என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மகாவதார் நரசிம்மா வெளியானது.
    • திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

    அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மகாவதார் நரசிம்மா கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.

    திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. திரைப்படம் இதுவரை 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பலரும் இப்படத்தை கடவுள் தரிசனமாக நினைத்து கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இந்தியாவில் தயாரித்த ஒரு அனிமேஷன் திரைப்படத்திற்கு இந்தளவு வசூல் பெற்ற படம் இதுவே என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    • மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்!
    • தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்!

    நெருப்பாறுகள் பல நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாக - தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84!

    அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை - இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வாழ்த்துகிறேன்!

    இன்றைய செய்திகளைப் பதிவு செய்து, கருத்தாழமிக்க கட்டுரைகளால் சிந்தனையூட்டி நாளைய வரலாற்றை எழுத உணர்வளிக்கும் முரசொலியின் பயணம் என்றென்றும் தொடரட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் 10 பெண்கள் உள்பட 25 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டனர்.

    நைரோபி:

    ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நியாஹெரா நகரில் இருந்து நியாகாச்சிற்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.

    இந்த பஸ்சில் சுமார் 50 பேர் பயணித்தனர். அவர்கள் அனைவரும் உறவினரின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    ககமேகா நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 10 பெண்கள் உள்பட 25 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சாலையோரம் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ இரங்கல் தெரிவித்தார்.

    • பதிவு செய்யப்பட்ட 334 அரசியல் கட்சிகளை நீக்கியது தேர்தல் ஆணையம்.
    • இந்த அரசியல் கட்சிகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை.

    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை கூட 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக நிறைவேற்றாத பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    இந்த அரசியல் கட்சிகளின் அலுவலகங்களும்கூட எங்கேயும் இருக்கவில்லை. பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இந்த அரசியல் கட்சிகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை.

    பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,854 ஆக இருந்த நிலையில், அவற்றில் தற்போது 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால் இந்த எண்ணிக்கை 2,520 ஆக குறைந்துள்ளது.

    பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தற்போது நாட்டில் உள்ளன என தெரிவித்துள்ளது,

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர், சிட்சிபாஸ் ஆகியோர் நேரடியாக 2வது சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றனர்.

    இன்று நடந்த 2வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், கொலம்பியாவின் டேனியல் இலாஹி கலன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் பேபியன் மாரோசானை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய சிராஜ்-க்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார்.
    • முகமது சிராஜ்-க்கு எப்போதுமே விராட் கோலி மூத்த சகோதரர் போன்றவர்.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகளிலும் ஓய்வின்றி விளையாடியது மட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே 185 ஓவர்களை வீசி 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் நல்ல நிலைக்கு காரணமாக திகழ்ந்தார்.

    இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய சிராஜ்-க்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார். சிராஜ்- விராட் கோலி சகோதர்கள் போன்று பழகி வருகிறார்கள்.

    கடந்து 2018-ம் ஆண்டு சிராஜுக்கு மோசமான ஐபிஎல் தொடராக இருந்தது. அதன்பிறகு சிராஜின் திறனை கவனித்த விராட் கோலி அவரை ஆதரித்து ஆர்.சி.பி அணியில் வாய்ப்பு வழங்கியதோடு இந்திய அணிக்கும் கொண்டு வந்தார்.

    எனவே முகமது சிராஜ்-க்கு எப்போதுமே விராட் கோலி மூத்த சகோதரர் போன்றவர். அவரிடம் இருந்து பெற்ற ஆலோசனைகளை தான் சிராஜ் கையாள்கிறார். விராட் கோலியிடம் இருந்து அவர் கோபம் மற்றும் வெற்றிக்கான வெறி ஆகியவற்றை மற்றும் கற்றுக் கொள்ளவில்லை. உடற்தகுதியில் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்த பிட்னஸ் ஆலோசனைகளையும் விராட் கோலியிடம் இருந்து தான் பெற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் விராட் கோலி கையொப்பமிட்ட அவரது ஜெர்சியை சிராஜ் தனது வீட்டின் சுவற்றில் பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    இந்த ஜெர்சி 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் கடைசி டெஸ்ட் போட்டியை நினைவுகூரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2000-ம் ஆண்டு அஜித்குமார் - ஷாலினி திருமணம் செய்துகொண்டனர்.
    • இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

    இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்தபோது அஜித் குமார், ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

    அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில், ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் க்யூட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பூஜை ஒன்றில் அஜித்குமார் காலில் விழ ஷாலினி முயல்கிறார். அதை அஜித் வேண்டாம் என்று கூற, சுற்றி உள்ளவர்கள் காலில் விழுமாறு கூறுகிறார்கள். இதனையடுத்து ஷாலினி அஜித்குமார் காலில் விழுந்து வணங்குகிறார். உடனே அஜித்குமார் வீட்டுல போய்ட்டு நான் விழணும் என்ற கூற சிரிப்பலை எழுந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • டொனால்டு டிரம்ப்- புதின் அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளனர்.
    • இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன போர் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 3 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால் போர் முடிவை ரஷிய அதிபர் புதின் ஏற்கவில்லை.

    இதனால் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் புதின் இதற்கு அடிபணியவில்லை.

    இந்த நிலையில்தான் ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்தம் குறித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே உக்ரைன் பிராந்தியத்தை முறையாக விட்டுக்கொடுப்பதை நிராகரிப்பதாகவும், எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் உக்ரைன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் எந்வொரு அமைதி ஒப்பந்தமும் செயலில்லாத தீர்வுக்கு வழிவகுப்பதாக இருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    புதின்- டிரம்ப் அலாஸ்காவில் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச இருக்கிறார்கள்.

    • திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்.ஜி.ஆர்.என திருமாவளவன் பேச்சு
    • எம்.ஜி.ஆர். குறித்து பேசிய திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார் என இபிஎஸ் விமர்சனம்

    திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்.ஜி.ஆர்.என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "எம்.ஜி.ஆரை பொதுமக்கள் தெய்வமாக கருதுகிறார்கள். எம்.ஜி.ஆர். குறித்து பேசிய திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார். வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக திருமாவளவன் இதுபோல் பேசிக்கொண்டிருக்கிறார்" என்று காட்டமாக தெரிவித்தார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்துக்கு பதில் அளித்த திருமாவளவன், "எம்.ஜி.ஆர். மீதும், ஜெயலலிதா மீதும் எனக்கு அதீதமான மதிப்பு உண்டு. அவர்களை நான் பலமுறை பாராட்டியுள்ளேன்.

    தமிழ்நாடு அரசியல் கலைஞரை மையப்படுத்தி, எப்படி கலைஞர் எதிர்ப்பு அரசியலாக மாறியது என கலைஞர் நினைவு நிகழ்ச்சியில் பேசினேன். அதில், எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒரு சாதிக்குள் சுருக்க முடியாது. எம்ஜிஆரை ஒரு சாதிக்குள் நான் சுருக்கவில்லை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். 

    • இன்று நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.

    சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.

    நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினார். குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர். 

    • தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டிற்கு வரி செலுத்தவில்லையா? அல்லது வாக்குச் செலுத்தவில்லையா?
    • அரசால் ஒதுக்கப்பட்ட முகாமுக்குள் செய்யப்படுவது அது எப்படி ஆக்கிரமிப்பாகும்?

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிபந்தனைகளுடன் 420 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வீடு ஒதுக்கீடுப் பெற்ற ஈழச்சொந்தங்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த, ஆபத்தான திறந்தவெளி சாக்கடைக்கு மூடியிட்டு, முகப்பு கூரை அமைத்தனர் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் Q - பிரிவு காவலர்கள் சாக்கடை மூடியை அகற்றாவிட்டால் அளித்த வீடுகள் திரும்பப்பெறப்படும் என கடும் மிரட்டல் விடுத்து, அச்சுறுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது.

    வீடுகள் திரும்பப்பெறப்படும் என்ற Q - பிரிவு காவல்துறையின் மிரட்டலால் மனமுடைந்த பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தம் அருள்குமார் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியும் தருகிறது. வந்தவரை எல்லாம் வசதியாக வாழவும், ஆளவும் வைத்த தமிழர் நிலம் தம் சொந்த இனத்தவரை சொந்தமாக பத்தடி நிலம் கூட உரிமை கோர முடியாத நிற்கதியான நிலையில் தவிக்க விட்டிருப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம்.

    தமிழ் இனத்திற்கும், நிலத்திற்கும் துளியும் தொடர்பற்ற வடவர்களை இலட்சக்கணக்கில் உள் நுழைய அனுமதித்து, தமிழர் வேலை வாய்ப்பினை தட்டிப்பறித்து வழங்கியதுடன், ஆதார் அட்டை முதல் குடும்ப அட்டைவரை வழங்கி, நிரந்தரமாய் இங்கே தங்க வைத்துள்ளதற்கு விதிக்கப்படாத கட்டுப்பாடுகளும், ஏற்படுத்தப்படாத தடைகளும் எம் ஈழத்தமிழ் மக்களுக்கு விதிக்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியும், அதிகாரமும் யாருக்கானது? வடவர்கள் தமிழ் மண்ணிற்கு வந்த ஓரிரு வருடங்களில் வாக்களிக்கும் உரிமை வரை தரத் தயாராகிவிட்ட இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், இரண்டு தலைமுறையாக ஈழச்சொந்தங்கள் இந்த மண்ணில் வாழ்ந்தும்கூட இன்றுவரை குடியுரிமை தர மறுப்பது ஏன்?

    இலங்கை இனவெறி சிங்கள அரசின் இனப்படுகொலையை எதிர்கொண்டு, எல்லையில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் ஆளாகி வீட்டை இழந்து, நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்று இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களுக்கு இல்லாத உரிமை எங்கிருந்தோ இந்த நாட்டிற்கு வந்த திபெத்தியர்களுக்கு மட்டும் எப்படி வந்தது? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டிற்கு வரி செலுத்தவில்லையா? அல்லது வாக்குச் செலுத்தவில்லையா?

    நாட்டின் விடுதலைப்போராட்டம் முதல் இன்றைக்கு எல்லைப் பாதுகாப்பு போர்கள் வரை தமிழர்களின் பங்கு எவருக்கும் குறைந்தது இல்லையே? அதற்கு இந்நாடு தரும் கைமாறுதான் எம் ஈழச்சொந்தங்களை துரத்துவதா?

    இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு குடியுரிமை தர மறுக்கிறது. தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ குறைந்தபட்சம் நிம்மதியாக குடியிருக்கும் உரிமையைக்கூட தர மறுக்கிறது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு உள்ளது? இதுதான் திமுக அரசு இனத்தையும், மானத்தையும், மண்ணையும், மொழியையும் காக்கும் செயலா? இதுதான் திமுக தமிழர் உரிமையை மீட்கும் முறையா? வடவர்களுக்கு வாசல் திறந்துவிட்டு, ஈழத்தமிழ்ச் சொந்தங்களை Q - பிரிவு காவலர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் சித்ரவதை செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா?

    வீடு என்ற பெயரில் திமுக அரசால் வழங்கப்படும் வெப்பத்தை உமிழும் கான்கீரிட் கொட்டைகளுக்குள் ஈழச்சொந்தங்களை அடைத்துவைக்க முயல்வது கொடுங்கோன்மை இல்லையா? உயிருக்கு ஆபத்தான, பாதுகாப்பு அற்ற சாக்கடைக்கு மூடி இடுவதினாலோ, வெயில் வரமாலிருக்க மேற்கூரை அமைப்பதினாலோ திமுக அரசுக்கு நேர்ந்த இழப்பு என்ன? அரசால் ஒதுக்கப்பட்ட முகாமுக்குள் செய்யப்படுவது அது எப்படி ஆக்கிரமிப்பாகும்?

    ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு திமுக அரசின் Q - பிரிவு காவலர்கள் தொடர்ச்சியாக தரும் நெருக்கடிகளை கண்டித்து தற்போது சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பதை இவ்வறிக்கையின் வாயிலாக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.

    ஆகவே, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு திமுக அரசு Q - பிரிவு காவல்துறை மூலம் தரும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    ஆகவே, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு திமுக அரசு Q - பிரிவு காவல்துறை மூலம் தரும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    இதற்கு மேலும், Q - பிரிவு காவலர்களின் நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்தால் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களைக் காக்க என்னுடைய தலைமையில் விரைவில் ஈரோட்டில் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கின்றேன்.



    • ஏக்தா கபூரின் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி' என்ற தொடரின் இரண்டாம் சீசனில் அவர் மீண்டும் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • இந்திய சின்னத்திரை வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்துள்ளார்.

    சின்னத்திரை தொடர்களில் கலக்கிய ஸ்மிருதி இரானி, 2003-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 முதல் 2024-ம் ஆண்டு வரை மத்திய மந்திரியாக பதவி வகித்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

    மந்திரி பதவி போன பிறகு, ஸ்மிருதி இரானி மீண்டும் தாய்வீட்டுக்கே (சின்னத்திரை) திரும்பினார். அந்தவகையில் தனக்கு பெரும் பெயரை வாங்கி கொடுத்த ஏக்தா கபூரின் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி' என்ற தொடரின் இரண்டாம் சீசனில் அவர் மீண்டும் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.



    இந்த தொடர் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ஸ்மிருதி இரானியின் சம்பளம் பற்றிய விவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, ஒரு எபிசோடுக்கு ரூ.14 லட்சத்தை ஸ்மிருதி இரானி சம்பளமாக பெறுகிறாராம்.

    இதன்மூலம் இந்திய சின்னத்திரை வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்துள்ளார், ஸ்மிருதி இரானி. செல்லும் இடமெல்லாம் யோகம் அடிப்பதால், மச்சக்காரர் என்று அவரை புகழ்கிறார்கள்.

    ×