என் மலர்
பொது மருத்துவம்
- கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும்.
- பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.
நெருப்பு அல்லது சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.
- வண்டு கடித்தாலோ இதன் இலையை அரைத்துப் பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்தால் விஷம் இறங்கிவிடும்.
- செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
செங்காந்தள் செடியின் கிழங்கு ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பல்வேறு விதமாக பயன்படுத்தப்படுகிறது. செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்கள் இந்தச் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு தினமும் காலை, மாலை என 3 நாள்கள் சாப்பிட்டு வந்தால், விஷம் இறங்கும். உப்பில்லா பத்தியம் அவசியம். சிறிய பாம்புகள் கடித்தாலோ, வண்டு கடித்தாலோ இதன் இலையை அரைத்துப் பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்தால் விஷம் இறங்கிவிடும்.
செங்காந்தள் வேரில் செய்யப்பட்ட தைலத்தை வாரம் ஒருநாள் தலையில் தேய்த்து குளித்துவந்தால் எலி, வண்டு, பூரான், சாரைப்பாம்பு கடிபட்டவர்களுக்கு விஷத்தன்மை குறைந்துவிடும். பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி இறங்காமல் அவதிப்படும் பெண்களுக்கு பச்சை செங்காந்தள் வேர்க்கிழங்கை அரைத்து தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களில் தடவுவார்கள். உடனடியாக நஞ்சுக்கொடி இறங்கிவிடும்.
- மண் சூரிய ஒளியில் உள்ள சக்திகளை உடலுக்கு பெறச்செய்கிறது.
- குளிர்ந்த நீரால் நோயாளியின் உடல் முழுதும் தெளிக்க வேண்டும்.
இயற்கை மருத்துவத்தில் மண் சிகிச்சை முறை மிகவும் எளிமையானது. நிலத்தில் 3 முதல் 4 அடி ஆழத்தில் தோண்டி மண் எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் கற்கள், துண்டுகள், ரசாயன கலவைகள் கண்டிப்பாக இருக்கக்கூடாது. இயற்கையின் பஞ்ச பூத சக்திகளில் மண் ஒன்று ஆகும். இது உடல் ஆரோக்கியத்திற்கும், நோய்களை குணப்படுத்தவும் துணைசெய்யும்.
மண் சூரிய ஒளியில் உள்ள சக்திகளை உடலுக்கு பெறச்செய்கிறது. குளிர்ந்த மண்ணை உடலில் தடவி வெகு நேரம் உலராமல் இருப்பதன் மூலம் உடலின் வெப்பம் தணிந்து உடல் சம் நிலை அடைகிறது.
உடலில் பூசிய மண்ணுடன் நீரையும் சேர்ப்பதால் தேவையான அடர்த்தியும் , உருவமும் எளிதாக கிடைக்கிறது.
மண் சிகிச்சைக்கு தயார் செய்யும் முன்பே மண்ணை உலர வைத்து, கற்கள், மண்ணில் கலந்துள்ள இதர பொருட்களை பிரித்து விட்டு பயன்படுத்த வேண்டும்.
சலித்த, மெல்லிய மண்ணை ஈரமான துணியில் நோயாளியின் வயிற்று அளவுக்கு ஏற்றவாறு கட்டி, செங்கல் வடிவ அளவில் நோயாளியின் வயிற்றின் மேல் வைக்க வேண்டும். குளிர்ந்த காற்று வீசினால் குளிர்ந்த காற்று படாதவாறு மேலே போர்த்த வேண்டும். மண்கட்டியினை அடிவயிற்றில் பயன்படுத்தும் பொழுது ஜீரணகோளாறுகளை போக்குகிறது. உடல் சூட்டை குறைக்கிறது.
மொத்தமாக தயாரிக்கப்பட்ட மண்கட்டிகளை தலையில் வைத்து பயன்படுத்தும்பொழுது அதிகப்படியான தலைவலியும் உடனடியாக சரிசெய்கிறது. இதை கண்கள் மீது பயன்படுத்தும் பொழுது கண் மற்றும் பார்வை பிரச்சினைகளான இமைப்படல அழற்சி, கண்விழி அரிப்பு, ஒவ்வாமை, கண்விழி அழுத்தம், கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை முதலிய பிரச்சினைகளை சரிசெய்கிறது.
சுத்தம் செய்யப்பட்ட மண் 30 நிமிடத்திற்கு வைத்திருப்பதனால் தோல்நிறம் அதிகரிக்கின்றது. கடும்புள்ளிகள், சிறுசிறு பொத்தல்கள் ஆகியவை சரிசெய்யப்படுகின்றது. மேலும் இது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களை சரிசெய்வதற்கும் பயன்படுகிறது. 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.
மண் குளியல் என்பது நோயாளி அமர்ந்த நிலையிலோ அல்லது படுத்திருக்கும் நிலையிலோ மண்ணை பூச வேண்டும். இது தோலில் ரத்த சுழற்ச்சியையும் வலிமையையும் அளிக்கின்றது. மண் குளியலின் போது நோயாளிக்கு சளிபிடிக்காதவாறு கவனமாக கடைபிடிக்கவேண்டும். குளிர்ந்த நீரால் நோயாளியின் உடல் முழுதும் தெளிக்க வேண்டும். நோயாளி மிகவும் குளிர்ச்சியாக உணர்ந்தால் சுடுநீர் பயன்படுத்தலாம், உடனடியாக நோயாளியின் உடலினை துவட்டி உஷ்ணப்படுத்திக் கொள்ள வேண்டும். 45 முதல் 60 நிமிடங்கள் வரை மண் குளியல் செய்யலாம்.
மண் குளியலின் பயன்கள்
உடல் மற்றும் தோல் காயங்களை சரிசெய்வதில் மண்குளியல் சிறந்தபலனை தருகிறது.
உடலிற்கு குளிர்ச்சியூட்ட பயன்படுகிறது.
உடலில் உள்ள விஷத்தன்மையை நீர்க்கச்செய்து, உறிஞ்சி வெளியே எடுத்து விடுகிறது.
பசியின்மை, மனஉளைச்சலினால் ஏற்படும் தலைவலி, அதிக ரத்த அழுத்தம், தோல் நோய்கள் முதலியவற்றிற்கு சிறந்தமுறையில் சிகிச்சை பயன்படுகிறது.
மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு காந்தி மண்குளியலையே பயன்படுத்தினார்.
- மூளையைத் தின்னும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முக்கியமானவை.
- மாசடைந்த குளம் மற்றும் ஏரிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நெய்க்லீரியா போலெரி, ஒரு செல் உயிரி ஆகும். இவை பொதுவாக ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும். அங்கு மூழ்கி குளிக்கும்போது, அரிதாக சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விடும். அதாவது மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்தும். மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், போதுமான குளோரின் கலக்கப்படாத பொழுதுபோக்கு பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று காணப்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
மூளையைத் தின்னும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முக்கியமானவை. அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறி தொடங்கிய ஒன்று முதல் 18 நாட்களுக்குள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி மரணத்துக்கும் வழிவகுக்கும் அபாயம் கொண்டது. உடலில் இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படக்கூடும். தொற்று மிகவும் அரிதானது என்பதால், சோதனை மூலம் இதனைக் கண்டறிவது கடினமான ஒன்றாக உள்ளது.
தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்:
* நன்கு பராமரிக்கப்படாத, தண்ணீர் குறைவாக உள்ள நீச்சல் குளங்களுக்குச் செல்லக்கூடாது.
* குளோரின் எனும் கிருமி நாசினி மூலம் நீச்சல் குளங்கள் முறையாகச் சுத்தப்படுத்தப்படுகிறதா என்பதை சரிபார்த்து செல்ல வேண்டும்.
* மாசடைந்த குளம் மற்றும் ஏரிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
* இந்த அமீபா மூக்கு மூலமே உடலுக்கு செல்கிறது என்பதால் குதித்து மூழ்குவது, டைவ் அடிப்பது போன்ற செயல்களை தவிர்க்கலாம். தலையை மேலே வைத்த நிலையில் குளிப்பதன் மூலம் இந்த தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும்.
- உடலானது கொழுப்பை உருவாக்க பயன்படுத்தும் சிட்ரேட் லைஸ் என்ற நொதியின் செயல்பாட்டை தடுக்கக்கூடியவை.
- குடம் புளியை உணவில் சேர்ப்பது வயிறு வீக்கத்தையும், இன்சுலின் அளவையும் குறைக்க உதவும்.
உணவில் புளிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் புளி வகைகளுள் பழமையான ஒன்று குடம் புளி. மலையாளத்தில் மலபார் புளி என்றும், கன்னடத்தில் உப்பேஜ் என்றும் அழைக்கப்படும் இது, தென்னிந்திய சமையலில் பரவலாக இடம் பெறுகிறது.
இந்த புளியில் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் (எச்.சி.ஏ.) என்னும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. அவை கொழுப்பை எரிக்கும் திறன் கொண்டவை. குறிப்பாக உடலானது கொழுப்பை உருவாக்க பயன்படுத்தும் சிட்ரேட் லைஸ் என்ற நொதியின் செயல்பாட்டை தடுக்கக்கூடியவை.
பசி உணர்வையும் கட்டுப்படுத்தக்கூடியவை. அதனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த புளி முக்கிய பங்கு வகிக்கிறது.
அத்துடன் குடம் புளியை உணவில் சேர்ப்பது வயிறு வீக்கத்தையும், இன்சுலின் அளவையும் குறைக்க உதவும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமான செயல்முறையை தூண்டவும், மகிழ்ச்சிக்கான ஹார்மோனை வெளியிடவும் வழிவகை செய்யும். வயிற்று புண் ஏற்படாமல் தடுக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொழுப்பை கட்டுப்படுத்தவும் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் துணைபுரியும்.
- வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள்.
- வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,
* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.
* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.
* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும்.
இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் நல்லது. வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.
- உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- வைரஸ் பரவுவதை தடுக்க அடிக்கடி கை கழுவுவது அவசியமானது.
தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இன்புளூயன்சா என்ற சுவாசம் சார்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ (எச்1என்1, எச்3என்2) மற்றும் இன்புளூயன்சா பி போன்ற குறிப்பிட்ட வகை வைரஸ்கள் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தமிழ்நாட்டில் பொதுவாக மழைக்காலம் மற்றும் குளிர் காலங்களில் இந்த காய்ச்சல் பரவி நோய் பாதிப்பை ஏற்படுத்துவதுண்டு. தற்போது மழைக்காலம் தொடங்கி பருவ காலம் மாறி இருப்பதால் இந்த வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது.
இன்புளூயன்சா வைரசின் அறிகுறிகள்:
* உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சலை உண்டாக்கும்.
* தொடர்ந்து இருமல் ஏற்படலாம்.
* உணவுப்பொருளை விழுங்குவதில் சிரமம் ஏற்படும். அல்லது தொண்டை வலி உண்டாகும்.
* உடல் சோர்வுடன் காணப்படும்.
* உடல் முழுவதும் வலி உண்டாகும். குறிப்பாக தசைகள் மற்றும் தலையில் அதிக வலியை உணரலாம்.
* காய்ச்சல் இருந்தாலும் உடல் குளிர்வது போன்ற உணர்வும் ஏற்படும்.
* சளி ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு ஏற்படக்கூடும்.
* தலைவலி உண்டாகும்.
சிலருக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுபோக்கு உண்டாகும்.
மருத்துவ ஆலோசனை
* இந்த அறிகுறிகள் கடுமையாக இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.
* வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் காய்ச்சல் எளிதில் பரவக்கூடும். அதனால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
சிகிச்சை முறை
* குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், உணவு உண்ண முடியாத நிலை இருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.
* மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் இன்புளூயன்சாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.
தடுப்புமுறை
* உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். தண்ணீரும் அதிகம் பருக வேண்டும். நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.
* இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அடிக்கடி கை கழுவுவது அவசியமானது. வெளி இடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், சாப்பிடுவதற்கு முன்பும் கண்டிப்பாக கைகளை கழுவ வேண்டும். சோப்பு அல்லது கிருமிகளை நீக்கும் 'ஹேண்ட் வாஷ்' பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வது நல்லது.
* லேசான காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் 7 நாட்கள் வரை வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க அது உதவும்.
- உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சிவப்பு ஆப்பிள், மாதுளை, தக்காளி, வெங்காயம், தர்பூசணி, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட். சிவப்பு நிறக் காய்கறி- பழங்களில் லைக்கோபின் என்ற சிவப்பு நிறத்திலான கரோட்டினாய்ட் உள்ளது. மிக முக்கியமான ஆன்டிஆக்சிடன்ட் இது. ஏராளமான நன்மைகளைக் கொடுக்கவல்லது.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தல் ஆகியவை முக்கியமான செயல்பாடுகள். இவை தவிர சூரியக் கதிர்வீச்சால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதுடன், சிலவகையான புற்றுநோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நினைவாற்றல் பாதிப்பு நோய் வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- மூலச்சூடு, நீர்க்கடுப்பு ஆகியவையும் நீங்கும்.
- பேதிக்கும், கண் கோளாறுகளுக்கும், கடுமையான காசநோய்க்கும் மாதுளம் பூ பயன்படும்.
மாதுளம் பூ, ரத்த வாந்தி, ரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். ரத்த விருத்திக்கு உதவும்.
இருமல் இருந்தால் மாதுளை மொக்கை வெய்யிலில் உலர்த்திப் பொடி செய்து மூன்று வேளையும் கொடுக்கலாம்.
சில நேரங்களில் மூக்கில் ரத்தம் கசிந்தால், மாதுளம் பூவைச் சாறு எடுத்து, அருகம்புல்லைச் சேர்த்து இடித்து அந்தச் சாறைப் பருகலாம்.
தொண்டைக்கம்மல், தொண்டைப் புண் ஆகியவற்றுக்கு மாதுளம் பூவை எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி, கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி, அதில் சிறிது தேனும், எலுமிச்சம் பழச்சாறும் விட்டு கலக்கி, கொப்பளிக்கலாம்.
அருகம்புல் வேர் எடுத்து, மிளகு, சீரகம், அதிமதுரம், மாதுளம்பூ ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் தயாரித்து, பசு வெண்ணெய் சேர்த்து தொடர்ந்து குடித்தால், உடலில் கலந்த விஷம் முறியும். மூலச்சூடு, நீர்க்கடுப்பு ஆகியவையும் நீங்கும்.
பேதிக்கும், கண் கோளாறுகளுக்கும், கடுமையான காசநோய்க்கும் மாதுளம் பூ பயன்படும். அதிவிடயம், பீநாரிப்பட்டை, மாதுளம் பழத்தோல், வில்வப் பழச் சதை, குடசப்பாலை, முத்தக்காசு, ஆவாரம்பூ ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி அருந்தினால், பேதி நிற்கும்.
மாதுளம் பூ, காயையும், பச்சைக் கற்பூரத்தையும் சமமாகக் கலந்து, அந்தச் சாறை தாய்ப்பாலில் கலந்து கண்களில் விட்டால், கண் தொடர்பான பாதிப்புகளுக்கு நல்லது.
மாதுளம் பூவை பசு நெய்யுடன் சேர்த்து அடுப்பிலிட்டுக் காய்ச்ச வேண்டும். அதை இறக்கி ஆறவைத்து, கண்ணாடிப்புட்டியில் சேகரித்து வைத்துக்கொண்டு நாள்தோறும் காலையும், மாலையும் அருந்த, குணம் ஏற்படும்.
எல்லாவற்றிலும், கண் மருத்துவரின் ஆலோசனை பெற்றுச் செயல்படுவது நலம்.
- நாட்பட்ட நோயாளர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்
- ஒரு சில காய்கறிகள் பழங்களில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது.
சரியான உணவு உண்ணாமல் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறைபாட்டினர்,
நாட்பட்ட நோயாளர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம். ஆரோக்கியமான சரிவிகித உணவு மிக அவசியம். எல்லாவிதமான கீரைகளிலும் இரும்புச்சத்தும் மற்ற விட்டமின்களும் நிறைந்திருக்கிறது. அத்துடன் பருப்பு, பால் மீன் முட்டை போன்றவை புரோட்டின் சத்தை கொடுக்கும்.
ஒரு சில காய்கறிகள் பழங்களில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக பேரிச்சை, முருங்கை புளிச்சக்கீரை.
- சிறு குழந்தைகளுக்கு மெல்லிய உள் அடுக்குகள் சேதமடைந்து நிரந்தர காது கேளாமை ஏற்படுகிறது.
- டி.ஜே. சத்தம் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
திருமண நிகழ்ச்சிகள், விழாக்களில் தற்போது டி.ஜே. சத்தத்துடன் நடனமாடுவது புதிய கலாச்சாரமாக மாறிவிட்டது.
இதே போன்ற அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பி நடனம் ஆடும் போது திடீரென சிலர் இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
இதேபோல நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுபவர்கள் திடீர் திடீரென இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் டி.ஜே. சத்தத்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள மெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையம், டி.ஜே. ஒலிகளின் விளைவுகள் குறித்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை 15,000 பேரிடம் ஒரு ஆய்வை நடத்தியது.
ஒலிபெருக்கிகள் மற்றும் டி.ஜே. ஒலிகள் போன்ற எந்தவொரு இசையும் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறினால், இதயத் துடிப்பு மாறுவது கண்டறியப்பட்டது.
மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டது. டி.ஜே.க்கள் போன்ற உரத்த ஒலிகளால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு வியத்தகு அளவில் அதிகரிக்கிறது.

ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதத்தால் இறக்கும் அபாயம் உள்ளது.
பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம். 100 டெசிபலுக்கு மேல் ஒலிகளை நீண்ட நேரம்கேட்டால் காது கேட்கும் பிரச்சனைகள் ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு மெல்லிய உள் அடுக்குகள் சேதமடைந்து நிரந்தர காது கேளாமை ஏற்படுகிறது.
டி.ஜே. சத்தங்கள் கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கின்றன என்பதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. ஒலி மாசுபாட்டால் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.
நமக்கு இதயத் துடிப்பு ஏற்படுவது போல, கருப்பையில் உள்ள குழந்தைகளும் அவற்றை அனுபவிக்கலாம். கர்ப்பத்தின் 4-வது மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் சத்தங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
டி.ஜே. சத்தம் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நாய்கள், கால்நடைகள், ஆடுகள் மற்றும் கோழிகள் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்கின்றன.
சமீபத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தெலுங்கானா மாநிலம் மொய்னாபாத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் டிஜே சத்தம் காரணமா அருகிலுள்ள கோழிப் பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்ததாக புகார் வந்தது.
பலவீனமான கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன.
அதிர்வு விளைவு காரணமாக கட்டிடங்களும் அதிர்வுறும். இதன் விளைவாக, பலவீனமான கட்டமைப்புகள் இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது.
டி.ஜே. பயன்படுத்தும் இடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
ஹெட்போன் அல்லது நுரையால் ஆனவற்றை பயன்படுத்தலாம். அவை உரத்த ஒலிகளைத் தடுக்கின்றன. அவை 30 டெசிபல் சத்தத்தைக் குறைக்கின்றன.
காது செருகிகளை பயன்படுத்தி முழு காதையும் மறைக்காத ஹெட்போன் சந்தையில் வந்துள்ளன. அவை சத்தத்தை முழுமையாகத் தடுக்காமல் தெளிவான ஒலியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
டி.ஜே. ஒலிபரப்பும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- ஒரு சிலருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் கூடுதலாக அதிகரித்து இருந்தால், இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்.
- ஹெபடிடிஸ்-சி மற்றும் சில மூட்டு நோய்கள் இருந்தால் இந்த நிலை ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
குளியல் என்பது உடலை தூய்மையாக வைத்திருக்க அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பழக்கமாக இருக்கிறது. ஆனால், குளியல் என்றாலே சிலருக்கு பயம் ஏற்படும் நிலையும் உள்ளது. ஏனென்றால் உடலில் தண்ணீர் படும்போது தோல் அரிப்பு தாங்க முடியாது. இந்த நிலைக்கு அக்வாஜெனிக் புரூரிட்டஸ் அல்லது தோல் தினவு என்று பெயர். இது ஒரு சிலருக்கு ஏற்படும் அரிதான தோல் பாதிப்பு ஆகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தோலில் தடிப்பு அல்லது நிற மாற்றம் எதுவும் ஏற்படுவது இல்லை. குளித்த உடன் உடலை அரிப்பில் இருந்து மீட்க துணியை கொண்டு நீண்ட நேரம் தேய்த்துக்கொண்டே இருக்கும் நிலைமை காணப்படும்.
இந்நோய் காரணம் குறித்து இதுவரை மருத்துவ உலகத்தால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. உடலில் தண்ணீர் பட்டதும், நரம்புகள் ஏன் இது போன்ற ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு சில காரணங்கள் இருக்கலாம் என்று மட்டும் சொல்லப்படுகிறது. ஒரு சிலருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் கூடுதலாக அதிகரித்து இருந்தால், இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்.
ஹெபடிடிஸ்-சி மற்றும் சில மூட்டு நோய்கள் இருந்தால் இந்த நிலை ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதே போல், மன அழுத்தம், தோல் கசிவு, சில மருந்துகள் காரணமாகவும் அரிப்பு அதிகரிக்கலாம். சில வேளைகளில், தண்ணீர் தோலின் மேல்புறத்தை தொட்டதும், 'மாஸ்ட் செல்கள்' எனப்படும் நோய் எதிர்ப்பு செல்களில் உள்ள ஹிஸ்டமின் போன்ற வேதிப்பொருட்கள் வெளியே வந்து அரிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது. இயற்கையின் பல சிக்கலான கேள்விகளுக்கு விடை தெரிவதில்லை. அதில் இதுவும் ஒன்று என மருத்துவ உலகம் கூறுகிறது.






