என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்னையில் 36 விமானங்களின் சேவை ரத்து
- நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
- சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்களும் என் 33 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தங்களது விமான நிலையத்தை மூடிவிட்டது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
நேற்று 2-வது நாளாக சென்னையில் இருந்து வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து துபாய், 3 அபுதாபி, சார்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் செல்லும் 17 புறப்பாடு விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்களும் என் 33 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் 3-வது நாளாக சென்னையில் 36 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு வரும் 18 விமானங்கள், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்தாகி உள்ளன.
3-வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.






