என் மலர்tooltip icon

    இந்தியா

    • தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி அரசு விடுமுறையாகும்.
    • அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகர் ரெயில் சேவை இயக்கப்படும்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திங்கட்கிழமையன்று (மார்ச் 31ஆம் தேதி) புறநகர் ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் வருகிற திங்கட்கிழமை அரசு விடுமுறையாகும்.

    • வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.
    • புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம்.

    திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தான் எங்களது கொள்கை. அதை வைத்துத்தான் கூட்டணிகள் அமைய வேண்டும்.

    வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.

    தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், ஆட்சி பகிர்வு என்ற லட்சியத்தோடு, அந்த குறிக்கோளோடுதான் ஆட்சி மாற்றங்கள் நடைபெற வேண்டும்.

    புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
    • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக உயர்த்தப்படும்.

    டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை 2% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதன் மூலம் அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக உயர்த்தப்படும். எனினும் இந்த அதிகரிப்பானது கடந்த 78 மாதங்களில் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் மிகக் குறைந்த அதிகரிப்பு என கருதப்படுகிறது.

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இதனை சுருக்கமாக டிஏ (Dearness Allowance) என்பார்கள்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும்.

    அதாவது நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அகவிலைப்படி என்பது மாற்றி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.
    • ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

    ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இவற்றுக்கு போட்டியாக பைக், கார் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் "சஹ்கார் டாக்ஸி" (Sahkar Taxi) என்ற புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்சி சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தனியார் நிறுவனங்களைப் போலல்லாமல், இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.

     பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, "சஹ்கார் டாக்சி சேவை வரும் மாதங்களில் தொடங்கப்படும்.

    சஹ்கார் டாக்சியின்கீழ் நாடு முழுவதும் பைக் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார் டாக்சிகளைப் பதிவு செய்யப்படும். இந்த சேவையின் லாபம் எந்த பெரிய தொழிலதிபருக்கும் செல்லாது. மாறாக வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமே செல்லும் என்று தெரிவித்தார். 

    • மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்திருந்தார்.
    • வானூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள அனுமதி.

    காமெடி நடிகரான (Stand-up comedian) குணால் கம்ரா மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவைக்காக அம்மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தார். ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியிருந்தார்.

    இதனால் கோபம் அடைந்த ஏக்நாத் ஷிண்டே கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர். இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கர் காவல்நிலையத்தில் குணால் கம்ராவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவேளை கைது செய்யப்படலாம் என அஞ்சினார்.

    இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றததில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்ய காரணம் என்ன? என் கேள்வி எழுந்தது.

    குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மும்பையில் வசித்து வருகிறார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கியுள்ளது. மனு குறித்து பதில் அளிக்க மும்பை கர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • தாய்லாந்து, மியான்மரில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • மிகப்பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இந்திய நேரப்படி இன்று மதியம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவானதாக கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது. கட்டிடங்கள் சிட்டுக்கட்டு போல் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. முதற்கட்ட தகவலில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதத்தை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்த நிழைலயில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்கு இக்கட்டான சூழலில் இந்தியா துணை நிற்கும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கவலை கொள்கிறேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன்.

    இந்தியா சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது. இது சம்பந்தமாக, எங்கள் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தாய்லாந்தில் உள்ள இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. +66618819218 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

    • தி.மு.க.வில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது வி.சி.க.வை அழித்து வருகிறார்கள்.
    • திமுக - விசிக கூட்டணி குறித்து விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், " ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை எப்படி தி.மு.க.வில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது வி.சி.க.வை அழித்து வருகிறார்கள்" என்றார்.

    திமுக - விசிக கூட்டணி குறித்து விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜூனாவுக்கு வி.சி.க எம்.எல்.ஏசிந்தனைச் செல்வன் பதிலடி கொடுத்துள்ளார்.

    அப்போது அவர், " விசிகவுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.

    • விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்.
    • மருத்துவ உதவிகள் வழங்க உச்சநீதிமன்றம் பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    பஞ்சாப் மாநிலத்தில விவசாயிகளின் தலைவர் ஜெக்ஜித சிங் தல்லேவால், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார். இந்த நிலையில் இன்று தண்ணீர் உட்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என். கோட்டீஸ்வர் சிங் தலைமையிலான பெஞ்ச் முன்பு, பஞ்சாப் மாநில அட்வகேட் ஜெனரல் புர்மிந்தர் சிங், பஞ்சாப் அரசு கனௌரி மற்றும் ஷம்பு எல்லைகளில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தியுள்ளோம். தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டுள்ள எனத் தெரிவித்தார்.

    அப்போது நீதிபதிகள், தல்லேவால் முயற்சிகளை வெகுவாக பாராட்டினர். மேலும், அரசியல் நோக்கம் இல்லாத ஒரு உண்மையான விவசாயிகளின் தலைவர் எனத் தெரிவித்தனர்.

    அத்துடன் "விவசாயிகளின் குறைகளை தீர்க்க சிலர் விரும்பவில்லை என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் ஐவரி டவர் மீது உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. எல்லாம் எங்களுக்கு தெரியும்" என்றனர்.

    மேலும், "களத்தில் நிலவும் நிலைமை குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விவசாயிகள் குறைகளை கவனிக்க குழு அமைக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

    தல்லேவாலுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பஞ்சாப் மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜபி ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவதிப்பு நடவடிக்கையை நீதிமன்றம் கைவிட்டது.

    கடந்த 19-ந்தேதி மத்திய அரசு குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பிய சர்வான் சிங் பந்தேர், தல்லேவால் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தலைவர்களை மொகாலியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அத்துடன் ஷம்பு மற்றும் கனௌரி போராட்டப் பகுதியில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தினர்.

    டெல்லியை நோக்கி விவசாயிகள் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பேரணி செல்ல முடிவு செய்தனர். ஆனால் பாதுகாப்புப்படையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் ஷம்பு மற்றும் கனௌரி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதை வீடியோ பதிவு செய்த அன்சாரி பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
    • இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னை திருமணம் செய்துகொள்ள அப்பெண்ணை அன்சாரி வற்புறுத்தியுள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்ய வற்புறுத்தி மதமாற்றம் செய்ய முயன்றதாக இளைஞர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் சிக்கந்தர்பூர் பகுதியில் ஹர்தியா ஜாமின் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசாத் அன்சாரி (23 வயது).

    இவர் பாலியா பகுதியை சேர்ந்த முதலாமாண்டு பயின்று வரும் 19 வயது கல்லூரி மாணவியை வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி கடந்த டிசம்பர் 17 அன்று ஹோட்டல் அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    அதை வீடியோ பதிவு செய்த அன்சாரி பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் தனது தேர்வு ரிசல்ட்டை பார்க்க சென்றுகொண்டிருந்தபோது அன்சாரி அவரை மிரட்டி மும்பைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னை திருமணம் செய்துகொள்ள அப்பெண்ணை அன்சாரி வற்புறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அப்பெண் உத்தரப் பிரதேச போலீசில் அளித்த புகாரை அடுத்து நேற்று அன்சாரி மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் உத்தரபிரதேச சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பபட்டதாகவும், மருத்தவ அறிக்கையை பொறுத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உ.பி. போலீஸ் தெரிவித்துள்ளது. 

    • 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.
    • நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன் என்றார் விஜய்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.

    இந்நிலையில் விஜய்யின் உரைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை பதிலடி கொடுத்துள்ளார்.

    அப்போது அவர்," திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே போட்டி என்பது விஜயின் பேராசை" என்றார்.

    • டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது.
    • இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது.

    உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    இந்த நிலையில் நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக டெல்லி காவல் நிலையம் வழக்குப்பதிவு (FIR) செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதிகள் அபய் எஜ். ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக தற்போது உத்தரவிட முடியாது. உள்-விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் தலையிட முடியாது. தற்போது உத்தரவிட்டால் முன்னதாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

    மேலும், உள்விசாரணை முடிவடைந்ததும், அனைத்து தகவல்களும் வெளியாகும். தேவைப்பட்டால் தலைமை நீதிபதி வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த முடிவுக்கு நாம் ஏன் இப்போதே செல்ல வேண்டும்? என நீதிபகள் தெரிவித்தனர்.

    • பட்ஜெட் மீது மேயர் தினேஷ்குமார் உரையாற்றினார்.
    • பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கேற்ப மாமன்ற உறுப்பினர்களிள் வேண்டுகோளின் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி குழு தலைவர் கோமதி பட்ஜெட்டை வெளியிட்டார். அதனை மேயர் தினேஷ்குமார் பெற்றுக்கொண்டார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    2025- 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1,522 கோடியே 7 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. செலவினம் 1,517 கோடியே 97 லட்சம். உபரி ரூ.4 கோடியே 10 லட்சம் என நிதி குழு தலைவர் கோமதி தெரிவித்தார்.

    இதன் பின்னர் பட்ஜெட் மீது மேயர் தினேஷ்குமார் உரையாற்றினார். மேலும் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:-

    புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய நீராதாரம் உருவாக்குதல், நீராதாரத்திலிருந்து தலைமை சுத்திகரிப்பு நிலையம் வரை 19.83 கி.மீ. நீளத்திற்கு பிரதான குழாய்கள் அமைத்தல், 196.00 மில்லியன் லிட்டர்கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மாநகர் முழுமை பகுதிக்கும் 144.028 கி.மீ. நீளத்திற்கு நீருந்து குழாய் அமைத்தல், 29 இடங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல், 1192.331 கி.மீ. நீளத்திற்கு குடிநீர் விநியோக குழாய்கள் பதித்தல் ஆகியவற்றில் பெரும்பான்மையான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள்பயன்பாட்டிற்கு நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை 98சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது.

    இப்பணிகள் இவ்வாண்டில் முடிக்கப்பட்டு 3 நாட்கள் இடைவெளியில் குடிநீர் விநியோகம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கேற்ப மாமன்ற உறுப்பினர்களிள் வேண்டுகோளின் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் 544.281 கி.மீ.நீளத்திற்கு கழிவுநீர் சேகரிக்கும் குழாய்கள் அமைத்தல், 9 கழிவு நீரேற்று நிலையங்கள் கட்டுதல், 44.086 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீர் உந்து குழாய்கள் அமைத்தல், 71 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுதல், 62,835 வீட்டு இணைப்புகள் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுவரை 97 சதவீத பணிகள் முடிவுற்றது. இப்பணிகள் இவ்வாண்டில் முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை மண்டலத்துக்கு 2 வார்டு வீதம் பரிசோதனை அடிப்படையில் வீடு தோறும் தரம் பிரித்து வழங்க ஒவ்வொரு வீட்டுக்கும், பச்சை, சிவப்பு வண்ணங்களில் இரண்டு பக்கெட்டுகளை வழங்கிட உள்ளோம். பின்பு மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 249.06 கி.மீ. நீளத்திற்கு ரூ.133.00 கோடி திட்ட மதிப்பீட்டில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். மேலும் 18.18 கோடி மதிப்பீட்டில் 26.53 கி.மீ. நீளத்திற்கு மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்றியமைக்கப்படும். பழுதடைந்துள்ள கான்கிரீட் சாலைகள் 90.00 கி.மீ. நீளத்திற்கு ரூ.30.00 கோடி திட்ட மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளாலும், இயற்கை சீற்றம் போன்ற நிகழ்வுகளால் சேதம் ஏற்பட்டுள்ள சாலைகள் ரூ.7கோடி மதிப்பீட்டில் பழுது நீக்கப்படும். அவினாசி ரோடுமேம்பாலம் முதல் நல்லாத்துப்பாளையம் கேட் தோட்டம் வரையிலான பகுதிகளில் புதிய இணைப்பு சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, உரிய அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×