என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயர்போன்"

    • வயர் அசவுகரியமாக தெரிந்ததால் ‘புளூ டூத்’ வசதியை அறிமுகம் செய்தார்கள்.
    • பஸ், ரெயில், பொது இடங்கள் என்று எங்கு பார்த்தாலும், யாரை பார்த்தாலும் ஒற்றை இயர்போனோடுதான் இருக்கிறார்கள்.

    யாராவது தெருவில் தனியாக நடந்து செல்லும்போது சிரித்துக் கொண்டே நடந்தாலோ அல்லது பேசிக்கொண்டே நடந்தாலோ அய்யோ பாவம்.... ஏதோ ஆகி விட்டது என்று ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது அந்தக் காலம்.

    ஆனால் இன்று யாரை பார்த்தாலும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் நல்லாத்தான் இருக்கிறார்கள். என்ன சொல்வது...? காலம் மாறி போச்சு.

    செல்போன் வந்ததும் காதில் நீண்ட நேரம் வைத்து பேசும்போது சூடாகிறது. இது காதுக்கு நல்லதல்ல என்றார்கள்.

    அதை தவிர்ப்பதற்காக வயருடன் கூடிய இயர்போன் வந்தது. செலபோனில் ஒரு முனையை சொருகி விட்டு மறுமுனையில் இருக்கும் இரண்டு இயர்போன்களையும் இரண்டு காதுகளிலும் மாட்டி கொண்டார்கள்.

    பின்னர் வயர் அசவுகரியமாக தெரிந்ததால் 'புளூ டூத்' வசதியை அறிமுகம் செய்தார்கள். இப்போது செல்போனில் புளூ டூத்தை ஆன் செய்து வைத்து விடுகிறார்கள். காது கேட்கும் கருவி போல் இருக்கும் சிறிய அளவிலான இயர்போனை காதுக்குள் சொருகி கொள்கிறார்கள்.

    காலையில் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது அதை மாட்டுகிறார்கள். இரவு வீடு திரும்பும் வரை அது காதுகளில் அப்படியேதான் இருக்கும். இளைய தலைமுறை மட்டுமல்ல வேலை பார்ப்பவர்கள் கூட காதுக்குள் வைத்திருக்கிறார்கள்.

    கையில் போனை எடுத்து பேச வேண்டிய அவசியம் இல்லை. அதே போல் எந்த நேரமும் நினைத்த மாதிரி இனிமையான பாடல்களையோ, நகைச்சுவைகளையோ போட்டு கேட்டு ரசித்தபடியே இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது வேலையில் எந்த அளவு கவனம் இருக்கும்? நடந்து செல்லும்போது சுற்றிலும் நடப்பது அல்லது நெருங்கி வரும் ஆபத்துகளை எப்படி உணர முடியும்? என்ற கேள்வி எழுகிறது.

    ஆனால் இதுபற்றி இயர்போனை பயன்படுத்துபவர்களிடம் கேட்டால் ஒரு காதில்தான் மாட்டியிருக்கிறோம். மற்றொரு காதில் வெளி உலகில் நடப்பதை கேட்டுக் கொள்கிறோம் என்கிறார்கள். இந்த மாதிரி ஒற்றை இயர்பட் என்பது இப்போதெல்லாம் புதிய சமூக அடையாளமாக மாறி விட்டது.

    சிலர் பேசுவது எரிச்சலூட்டும்போது இயர்போன் வழியாக காதில் விழும் மெல்லிய பின்னணி இசை அதில் இருந்து மீட்பதாக கூறுகிறார்கள். நாங்கள் இங்குதான் இருக்கிறோம். ஆனால் இல்லை என்ற ரீதியில்தான் ஒவ்வொருவரும் செயல்படுகிறார்கள்.

    பஸ், ரெயில், பொது இடங்கள் என்று எங்கு பார்த்தாலும், யாரை பார்த்தாலும் ஒற்றை இயர்போனோடுதான் இருக்கிறார்கள்.

    வெளியில் இருந்து ஒலி பெருக்கி சத்தமோ அல்லது அதிகமான ஏதாவது ஓசையோ கேட்டால் செவிப்பறை கிழிந்து விடும் போல் இருக்கிறது என்று சலித்து கொண்டவர்கள்தான் இப்போது ஒலியை சிந்தாமல், சிதறாமல் அப்படியே காதுக்குள் பாய்த்து கொள்கிறார்கள். இது காதை பாதிக்காதா? என்ற கேள்வி சாதாரணமாக எழுகிறது. பல நேரங்களில் இயர்போன் வழியாக வெளியேறும் ஒலியின் அளவை பொறுத்து போனில் எச்சரிக்கை வருகிறது. "அதாவது அளவுக்கு அதிகமான சத்தம் வருகிறது. ஒலியின் அளவை குறைத்து கொள்ளுங்கள்" என்று எச்சரிக்கும்.

    ஆனால் அதையெல்லாம் யாரும் கண்டு கொள்வதில்லை. மணிக்கணக்கில், நாள் கணக்கில், மாத கணக்கில், ஆண்டு கணக்கில் இப்படியே பழக்கப்பட்டால் காது என்னவாகும்? செவி மடல் பாதிக்காதா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் இருக்கிறது.

    இவ்வாறு பயன்படுத்துவது நல்லதல்ல. வாகனங்களில் செல்லும்போதும் பேசிக்கொண்டோ, பாடல்கள் கேட்டுக்கொண்டோ செல்வதால் கவன சிதறல் ஏற்பட்டு ஆபத்து நேரிடலாம்.

    காது பகுதி மிகவும் சென்சிட்டிவான பகுதி இந்த பகுதிக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கும் ஒலி மாசு நிச்சயம் செவித்திறனை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    • மொத்த பிளேபேக்கிற்கு 30 மணிநேரம் அல்லது 24 மணிநேரம் வரையிலான டாக்-டைம் வழங்குகிறது.
    • இந்த இயர்பட்ஸ் ஏஐ சார்ந்த பிராசஸிங்கை பயன்படுத்துகிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் நிறுவனத்தின் முதல் ஓபன் இயர் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (TWS) நத்திங் இயர் (ஓபன்) அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்வ மாடல் காப்புரிமை நிலுவையில் உள்ள டயாபிராம், டைட்டானியம் கோட்டிங், அல்ட்ரா-லைட் டிரைவர் மற்றும் ஸ்டெப்டு டிசைன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தனித்துவ வடிவம் ஆடியோ சிதைவை குறைத்து, லோ ஃப்ரீக்வன்ஸியை மேம்படுத்துகிறது. இதன் இயர் ஹூக் நிக்கல்-டைட்டானியம் வயர் கொண்டுள்ளது. இது நெகிழ்வானதாகவும் உறுதியாகவும் மாற்றுகிறது.

    ஆட்டோமேடிக் பேஸ் என்ஹான்ஸ் அல்காரிதம் குறைந்த ஃப்ரீக்வன்ஸியை மேம்படுத்தி சிறப்பான பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஹெட்செட் சாட்ஜிபிடி ஒருங்கிணைப்பு மற்றும் தெளிவான அழைப்புகளை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

    இந்த இயர்பட்ஸ் ஏஐ சார்ந்த பிராசஸிங்கை பயன்படுத்துகிறது. இது 28 மில்லியனுக்கும் அதிகமான இரைச்சல் சூழ்நிலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது மொத்த பிளேபேக்கிற்கு 30 மணிநேரம் அல்லது 24 மணிநேரம் வரையிலான டாக்-டைம் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸை 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், இது 2 மணிநேரயிலான பிளேபேக்கை உறுதி செய்கிறது.

    நத்திங் இயர் (ஓபன்) வைட் நிறத்தில் வருகிறது. இந்திய சந்தையில் இந்த இயர்பட்ஸ் விலை ரூ. 9,999 ஆகும். இது இப்போது பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.

    • நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது இயர்போன் உருளை வடிவம் கொண்டு இருக்கிறது.
    • புதிய நத்திங் இயர்போன் உதட்டு சாயத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    நத்திங் நிறுவனத்தின் புதிய இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டது. நத்திங் இயர் (ஸ்டிக்) என அழைக்கப்படும் புது இயர்போன் ஹால்-இன்-இயர் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் 12.6mm டிரைவர்கள் உள்ளன. சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது இந்த இயர்போன் மொத்தத்தில் 29 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

    இந்த இயர்போனின் உருளை வடிவம் உதட்டு சாயம் (லிப்ஸ்டிக்) தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போனில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படவில்லை. எனினும், இதில் உள்ள மூன்று மைக்ரோபோன்கள் அதிக தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்த பிளே, பாஸ், ஸ்கிப், வாய்ஸ் அசிஸ்டன்ஸ் மற்றும் வால்யூம் கண்ட்ரோல் உள்ளிட்ட ஆப்ஷ்ன்களை இயக்க பட்ஸ்-இல் டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    புது இயர்பட்ஸ் IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 29 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் எளிதில் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. நத்திங் போன் (1) மாடலுடன் இணைக்கும் போது இந்த இயர்பட்ஸ் பிரத்யேக அம்சங்களை பெறுகிறது.

    இவற்றில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், EQ செட்டிங் அட்ஜஸ்ட்மெண்ட், ஃபைண்ட் மை இயர்பட்ஸ் உள்ளிட்டவை அடங்கும். இந்த அம்சங்களை நத்திங் போன் (1) மாடலின் குயிக் செட்டிங்ஸ்-இல் இயக்க முடியும். இந்தியாவில் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நவம்பர் 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் மிந்த்ரா வலைதளங்களில் துவங்குகிறது.

    • நத்திங் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை அறிமுகம் செய்தது.
    • அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) விலை இந்தியாவில் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இயர் (ஸ்டிக்) ட்ரூ வயர்லெஸ் இயர்போனை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. புதிய இயர் (ஸ்டிக்) மாடல் நத்திங் நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த ஆடியோ சாதனம் ஆகும். எனினும், நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில், புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) வாங்கும் நத்திங் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தள்ளுபடி சலுகை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. நத்திங் நிறுவன ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நவம்பர் 14 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெற இருக்கும் லிமிடெட் சேலின் போது இந்த சலுகை தானாக செயல்படுத்தப்பட்டு விடும். இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே அரிவிக்கப்பட்டுளள்ளது. அந்த வகையில் ஓபன் சேல் துவங்கும் நவம்பர் 17 ஆம் தேதியில் இருந்து இந்த சலுகையை பெற முடியாது.

    நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் ஹால்ஃப்-இன்-இயர் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் இயர் ஒவ்வொன்றிலும் 12.6mm டைனமிக் டிரைவர்கள் உள்ளன. மேலும் இந்த இயர்போன் AAC மற்றும் SBC கோடிங் சப்போர்ட், பேஸ் லாக் ஆப்ஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்போன் 7 மணி நேர பேக்கப் வழங்கும். சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் 29 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

    இத்துடன் ப்ளூடூத் 5.2, IP54 சான்று, இன்-இயர் ரெகக்னிஷன், கூகுள் பாஸ்ட் பேர், மைக்ரோசாப்ட் ஸ்விப்ட் பேர், நத்திங் X செயலி, கஸ்டமைஸ் EQ மற்றும் மோஷன்ஸ், லோ லேக் மோட் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்திய சந்தையில் நத்திங் இயர் (ஸ்டிக்) விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • நத்திங் நிறுவனம் சமீபத்தில் தான் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்து இருந்தது.
    • புதிய இயர்போன் நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஆடியோ சாதனமாக அறிமுகமானது.

    நத்திங் நிறுவனம் முற்றிலும் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை இந்திய சந்தையில் சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலில் செமி இன்-இயர் டிசைன் மற்றும் ரோலிங் மெக்கானிசம் கொண்ட உருளை வடிவத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நத்திங் நிறுவனத்தின் முற்றிலும் வித்தியாசமான டிசைன் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலிலும் பிரதிபலித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் நத்திங் இயர் (ஸ்டிக்) விற்பனை நவம்பர் 17 ஆம் தேதி தான் துவங்க இருக்கிறது. எனினும், இன்று (நவம்பர் 13) மதியம் லிமிடெட் விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனை மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. இதில் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) வாங்குவோர் ஏற்கனவே நத்திங் போன் (1) அல்லது நத்திங் இயர் (1) பயன்படுத்தும் பட்சத்தில் ரூ. 1000 தள்ளுபடி பெறலாம்.

    நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலின் விலை இந்தியாவில் ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே நத்திங் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை ரூ. 7 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும்.

    இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை ஏற்கனவே நத்திங் போன் (1) அல்லது நத்திங் இயர் (1) மாடலை வாங்க பயன்படுத்திய ப்ளிப்கார்ட் அக்கவுண்டில் வாங்க வேண்டும். இன்றைய பிளாஷ் விற்பனையில் வாங்க முடியாதவர்கள் நவம்பர் 17 ஆம் தேதி துவங்கும் ஓபன் சேலில் வாங்கிட முடியும். அப்போது நத்திங் இயர் (ஸ்டிக்) வாங்கும் நத்திங் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.

    அம்சங்களை பொருத்தவரை நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் ஹால்ஃப்-இன்-இயர் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் இயர் ஒவ்வொன்றிலும் 12.6mm டைனமிக் டிரைவர்கள் உள்ளன. மேலும் இந்த இயர்போன் AAC மற்றும் SBC கோடிங் சப்போர்ட், பேஸ் லாக் ஆப்ஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

    இதனை முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்போன் 7 மணி நேர பேக்கப் வழங்கும். சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் 29 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இத்துடன் ப்ளூடூத் 5.2, IP54 சான்று, இன்-இயர் ரெகக்னிஷன், கூகுள் பாஸ்ட் பேர், மைக்ரோசாப்ட் ஸ்விப்ட் பேர், நத்திங் X செயலி, கஸ்டமைஸ் EQ மற்றும் மோஷன்ஸ், லோ லேக் மோட் போன்ற அம்சங்கள் உள்ளன.

    • ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
    • ஹார்மன் இண்டர்நேஷனல் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் ஜெபிஎல் பிராண்டு ஏராளமான சாதனங்களை விற்பனை செய்து வருகிறது.

    சாம்சங் எலெக்டிரானிக்ஸ் கோ லிமிடெட் அங்கம் ஹார்மண் இண்டர்நேஷனல் ஆட்டோமோடிவ், நுகர்வோர் மற்றும் தொழில்துறை செயலிகள், கனெக்டெட் தொழில்நுட்பங்கள் பிரிவில் கவனம் செலுத்தி வருகிறது. வளர்ந்து வரும் ஹெட்போன் சந்தையில், அதிக தரமுள்ள ஆடியோ சாதனங்கள் துறையில் சிறப்பாக செயல்பட்டதோடு, வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததன் அங்கமாக ஜெபிஎல் பிராண்டு 20 கோடி ஹெட்போன்களை விற்பனை செய்து இருக்கிறது.

    ஆடியோ பிரிவில் ஒவ்வொருத்தரின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடந்த தசாப்தத்தை கடந்து வந்துள்ளதாக ஜெபிஎல் தெரிவித்து இருக்கிறது. 2020 முதல் ஹெட்போன்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரிக்க துவங்கியது. பெருந்தொற்று காரணமாக ஹெச்டி மியூசிக் ஸ்டிரீமிங், இன்-கேம் மியூசிக், பாட்காஸ்ட், வீட்டில் இருந்தே பணியாற்றும் முறை என வாழ்க்கை முறை முழுவதும் வீட்டை சார்ந்தே மாறி போயின.

    இதன் காரணமாக தற்போதில் இருந்து 2028-க்குள் ஹெட்போன் சந்தையில் 17.6 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இது ஜெபிஎல் முடிவுகளிலும் எதிரொலிக்கும். இரண்டாவது காலாண்டு வாக்கில் சர்வதேச ஜெபிஎல் நிறுவனம் முன்னிலையில் இருந்தது. இதன்படி ஆப்பிளுக்கு அடுத்த இடத்தில் ஜெபிஎல் முன்னணி ஆடியோ பிராண்டாக உள்ளது. சமீபத்தில் தான் ஜெபிஎல் டியூன் ஃபிளெக்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்க செய்வதில் கவனம் செலுத்திய நிறுவனங்களில் முதன்மையானதாக ஜெபிஎல் இருக்கிறது. ஜெபிஎல் பிராண்டு ஹெட்போன்கள் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஹெட்போன்கள் பலதரப்பட்ட பயனர்களுக்கும் சிறப்பான தேர்வாக அமைந்தது.

    • ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புது ஸ்மார்ட்போன் மற்றும் இயர்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது ஒப்போ என்கோ ஏர் 3 மாடலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற டிசைன் மற்றும் சிறிய ஸ்டெம் உள்ளது.

    ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெனோ 8T 5ஜி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 3 ஆம் தேதி அறிமுகமகாகும் என அறிவித்த கையோடு மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி புது ரெனோ 5ஜி ஸ்மார்ட்போனுடன் என்கோ ஏர் 3 ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் பிப்ரவரி 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புது ஒப்போ என்கோ ஏர் 3 ஒப்போ கடந்த ஆண்டு அறிமுகம் செய்த என்கோ ஏர் 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இதுதவிர ஒப்போ நிறுவனம் தனது புது ட்ரூ வயர்லெஸ் இயர்போனின் முக்கிய அம்சங்களை டீசர்களாக வெளியிட்டு உள்ளது.

    அதன்படி ஒப்போ என்கோ ஏர் 3 மாடலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற டிசைன், சிறிய ஸ்டெம் கொண்டிருக்கிறது. இத்துடன் பெபில் வடிவ சார்ஜிங் கேஸ், டிரான்ஸ்பேரண்ட் மூடி உள்ளது. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களில் IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. என்கோ ஏர் 3 மாடலில் ஹைபை 5 DSP பிராசஸர் வழங்கப்படுகிறது.

    இது முந்தைய மாடலை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இத்துடன் 47ms அல்ட்ரா-லோ லேடன்சி, DNN நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் முழு சார்ஜ் செய்தால் 31 மணி நேர பேட்டரி லைஃப், ஒவ்வொரு இயர்பட்-ம் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது.

    இவைதவிர புது என்கோ ஏர் 3 பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒப்போ ரெனோ 8T 5ஜி ஸ்மார்ட்போனில் 120Hz வளைந்த டிஸ்ப்ளே, மத்தியில் பன்ச் ஹோல் கட்-அவுட், 108MP போர்டிரெயிட் கேமரா, 4800 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • நத்திங் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • நத்திங் இயர் (2) மாடல் இந்தியாவில் ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இரண்டாவது தலைமுறை இயர் (2) இயர்பட்ஸ்-ஐ இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த இயர்பட்ஸ்-க்கான குறுகிய கால விற்பனையை நத்திங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    குறுகிய கால விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் மிந்த்ரா வலைத்தளங்களில் நாளை (மார்ச் 25) மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. இதுதவிர மார்ச் 28 ஆம் தேதி இதன் விற்பனை துவங்க இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் அதன் முந்தைய மாடலை போன்றே டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இதுதவிர இந்த மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

     

    நத்திங் இயர் (2) மாடலில் உள்ள 11.6mm கஸ்டம் டிரைவர், புதிய டூயல் சேம்பர் டிசைன் ஒட்டுமொத்த சவுண்ட் தரத்தை மேம்படுத்துகிறது. இந்த இயர்பட்ஸ் அதிகபட்சம் 40db நாய்ஸ் ரிடக்ஷன், ஸ்மார்ட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், மேம்பட்ட விண்ட் ப்ரூஃH் மற்று்ம கிரவுட் ப்ரூஃப் க்ளியர் வாய்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அடுத்த வாரம் துவங்க இருக்கும் விற்பனைக்கு முன்பே நத்திங் இயர் (2) மாடலை வாங்க விரும்புவோர் நாளைய சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய நத்திங் இயர் (2) மாடலின் விலை இந்தியாவில் ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது அதிகபட்சம் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • பிடிரான் நிறுவனத்தின் புதிய பேஸ்பாட்ஸ் என்கோர் இயர்பட்ஸ் பில்ட்-இன் ட்ரூடாக் ENC தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
    • பிடிரான் பேஸ்பாட்ஸ் என்கோர் மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 50 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    பிடிரான் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய பேஸ்பாட்ஸ் என்கோர் ட்ரூ வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்தது. கடந்த பிப்ரவரி மாத வாக்கில் பேஸ்பட்ஸ் ஜென் மாடலை தொடர்ந்து புதிய இயர்பட்ஸ் அறிமுகமாகி இருக்கிறது. புதிய பேஸ்பாட்ஸ் என்கோர் மாடல் நீண்ட நேர பயன்பாடுகளுக்கு ஏற்ப சவுகரிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய இயர்பட்ஸ்-இல் மேம்பட்ட நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் உள்ளது. இது 90 சதவீத பேக்கிரவுண்ட் சத்தத்தை குறைக்கிறது. இதன் மூலம் அதிக சத்தமுள்ள பகுதிகளிலும் தெளிவான ஆடியோவை கேட்க முடியும். இத்துடன் பில்ட்-இன் ட்ரூடாக் ENC தொழில்நுட்பம் மற்றும் நான்கு மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன.

     

    இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், சார்ஜிங் கேஸ் உள்பட 50 மணி நேரத்திற்கான பேக்கப் கிடைக்கும். இதில் ப்ளூடூத் 5.3, டச் கண்ட்ரோல்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளது.

    பிடிரான் பேஸ்பாட்ஸ் என்கோர் அம்சங்கள்:

    10mm டைனமிக் பாஸ் பூஸ்ட் டிரைவர்கள் ட்ரூசோனிக்

    ப்ளூடூத் 5.3, 1-ஸ்டெப் பேரிங் மற்றும் ஆட்டோ ரி-கனெக்ட்

    குவாட் மைக், ENC ட்ரூடாக் தொழில்நுட்பம்

    லோ லேடன்சி ஆடியோ, வீடியோ சின்க், ஸ்டீரியோ மற்றும் மோனோ பட்

    அதிகபட்சம் 50 மணி நேர பேட்டரி பேக்கப்

    பத்து நிமிட சார்ஜிங்கில் 200 நிமிடங்கள் பயன்படுத்தும் வசதி

    400 எம்ஏஹெச் பேட்டரி

    டைப் சி சார்ஜிங் கேஸ்

    டச் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட்

    IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    பிடிரான் பேஸ்பாட்ஸ் என்கோர் மாடல் மிட்நைட் பிளாக், நியான் புளூ மற்றும் கிராஃபைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக குறுகிய காலக்கட்டத்திற்கு பிடிரான் பேஸ்பாட்ஸ் என்கோர் மாடல் ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் இதன் விலை ரூ. 1199 என மாறிவிடும்.

    • டெம்ப்ட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் 10mm ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது.
    • இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது.

    ஆடியோ தொழில்நுட்ப நிறுவனமான டெம்ப்ட் இந்திய சந்தையில் தனது புதிய நெக்பேண்ட் - டெம்ப்ட் ரஷ் மாடலை அறிமுகம் செய்தது. குவால்காம் நிறுவனத்தின் CSR 8635 சிப்செட் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் முதல் இயர்போன் எனும் பெருமையை புதிய டெம்ப்ட் ரஷ் மாடல் பெற்று இருக்கிறது. இந்த சிப்செட் தலைசிறந்த ஆடியோ மற்றும் மேம்பட்ட பயனர் அனுபவத்தை வழங்குகிறது.

    டெம்ப்ட் ரஷ் நெக்பேண்ட் இயர்போனில் காப்பர் ரிங் மற்றும் 20Hz-20KHz வரையிலான ரெஸ்பான்ஸ் ரேஞ்ச் வழங்கும் 10mm ஸ்பீக்கர் உள்ளது. இது அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்குவதோடு, தெளிவான குரல்களை வெளிப்படுத்துகிறது. மேலும் ஆழமான பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் பயன்படுத்தும் போது சவுகரிய அனுபவத்தை வழங்குவதோடு அதிக தரமுள்ளதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த இயர்போன் IPX7 சான்று பெற்ற ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த இயர்போனை உடற்பயிற்சி செய்யும் போதும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்தலாம். புதிய டெம்ப்ட் ரஷ் மாடலில் உள்ள மல்டி-ஃபன்ஷன் பட்டன் கொண்டு பயனர்கள் இதனை இயக்க முடியும். இத்துடன் மைக்ரோ யுஎஸ்பி மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. மேலும் 120 மணி நேரத்திற்கு ஸ்டாண்ட் பை வழங்குகிறது. இத்துடன் வைப்ரேஷன் அலர்ட் அம்சம் இன்கமிங் அழைப்புகள், குறுந்தகவல் உள்ளிட்டவைகளுக்கு நோட்டிஃபிகேஷன் வழங்குகிறது.

     

     

    டெம்ப்ட் ரஷ் அம்சங்கள்:

    குவால்காம் CSR 8635 சிப்செட்

    10mm*2 டிரைவர்கள்

    ப்ளூடூத் 5.2

    வைப்ரேஷன் அலர்ட்

    பட்டன் கண்ட்ரோல்

    மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

    1.5 மணி நேரத்தில் சார்ஜ் செய்யும் வசதி

    35 மணி நேர பிளேபேக்

    120 மணி நேரத்திற்கு ஸ்டாண்ட் பை

    IPX7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    டெம்ப்ட் ரஷ் நெக்பேண்ட் இயர்போன் ஆலிவ், பிளாக் மற்றும் கிரே என்று மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 649 ஆகும். விற்பனை டெம்ப்ட் இந்தியா ஆன்லைன் வலைதளம் மற்றும் அமேசான், ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெறுகிறது.

    • நத்திங் நிறுவனம் புதிய நெக்பேன்ட் இயர்போனை உருவாக்கி வருவதாக தகவல்.
    • இந்த மாடல் விவரங்கள் வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் TDRA வலைதளத்தில் நத்திங் (2a) ஸ்மார்ட்போன் விவரங்கள் சமீபத்தில் இடம்பெற்று இருந்தது. இதே வலைதளத்தில் தற்போது நத்திங் நெக்பேன்ட் ப்ரோ விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் இதே சாதனம் பற்றிய தகவல்கள் இந்தியாவின் BIS வலைதளத்திலும் இடம்பெற்றுள்ளது. நத்திங் நெக்பேன்ட் ப்ரோ மாடல் சி.எம்.எஃப். பிரான்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் என BIS வலைதளத்தில் தெரியவந்துள்ளது. அந்த வகையில், புதிய நெக்பேன்ட் இயர்போன் நத்திங் நிறுவத்தின் சி.எம்.எஃப். பிரான்டு அறிமுகப்படுத்தும் இரண்டாவது ஆடியோ சாதனமாக இருக்கும்.

    முன்னதாக சி.எம்.எஃப். பட்ஸ் ப்ரோ மாடல் ஏற்கனவே அறிமுகமாகி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நத்திங் நெக்பேன்ட் ப்ரோ மாடல் B164 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என TDRA வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், இது நத்திங் நிறுவனத்தின் ஆடியோ சாதனம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய இயர்போன் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த இயர்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள்.
    • வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள்.

    தற்போது பலரும் ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள். அதை வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள். இருசக்கர வாகனத்தில் பறக்கும் போதும், பஸ், ரெயிலில் பயணிக்கும் போதும் பல பெண்களை இயர்போனும் காதுமாய் காண முடிகிறது. தொடர்ந்து இயர்போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா? இதோ பட்டியல்...

     இயர்போன் அல்லது ஹெட்போன் மூலம் உரத்த இசையை கேட்பது, கேட்கும் திறனைப் பாதிக்கும். இயர்போன் மூலம் ஒலியலைகள் தொடர்ந்து செவிப்பறையைத் தாக்குவது நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, இயர்போன்களை மணிக்கணக்கில் அணிந்துகொண்டு இசை கேட்பது காதுகளுக்கும் மட்டுமல்ல, இதயத்துக்கும் நல்லதல்ல. இதனால் இதயம் வேகமாக துடிப்பதுடன், படிப்படியாக பாதிப்புக்கு உள்ளாகும்.

    இயர்போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதனால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சினைகள் உண்டாகின்றன. பலர் தூக்கமின்மை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

    இயர்போன்கள் நேரடியாக காதில் வைக்கப்படுவதால் காற்றுப்பாதையைத் தடுக்கிறது. இந்த அடைப்பு, பாக்டீரியாவின் வளர்ச்சி உள்பட பல்வேறு வகையான காது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

    இயர்போன்களை நீண்டகாலமாக பயன்படுத்துவது ஒரு நபரின் சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயங்களில் அதிகப்படியான பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.

     இயர்போன்களில் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால், கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகளுக்கு வழிவகுக்கிறது.

    இயர்போன்களை காதுகளில் பொருத்தி இசை. பேச்சு என கேட்டு ரசிப்பது சுகமாக இருக்கும்தான். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் மனதில்கொள்ள வேண்டும். விவேகமாகவும், குறைந்த நேரத்துக்கும் மட்டும் இயர்போன்களை பயன்படுத்துவது எப்போதுமே பாதுகாப்பு.

    ×