என் மலர்
பொது மருத்துவம்
- பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன.
- வயிறு வீக்கம், வாயு தொல்லையை குறைப்பதற்கு பெருஞ்சீரகம் உதவும்.
ஓட்டல்களில் சாப்பாடோ, பிரியாணியோ சாப்பிட்டு முடித்ததும் பில் தொகை செலுத்தும் இடத்தில் ஒரு கிண்ணத்தில் பெருஞ்சீரகம் வைக்கப்பட்டிருக்கும். அது இனிப்பு கலந்து வெள்ளை நிறத்திலோ அல்லது எதுவும் சேர்க்கப்படாமல் பச்சை நிறத்திலோ காட்சியளிக்கும். அதனை சிறிது எடுத்து மெல்லும் வழக்கத்தை பலரும் பின்பற்றுவார்கள். அவை என்னென்ன நன்மைகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.
வாய்க்கு புத்துணர்ச்சி அளிக்கும்
பெருஞ்சீரகம் இயற்கையாகவே இனிமையான, புத்துணர்ச்சியூட்டும் சுவையை கொண்டது. வாய் துர்நாற்றத்தை எதிர்த்து போராடக்கூடியது. ரசாயன அடிப்படையிலான வாய் புத்துணர்ச்சியூட்டும் பொருட்களை போல் அல்லாமல், பெருஞ்சீரகம் சுவாசத்திற்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும்.
ஹார்மோன் சம நிலைக்கு உதவும்
பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. அவை ஈஸ்ட்ரோஜனை பிரதிபலிக்கும் தாவர அடிப்படையிலான சேர்மங்கள். குறிப்பாக மாதவிடாய் கோளாறுகள், வயிறு வீக்கம் மற்றும் மனக்குழப்பத்தை கையாளும் பெண்களுக்கு இது உதவியாக இருக்கும்.
உடல் எடையை நிர்வகிக்கும்
பெருஞ்சீரகத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது பசி உணர்வை போக்கி முழுதாகவும், திருப்தியாகவும் உணர வைக்கும். உணவு உட்கொண்ட பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவது தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை குறைத்து காலப்போக்கில் உடல் எடையை நிர்வகிக்க உதவும்.
செரிமானத்தை மேம்படுத்தும்
அனெத்தோல், பென்சோன் மற்றும் எஸ்ட்ராகோல் போன்ற ஆவியாகும் எண்ணெய்கள் பெருஞ்சீரகத்தில் உள்ளன. அவை செரிமான நொதிகளை தூண்டி, ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கும், செரிமானத்தை விரைவுபடுத்துவதற்கும் உதவும். குறிப்பாக அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொண்டாலோ பெருஞ்சீரகம் மெல்வது நல்ல பலனை தரும்.
வீக்கம் மற்றும் வாயு தொல்லையை குறைக்கும்
வயிறு வீக்கம், வாயு தொல்லையை குறைப்பதற்கு பெருஞ்சீரகம் உதவும். அதிலிருக்கும் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் பண்புகள் குடலில் உள்ள தசைகளை தளர்த்தவும், பிடிப்புகள் மற்றும் வாயு தொந்தரவை குறைக்கவும் உதவும். உணவு உட்கொண்ட பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவதன் மூலம் அந்த சங்கடமான நிலைமையை தவிர்க்க முடியும்.
எவ்வளவு உட்கொள்ள வேண்டும்?
உணவு உட்கொண்ட பிறகு அரை டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடலாம். பெருஞ்சீரகம் ஆரோக்கியத்திற்கு உகந்ததுதான் என்றாலும் ஏதேனும் உடல்நல பிரச்சினைகளை கொண்டிருந்தாலோ, மருந்து, மாத்திரைகள் உட்கொண்டிருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பெருஞ்சீரகத்தை உணவுக்கு பிறகு மெல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
எது நல்லது?
பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் பெருஞ்சீரகத்தை உட்கொள்வதே சிறந்தது. சர்க்கரை பாகு கலந்து வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும் பெருஞ்சீரகமும் செரிமானத்திற்கும், வாய் புத்துணர்ச்சிக்கும் உதவும் என்றாலும் அதிலிருக்கும் இனிப்பு கலோரிகளை அதிகரிக்க செய்யும். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும். ஊட்டச்சத்துக்களின் செறிவை நீர்த்து போகச்செய்யும். உடல் பருமன், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினை இருப்பவர்கள் இனிப்பு பெருஞ்சீரகத்தை தவிர்க்க வேண்டும்.
- குளோரின் அணுக்கள் இணைந்து குளோரின் வாயுவை உருவாக்குகின்றன.
- காய்கறிகள், மீன், இறைச்சி ஆகியவற்றை பதப்படுத்த உப்பு சேர்க்கப்படுகிறது.
இயற்கையில் பல்வேறு தனிமங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சோடியம் என்ற தனிமத்தின் அணுக்கள் இணைந்து சோடியம் என்ற தனிமத்தை உருவாக்குகின்றன, இது ஒரு மென்மையான, வெள்ளை நிற உலோக வகை தனிமம் ஆகும். இது காற்றில் தீவிரமாக எரியும் இயல்பு கொண்டது. அத்துடன் தண்ணீருடன் கலக்கும் போது வெடிக்கும் தன்மை கொண்டது.
குளோரின் அணுக்கள் இணைந்து குளோரின் வாயுவை உருவாக்குகின்றன. இது மஞ்சள்-பச்சை நிறத்தில் காணப்படும் ஒரு வாயு, உலோகங்களை அரிக்கும் தன்மை கொண்டது. மேலும், விலங்குகள், தாவரங்கள் இதனை நுகர்ந்தால் நஞ்சாக மாறும், மிகவும் நச்சுத் தன்மையுடையது.
இயற்கையின் விதியில், சோடியம் என்ற வெடிக்கும் தனிமம், நச்சுத்தன்மை கொண்ட குளோரின் என்ற இரண்டு தனிமங்கள் இணையும் போது, அவை இரண்டும் தங்கள் தீவிர தன்மையை இழந்து மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு உப்பை உருவாக்குகின்றன. அதுவே சோடியம் குளோரைடு எனப்படும் சமையல் உப்பு ஆகும். உணவு தயாரிப்பில் பெருமளவு சமையல் உப்பு பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகள், மீன், இறைச்சி ஆகியவற்றை பதப்படுத்த உப்பு சேர்க்கப்படுகிறது. கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
உப்பு பல நேர்மறையான பண்புகளை கொண்டதாக இருந்த போதிலும், அதிக அளவில் சேர்க்கப்படும் உப்பு, கோழிகள், நாய்கள், பூனைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
பெரியவர்களுக்கு சோடியம் உப்பு தினசரி உட்கொள்ளல் அளவு 2,300 மி.கி.க்கும் குறைவாகவும், உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 500 மி.கி. என்ற சிறிய அளவு மட்டுமே தேவைப்படுகிறது. அதிக உப்பு உடலுக்கு ஆபத்து என்கின்றனர்.
- இரண்டு ரம்புட்டான் பழங்களை உட்கொள்வதன் மூலம் தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
- வழுவழுப்பான இந்த பழத்தை குழந்தைகள் சாப்பிடும் பொழுது தொண்டையில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
ரம்புட்டான், ஒரு சுவையான மற்றும் சத்தான பழம். இது மருத்துவ ரீதியாகவும் பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பழத்தின் வெளித்தோற்றம் முள் போன்று கரடுமுரடாக இருந்தாலும், உள்ளே இருக்கும் பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து ருசியாகவே இருக்கும். இந்த பழத்தின் தாயகம் மலேசியா மற்றும் இந்தோனேஷியா. தமிழ்நாட்டிலும் குறிப்பிட்ட பகுதிகளில் விளைகிறது. ரம்புட்டான் பழம், காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும், பழுத்த பிறகு சிவப்பு அல்லது மஞ்சள் நிறமாகவும் மாறும்.
ரம்புட்டான் பழத்தில் கலோரி, வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் பருமனால் அவதிப்படுவோர், ரம்புட்டானை அடிக்கடி சாப்பிடலாம். இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதையும் தடுக்கும். இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள், உடல் உழைப்புக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவும். உடல் சீரான வளர்ச்சி பெறவும் முக்கிய பங்காற்றும். ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கண் ஆரோக்கியத்தையும் காக்கும். உடலில் கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கவும் செய்யும். இதனால், மாரடைப்பு அபாயம் குறைகிறது.

ரம்புட்டான் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால், தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் பளபளப்புடன் இருக்கும். எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவக்கூடிய கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் இதில் உள்ளன. இரண்டு ரம்புட்டான் பழங்களை உட்கொள்வதன் மூலம் தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதில் பாஸ்பரஸ் இருப்பதால் சிறுநீரகத்தில் இருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும். மேலும் திசுக்கள் மற்றும் உடல் உயிரணுக்களின் வளர்ச்சி, புத்துணர்ச்சி மற்றும் பராமரிப்பு போன்ற செயல்களில் இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ரம்புட்டானில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. அதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். அதிகமாக சாப்பிட தோன்றும் எண்ணத்தையும் குறைத்துவிடும். இந்த பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து தண்ணீரில் கரைந்து குடலில் ஜெல் போன்ற ஒரு பொருளை உருவாக்குகிறது. இந்த ஜெல் போன்ற பொருள் செரிமானத்தையும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதையும் மெதுவாக்க உதவுகிறது, இதனால் பசி உணர்வு குறைகிறது.
இந்த பழம், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி தான் சாப்பிட வேண்டும். வழுவழுப்பான இந்த பழத்தை குழந்தைகள் சாப்பிடும் பொழுது தொண்டையில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கவனத்துடன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
- ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்குள் இருப்பதே சிறந்தது.
- ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவ கட்டுக்கோப்பான உணவு பழக்கத்துடன் உடலளவில் சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டும்.
அமெரிக்க இதய சங்கம் மற்றும் அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி ஆகியவை இணைந்து இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. அதன் முக்கிய சாராம்சங்கள் குறித்து பார்ப்போம்.
ஆபத்து
இதய செயலிழப்பு, கரோனரி தமனி நோய், இதயத்தின் மேல் அறைகள் (ஏட்ரியா) ஒழுங்கற்றதாகவும், வேகமாகவும் துடிப்பதால் ஏற்படும் பாதிப்பான ஏட்ரியல் பைப்ரிலேஷன் உள்ளிட்ட இதயம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பக்கவாதம் ஏற்பட உயர்ரத்த அழுத்தமே காரணமாக இருக்கிறது. அதுவே இதயத்துக்கு மிகப்பெரிய ஆபத்து காரணியாக இருக்கிறது என்று அமெரிக்க இதய சங்கம் கூறுகிறது.
அவசர சிகிச்சை
ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்குள் இருப்பதே சிறந்தது. இந்த அளவை விட கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம். மார்பு வலி, மூச்சுத்திணறல், முதுகுவலி, உணர்வின்மை, பலவீனம், பார்வை திறனில் மாற்றம், பேசுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அவசர சிகிச்சை மிகவும் முக்கியமானது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும்.
வழக்கமான பரிசோதனை
ஒவ்வொருவரும் ரத்த அழுத்தத்தை தவறாமல் சரிபார்க்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த பரிசோதனை செய்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
உணவு
பெரியவர்கள் தினமும் 2,300 மி.கி. சோடியம் (சுமார் ஒரு டீஸ்பூன் உப்பு) அல்லது அதற்கும் குறைவான அளவையே உணவு மூலம் உட்கொள்ள வேண்டும். 1,500 மி.கி. என்ற அளவுக்கு படிப்படியாக உப்பின் பயன்பாட்டை குறைத்துக்கொள்வது சிறந்தது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான எண்ணெய்கள் போன்ற இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுத்திட்டத்தை பின்பற்ற வேண்டும். உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க அல்லது குறைக்க மதுப்பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
உடல் எடை
உடல் பருமன் கொண்டவர்களாக இருந்தால், உங்கள் உடல் எடையில் 5 சதவீதம் குறைப்பது கூட உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் அல்லது தடுப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் எடையை 5 சதவீதம் குறைப்பது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அது ரத்த அழுத்தம் மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
உடல் செயல்பாடு
ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவ கட்டுக்கோப்பான உணவு பழக்கத்துடன் உடலளவில் சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டும். தியானம், சுவாச பயிற்சி, யோகா உள்ளிட்ட மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்பாடுகளிலும் கவனம் பதிக்க வேண்டும்.
- ஏலக்காயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்து போராடும்.
- மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும்.
இரவு உணவை உட்கொண்ட பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடும் வழக்கத்தை தொடர்ந்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். அவற்றுள் முக்கியமான சில நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
செரிமானத்திற்கு உதவும்
ஏலக்காய் செரிமான நொதிகளை தூண்டக்கூடியது. வயிறு வீக்கம், அசிடிட்டி மற்றும் வாயுத்தொல்லையை குறைக்கக்கூடியது. இரவு உணவு உட்கொண்ட பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்று பிரச்சினைகளுக்கு சிறந்த இயற்கை தீர்வாகவும் அமையும்.
சுவாசத்தை புத்துணர்ச்சியாக்கும்
ஏலக்காயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்து போராடும். அதனால் வாய் துர்நாற்றத்தை போக்கி புத்துணர்ச்சியான சுவாசத்தை அளிக்கும். வாய் சுகாதாரத்தை பராமரிக்க செயற்கை புத்துணர்ச்சியூட்டும் பொருட்கள் அல்லது சூயிங்கம் உபயோகிப்பதற்கு இயற்கையான மாற்றாக ஏலக்காய் அமையும்.
தூக்கத்தை ஊக்குவிக்கும்
ஏலக்காயில் இருக்கும் சேர்மங்கள் நரம்புகளை தளர்த்த உதவும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும். தூக்க தரத்தை மேம்படுத்துவதற்கும், அமைதியான இரவிற்கும் பங்களிக்கும்.
நச்சுகளை வெளியேற்றும்
ஏலக்காயில் இருக்கும் டையூரிடிக் பண்புகள் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை வெளியேற்றவும், சிறுநீரகங்களை சுத்தப்படுத்தவும் துணைபுரியும். கல்லீரல் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த ஏலக்காய், உடலில் கொழுப்பு அளவை குறைப்பதன் மூலமும், ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை மேம்படுத்தும். இதய ஆரோக்கியத்திற்கும் பலம் சேர்க்கும்.
ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும்
ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த பொருளான ஏலக்காய், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இது நீரிழிவு நோயாளிகள் அல்லது குளுக்கோஸ் அளவை நிலையாக பராமரிக்க விரும்புவோருக்கு நன்மை பயக்கும்.
நெஞ்செரிச்சலை குறைக்கும்
ஏலக்காயில் இருக்கும் காரத்தன்மை வயிற்று அமிலங்களை நடுநிலையாக்க உதவும். அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை குறைக்கும். குறிப்பாக இரவு உணவு உட்கொண்ட பிறகு ஏற்படும் அசவுகரியத்தில் இருந்து விரைவாக நிவாரணம் அளிக்கும். தொண்டையில் சளி படிவதையும் தடுக்கும். தொண்டை புண்ணை ஆற்றும். இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாச கஷ்டங்களை தடுப்பதிலும் பயனுள்ளதாக அமையும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்
வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, கலோரி எரிப்பை ஊக்குவிக்கும் ஆற்றலும் ஏலக்காய்க்கு உண்டு. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுத்து உடல் எடையை சீராக நிர்வகிக்கவும் உதவிடும்.
- முடவாட்டுக்காலை ஆட்டுக்கால் சூப் செய்வது போன்று சூப் சமைத்து பருகலாம்.
- ஒரே இடத்தில் முடங்கியவர்களை எழுந்து நடக்க வைக்கும் அருமருந்து என்றும் சொல்லப்படுகிறது.
முடவாட்டுக்கால் கிழங்கு செடிகள் தமிழகத்தில் பெரும்பாலும் கொல்லிமலை, சேர்வராயன் மலை, குற்றாலம் மற்றும் குமரி மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றன. இந்த செடிகள் ஈரபதம் உள்ள நிலங்கள், பாறைக்கட்டுகள், மரங்களில் பற்றிப்படர்ந்து வளரும் பெரணி வகை செடிகளாகும். இதன் கிழங்கு ரோமங்கள் அடர்ந்த ஆடுகளின் கால் போல் இருப்பதால் இதனை ஆட்டுக்கால், முடவாட்டுக்கால் என்று கூறுகின்றனர்.
குறிப்பாக இதன் மருத்துவக்குணம் காரணமாக சைவ ஆட்டுக்கால் என்றும் கூறுகின்றனர்.
இந்த கிழங்கில் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பதாக சித்த மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் கூறுகிறது. குறிப்பாக எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான மூட்டு வலி, முடக்குவாதம், எலும்பு அடர்த்தி குறைபாடு உள்ளவர்களுக்கு இது மருந்தாக அமைகிறது என்றும், ஒரே இடத்தில் முடங்கியவர்களை எழுந்து நடக்க வைக்கும் அருமருந்து என்றும் சொல்லப்படுகிறது.
இந்த வகை கிழங்குகள் இரும்பு, கால்சியம், செம்பு, தங்கம், மற்றும் சிலிக்கா போன்ற கனிமச்சத்துக்களை பாறைகளில் இருந்து உறிஞ்சி எடுப்பதால் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதாக கூறுகின்றனர். முடவாட்டுக்காலை ஆட்டுக்கால் சூப் செய்வது போன்று சூப் சமைத்து பருகலாம். மேலும் இதனை உலர வைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம். இது செரிமானத்தை மேம்படுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது என்றும் கூறப்படுகிறது.
அதே வேளையில் முடவாட்டுக்கால் கிழங்கை அதிகமாகப் பயன்படுத்துவது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஒவ்வாமை, தோலில் அரிப்பு, வீக்கம், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம். எனவே இதனை மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பயன்படுத்துவது நல்லது.
- ஒரு ஏலக்காய், அதிமதுரம் அரை துண்டு, ஏழு மிளகு இவை மூன்றையும் உரலில் இடித்து சேர்க்கவும்.
- குழந்தைகளுக்கு பால் சங்கில் பாதி அளவு இக்கசாயமும் பாதி அளவு தேனும் கலந்து கொடுக்கலாம்.
பருவநிலையில் மாற்றம் ஏற்படும்போது சிலருக்கு காய்ச்சலும், ஜலதோஷமும் ஏற்படுவதுண்டு. ஒரு டம்ளர் தண்ணீரை சிறு தீயில் கொதிக்கவைத்து அதில் கற்பூரவல்லி இலை ஐந்து, அரச இலை (கொழுந்து) மூன்று, துளசி இலைகள் ஆறு சேர்க்க வேண்டும்.
ஒரு ஏலக்காய், அதிமதுரம் அரை துண்டு, ஏழு மிளகு இவை மூன்றையும் உரலில் இடித்து அதையும் அவற்றுடன் கலந்து அரை டம்ளர் வரும் வரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும். ஆறிய பின்னர் இதை குழந்தை முதல் முதியவர் வரை குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு பால் சங்கில் பாதி அளவு இக்கசாயமும் பாதி அளவு தேனும் கலந்து கொடுக்கலாம். பெரியவர்கள் அப்படியே அருந்தலாம்.
இக்கசாயத்தை மூன்று வேளையும் எடுத்துக்கொள்ளலாம். குணமாகாத பட்சத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியமானது.
- வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும்.
- வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.
வாழைப்பழம் ஊட்டச்சத்துமிக்கதாகவே இருந்தாலும் அதனை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான நபர் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. ஏனெனில் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அதிகமாகவே உள்ளன. உடல் எடை அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை தவிர்க்க மிதமான அளவு சாப்பிடுவதே முக்கியமானது. அதனை அதிகமாக சாப்பிடும்போது அதில் இருக்கும் நார்ச்சத்து காரணமாக வயிறு உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
* வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். இதயம் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்காது.
* புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கிறீர்களா? வாழைப்பழங்கள் உதவும். அதிலிருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையானது நிக்கோடின் ஏற்படுத்தும் ஏக்கங்களை குறைக்க உதவும்.
* வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.
* மன அழுத்தமாகவோ, சோகமாகவோ உணர்கிறீர்களா? வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, செரோடோனின் மற்றும் டோபமைன் என்ற நல்ல ரசாயனங்களை உற்பத்தி செய்ய மூளையை ஊக்கப்படுத்தும். எனவே பரபரப்பாக இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடுவது மனதை அமைதிப்படுத்தவும், கடினமான தருணங்களை நிர்வகிக்கவும் உதவிடும்.
* பகலில் சோர்வாக உணர்ந்தால், உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கலாம். வாழைப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து உடலில் அதிக ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும். ரத்த சோகையை எதிர்த்து போராடவும் வித்திடும்.
- இரவு உறங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தவறான பழக்கமாகும்.
- கண்களில் வறட்சி, வலி, கார்னியா பாதிப்பு, பார்வை குறைபாடு போன்றவை இதனால் ஏற்படக் கூடும்.
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் இன்றியமையாத ஒன்றாக அமைந்துவிட்டது. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நெருக்கமான அனைவரிடமும் வாட்ஸ்அப் உரையாடலில் தொடங்கி, செய்திகளை தெரிந்து கொள்வது, நொடிக்கு நொடி தகவல்களை வழங்குவது, வங்கியில் பணம் பரிவர்த்தனை செய்வது என அனைத்துக்கும் செல்போனை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். ஆனால், அத்தகைய செல்போனுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கவேண்டும். இல்லையென்றால், நம் உடல் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும்.
* மன அழுத்தம்
நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனால் தேவையற்ற மன அழுத்தம், தசைகளில் பாதிப்பு நரம்புகளில் பிரச்சனைகள் ஏற்படலாம். செல்போன் பழக்கம் நீடித்துக் கொண்டே சென்றால் நம்மை மன நோய்க்கு ஆளாக்கி விடும். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு இடையே சீரான அளவில் இடைவெளி எடுத்துக் கொண்டு அளவோடு மொபைல் போன் பயன்படுத்துவது இது போன்ற கடுமையான பாதிப்புகளை களைய உதவும்.
* உறக்கமின்மை
இரவு உறங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தவறான பழக்கமாகும். இரவு நேரங்களில் செல்போனில் இருந்து வெளிப்படும் நீல வெளிச்சம் காரணமாக தூக்கம் கெடுவதோடு உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற பலவித உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். முடிந்த அளவு, இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும்.
* பார்வை குறைபாடுகள்
செல்போனிலிருந்து வரும் நீல வெளிச்சம் எனப்படும் ஒளிக்கதிர்கள் நம்முடைய கண்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. கண்களில் வறட்சி, வலி, கார்னியா பாதிப்பு, பார்வை குறைபாடு போன்றவை இதனால் ஏற்படக் கூடும். எந்த அளவிற்கு மொபைல் போன் பயன்படுத்துவதை நாம் குறைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய கண்கள் பாதுகாக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
* கூன் விழும் அபாயம்
நம்மில் பலர் செல்போனை பயன்படுத்தும்போது குனிந்த நிலையிலேயே அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறோம். இதனால் முதுகுவலி மற்றும் கழுத்துவலி அதிகம் ஏற்படும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் கூன் முதுகு விழுந்துவிடும். மேலும், இந்த பாதிப்பை சரி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். இதனை தவிர்க்க கழுத்து பகுதியை வலுவாக்கும் உடற்பயிற்சிகளோடு சரியான அளவு ஓய்வும் வேண்டும்.
* காது கேட்கும் திறன் இழப்பு
சிலர் ஹெட்போனில் பாடல் கேட்கும் பொழுது அதிக சவுண்ட் வைத்து பயன்படுத்துவார்கள். இதனால் 30 முதல் 40 வயதிலேயே காது கேட்கும் திறனை படிப்படியாக இழக்க நேரிடும். எனவே ஹெட்போன் பயன்படுத்தும் பொழுது ஒலி அளவை 50 சதவீதம் குறைத்து பயன்படுத்துங்கள். பாதிப்புகள் ஏற்படாது.
சில டிப்ஸ்...
* ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை குறைக்க இரவில் தூங்கும் போது அதனை உங்களிடமிருந்து விலக்கி வைக்க பழகுங்கள்.
* ஸ்மார்ட்போன் பழக்கத்தை குறைக்க இணையத்தை எப்போதும் ஆன் செய்து வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
* காலை எழுந்தவுடன் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன் முகத்தில் தான் கண் விழிக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் காலை தூங்கி எழுந்ததில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு போனை கையில் எடுக்காமல் இருக்க பழகிக் கொள்ளலாம்.
* குடும்பம், புத்தகம், வாசிப்பு, சினிமா, நண்பர்கள் என்று நம்முடைய பொழுதுபோக்குகளை மாற்றம் செய்து கொள்வது சிறந்தது.
- உடலால் உறிஞ்சப்படும் கலோரிகள் எண்ணிக்கையை குறைக்கும்.
- தேங்காய் எண்ணெயை சேர்த்து அரிசியை சூடுபடுத்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க வேதியியல் சங்கம் ஒரு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதில், கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு அரிசியை சமைத்தால் அது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த உதவும். உடலால் உறிஞ்சப்படும் கலோரிகள் எண்ணிக்கையை குறைக்கும் என ஆராய்ந்து கூறினர்.
மேலும், இந்த செயல்முறை காரணமாக அரிசியில் உள்ள மாவுச்சத்து உடலால் உறிஞ்சப்படுவது கணிசமாக தடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெயை சேர்த்து அரிசியை சூடுபடுத்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, உண்பதற்கு சுவையாகவும், அதே வேளையில் ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளதாகவும் இருக்கும் எனவும் அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்க வேதியியல் சங்கம் இந்த ஆய்வு அறிக்கையை பொதுவெளியில் சமர்ப்பிக்கவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. ஆனால், வேறு சில ஆய்வாளர்கள், இந்த முறையில் அரிசி கலோரியை கொண்டுள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.
- பலவகை சத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளது தான் கறிவேப்பிலை.
- கறிவேப்பிலையை நீண்டநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவுபெறும்.
கீரைகள் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கறிவேப்பிலை மிகவும் முக்கியமானது.
உணவில் தாளித்து சாப்பிடும் போது தூக்கி எறிந்திடுவோம். அப்படி புறக்கணிக்கப்படும் கறிவேப்பிலையின் சத்துகள் குறித்து நம் மனதில் பதிய வைத்துவிட்டால் தூக்கி எறிய மனம் வராது. பலவகை சத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளது தான் கறிவேப்பிலை. அதாவது இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் ஆகியவை உள்ளன.
மேலும் கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போ ஹைட்ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் நார்ச்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவையும் அடங்கி உள்ளது.
கறிவேப்பிலையை நீண்டநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவுபெறும். பசியின்மை, செரிமான பிரச்சினை, வயிற்று இரைச்சல், தொண்டைக் கமறல் சரியாகும். நீரிழிவு நோயாளிகள் தலா 10 கறிவேப்பிலையை காலை, மாலை நேரத்தில் மென்று சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். உடல் பருமன் குறைந்து உடல் வலிமை அதிகரிக்கும்.
கறிவேப்பிலையை நன்றாக சுத்தம் செய்து அரைத்து ஒரு எலுமிச்சம்பழம் அளவுக்கு எடுத்துக்கொண்டு தயிரில் கரைத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி நின்றுவிடும்.
- சூடான பால் மூலநோயுடன் தொடர்புடைய அசவுரியத்தை குறைக்கக்கூடும்.
- நார்ச்சத்து மற்றும் திரவங்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கத்தை பின்பற்றுவதும் முக்கியமானது.
தினமும் இரவில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு பால் அருந்தும் வழக்கத்தை தொடருவதன் மூலம் மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம். வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், மலச்சிக்கலை தடுப்பதற்கும் உதவும்.
சூடான பால் மூலநோயுடன் தொடர்புடைய அசவுரியத்தை குறைக்கக்கூடும். இருப்பினும் நார்ச்சத்து மற்றும் திரவங்கள் நிறைந்த சீரான உணவுப்பழக்கத்தை பின்பற்றுவதும் முக்கியமானது.
மலச்சிக்கலுடன் வயிற்றுவலி இருந்தால், கடுக்காய்த் தூளுடன் சிறிது இஞ்சியை கலந்து உட்கொள்ள வயிற்று வலி குணமடையும். மாமரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்துத் தேன் கலந்து குடித்து வர ரத்த பேதி நிற்கும்.






