செய்திகள்

முன்னாள் எம்எல்ஏ வீரையன் மறைவு- முக ஸ்டாலின் இரங்கல்

Published On 2018-11-19 07:24 GMT   |   Update On 2018-11-19 07:24 GMT
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வீரையன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #DMK #MKstalin
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், அவர்தம் வாழ்க்கை உயர்வுக்கும், தன் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் பாடுபட்டவருமான வீரையன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

அவரது மறைவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தோழர்களுக்கும் எனது இதயமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKstalin
Tags:    

Similar News