் சொன்னார்கள். ஆனாலும் அது நடந்தது. அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களின் சாதனை பதிவு அத்தகையது. அவர்களுக்கு நாடு முக்கியமில்லை. குடும்பம், அதிகாரம்தான் முக்கியம்.

    காங்கிரசும், சமாஜ்வாடியும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்துவிடுவார்கள். காங்கிரஸ் வெற்றி பெற்றால் குழந்தை ராமர் கோவிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும், எங்கு பயன் படுத்தக்கூடாது என்று யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

    தேர்தலில் வெற்றி பெற்று மோடி அரசு ஹாட்ரிக் சாதனை படைக்கும். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கி உள்ளன.

    பா.ஜக-தேசிய ஜனநாயக கூட்டணி தேசிய நலனுக்காக அர்ப்பணித்து உழைக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணி நாட்டில் உறுதியற்ற தன்மையை உருவாக்க களத்தில் உள்ளது.

    புதிய அரசில் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்காக பல முக்கிய முடிவுகளை நான் எடுக்க உள்ளேன். ரேபரேலி மக்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

    இதைக்கேட்ட சமாஜ்வாதி இளவரசரின் (அகிலேஷ் யாதவ்) இதயம் உடைந்தது. கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. ஆனால் அவரது இதயத்தின் ஆசைகள் அனைத்தும் உடைந்துவிட்டன. அகிலேஷ் யாதவ் புதிய அத்தையின் (மம்தா பானர்ஜி) கீழ் அடைக்கலம் அடைந்துள்ளார்.

    இந்த புதிய அத்தை மேற்கு வங்காளத்தில் இருக்கிறார். அவர் (மம்தா பானர்ஜி) இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு தருவேன் என கூறியுள்ளார்.

    உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் காரணமாக தற்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் பரிசுகளைத் தேர்ந்தெடுக்க எனது மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. மாநில இணையதளத்தைப் பார்த்து பரிசு பொருட்களை எடுத்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    • ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என காக்னிசன்ட் தெரிவித்தது.
    • காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    புதுடெல்லி:

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி வலியுறுத்தின. அதன்பின், படிப்படியாக சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்யுமாறு கூறின.

    இந்தியாவிலும் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் அதன் ஊழியர்களை வாரத்தில் சில நாட்கள் வந்து வேலை செய்யும்படியும், மீதி நாட்கள் வீட்டில் இருந்து வேலைசெய்யும்படியும் அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் சில ஐடி நிறுவனங்கள் தன் ஊழியர்களை வாரம் முழுவதும் அலுவலகம் வந்து வேலைசெய்யுமாறு கூறி வருகின்றன.

    இதற்கிடையே, காக்னிசன்ட் நிறுவனம் தனது ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்ய தேவையில்லை. அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கடந்த ஆண்டு தெரிவித்தது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    இந்நிலையில், காக்னிசன்ட் நிறுவனம் ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் எனவும், அப்படி வேலை செய்யவில்லை என்றால் வேலையை விட்டு சென்று விடுங்கள் எனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • அக்டோபர் 1998 இல் கேசோரம் வாரியத்தில் இணைந்த கைதன், தனது தந்தையும் தொழிலதிபருமான பி.கே. பிர்லாவின் மறைவைத் தொடர்ந்து ஜூலை 2019 இல் தலைவர் பொறுப்பை ஏற்றார்.
    • கைதானின் அர்ப்பணிப்பு போர்டுரூமைத் தாண்டி கல்வித் துறைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பி.கே. பிர்லா குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    கேசோரம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், அசோக் ஹால் குழுமத்தின் அறங்காவலருமான மஞ்சுஸ்ரீ கைதான் காலமானதாக பி கே பிர்லா குழுமம் அறிவித்துள்ளது.

    கொல்கத்தாவில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த மஞ்சுஸ்ரீ கைதான் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 68.

    அக்டோபர் 1998 இல் கேசோரம் வாரியத்தில் இணைந்த கைதன், தனது தந்தையும் தொழிலதிபருமான பி.கே. பிர்லாவின் மறைவைத் தொடர்ந்து ஜூலை 2019 இல் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

    கைதானின் அர்ப்பணிப்பு போர்டுரூமைத் தாண்டி கல்வித் துறைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பி.கே. பிர்லா குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அசோக் ஹால் குழும பள்ளிகளுடனான அவரது நான்கு தசாப்த கால தொடர்பு, சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த பெண் குழந்தைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, இளம் மனங்களை வளர்ப்பதில் அவர் அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாக உள்ளது என்று குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, மின் தேவை இந்த வருடம் 3 ஆயிரம் மெகாவாட்டிற்கு கூடுதலாக அதிகரித்து உள்ளது.
    • ஒரே பெயரில் பல இணைப்புகள் வைத்துள்ள வசதி படைத்தவர்களுக்கு தான் இதனால் பாதிப்பு ஏற்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் மின் தேவையை சமாளிக்க தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்கிறது. அனல் மின் நிலையம், நீர் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் மட்டுமின்றி காற்றாலை மூலமும் மின்சாரம் பெறப்படுகிறது.

    அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதால் வாரியத்திற்கு தொடர்ந்து நஷ்டம் அதிகரித்து வருகிறது. இந்த வருடம் கோடை வெயில் மார்ச் மாதமே கொளுத்த தொடங்கி விட்டதால் மின்தேவை அதிகரித்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, மின் தேவை இந்த வருடம் 3 ஆயிரம் மெகாவாட்டிற்கு கூடுதலாக அதிகரித்து உள்ளது. இது மின் வாரியத்திற்கு மேலும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    இழப்பை சரிகட்ட பல்வேறு நடவடிக்கைகளை வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருப்பவர்களால் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு வீதம் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் நிலையில் ஒரே வீட்டில் 2 அல்லது அதற்கு மேல் இணைப்புகள் வைத்துக் கொண்டு மின் கட்டணம் குறைவாக செலுத்தி வருவதை தடுக்க தற்போது கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    அதன் அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் சென்னையில் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர். அவர்களிடம் உள்ள பட்டியலை வைத்து அதில் உள்ள வீடுகளில் சோதனை செய்கிறார்கள். அப்போது ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருப்பதை ஏற்று ஒரே இணைப்பாக மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டால் மற்ற இணைப்புகள் துண்டிக்கப்படும். அதனை ஏற்க மறுப்பவர்களுக்கு 3 இணைப்புகளின் மொத்த யூனிட்டையும் சேர்த்து அதில் 100 யூனிட் கழித்து விட்டு மீதமுள்ள யூனிட்டிற்கு சிலாப்படி எவ்வளவு வருகிறதோ அதனை கணக்கிட்டு பில் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஒரே பெயரில் பல இணைப்புகள் வைத்துள்ள வசதி படைத்தவர்களுக்கு தான் இதனால் பாதிப்பு ஏற்படும். ஏழை, நடுத்தர மக்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை. குறிப்பாக பங்களா வகை வீடு வைத்துள்ளவர்கள் கார்ஷெட், காவலாளி போன்றவற்றிற்கு தனித்தனியாக மின் இணைப்புகள் வைத்திருப்பார்கள்.

    அதனை துண்டித்து ஒரே இணைப்பாக மாற்ற முடிவு செய்துள்ளோம். 500 யூனிட் வரை மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் செல்லும் போது கட்டண விகிதம் மாறுபடுகிறது.

    இதனால் ஒரு சிலர் பல மின் இணைப்புகள் பெற்று வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்கவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பங்களா வீடுகளுக்கு தான் இந்த நடவடிக்கை பொருந்தும். அடுத்த மாதம் முதல் பங்களா வீடுகளுக்கு மின் கட்டணம் உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • சென்னையில் 20 அடி அகலம் 12 அடி உயரம் விளம்பர பலகையின் அதிகபட்ச அளவாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    விளம்பர பேனர்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும்எ ழுந்துள்ளது. மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விளம்பர பேனர் விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையிலும் கடந்த 2019-ம் ஆண்டு விளம்பர பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் பரிதாபமாக இறந்தார். அந்த சம்பவத்தால் விளம்பர பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டும் தடை விதித்ததுடன் தீவிரமாக கண்காணிக்கும் படியும் உத்தரவிட்டது.

    இதனால் கொஞ்சம் குறைந்த விளம்பர பேனர்கள் மீண்டும் அதிகரித்து விட்டன. இது நல்ல வருமானம் கொழிக்கும் தொழிலாக இருப்பதால் பலர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு அதிகாரமட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் செல்வாக்கு இருப்பதால் அவர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்கள எதுவும் முறையான அனுமதி பெறவில்லை.

    மும்பை சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலும் அனுமதி இல்லாத விளம்பர பேனர்களை அகற்றும்படி சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    மாநகராட்சி அனுமதி இல்லாமல் வைக்கப்பட் டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற மண்டல அலுவலகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.



    சாலையோரம், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரிகள், பஸ் நிறுத்தங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சென்னையில் 20 அடி அகலம் 12 அடி உயரம் விளம்பர பலகையின் அதிகபட்ச அளவாக இருக்க வேண்டும். சாலை சிக்னல்களில் விளம்பர பலகை அமைக்கக் கூடாது உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளன.

    விளம்பர பலகை நிறுவ இதுவரை 1,100 விண்ணப்பங்கள் வந்துள்ளது. அதில் 40 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை பரிசீலனையில் உள்ளது.

    கடந்த 2 நாட்களில் அனுமதியின்றியும், உரிய அளவை தாண்டியும் வைக்கப்பட்ட 460 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமண மண்டபத்தின் வாசலில் மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மணமகளின் வருகையை எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர்.
    • வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ஆடம்பர திருமணங்கள் நடைபெறும் போது மணமக்களை விலை உயர்ந்த வாகனங்கள் அல்லது பாரம்பரிய முறைப்படி அழைத்து வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் சமீபகாலமாக மணமக்கள் வித்தியாசமான முறையில் ஊர்வலமாக அழைத்து வரப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது.

    அந்த வகையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் மணப்பெண் ஒருவர் திருமண மண்டபத்துக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், திருமண மண்டபத்தின் வாசலில் மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மணமகளின் வருகையை எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர். அப்போது மணமகள் தன்னந்தனியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து இறங்குகிறார். அவரை ஆரவாரத்துடன் வரவேற்கும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • மேகங்கள் சூழ்ந்து மழை தூறலும் பல பகுதிகளில் காணப்பட்டது.
    • சென்னையில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேகங்கள் சூழ்ந்து மழை தூறலும் பல பகுதிகளில் காணப்பட்டது. இரவிலும் லேசான மழை பெய்து வந்த நிலையில் சென்னையில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.

    தலைமை செயலகம், எழிலகம், அண்ணாசாலை, எழும்பூர், ஆயிரம் விளக்கு, புரசைவாக்கம் உள்ளிட்ட மத்திய சென்னை பகுதியிலும், வட சென்னை பகுதியிலும் மின் தடை ஏற்பட்டது.

    காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டதால் அரசு அலுவலகங்கள் சிறிது நேரம் இருளில் மூழ்கின. பின்னர் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின் வினியோகம் வழங்கப் பட்டது.

    அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறு வனங்களும் இதனால் சிறிது நேரம் பாதிக்கப் பட்டன.

    பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், வியாசர் பாடி, தண்டையார் பேட்டை, வண்ணாரப் பேட்டை, மணலி, அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதால் வீடுகளில் வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வந்தனர்.

    எண்ணூரில் இருந்து மணலி துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வரக்கூடிய மின் வழித்தடத் தில் ஏற்பட்ட தடை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மணலி துணை மின் நிலையத்தில் இருந்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. அங்கு வரக்கூடிய மின்சாரம் தடைப்பட்டதால் பெரும் பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

    இதையடுத்து அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். போர்க்கால வேகத்தில் பழுது சரி பார்க்கப்பட்டதை தொடர்ந்து பகல் 11.30 மணியளவில் படிப்படியாக மின் வினியோகம் சீரானது.

    ×