செய்திகள்

தெலுங்கானா சட்டசபை தேர்தல் - ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு ஒரே மேடையில் தீவிர பிரச்சாரம்

Published On 2018-11-28 16:27 GMT   |   Update On 2018-11-28 16:27 GMT
தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். #TelanganaAssemblyElections #RahulGandhi #ChandrababuNaidu
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் வரும் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி அங்கு தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில், கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் பேசியதாவது:



தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி பாஜகவின் மற்றொரு அங்கம் போல் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தை ஆட்சி செய்துவரும் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். எனவே, மாநிலத்தில் சந்திரசேகர ராவ் ஆட்சியையும், மத்தியில் பாஜக ஆட்சியையும் அகற்ற வேண்டும்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக கூறிய பிரதமர் மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால்
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்கள் மகிழ்ச்சியின்றி உள்ளனர்.

மத்திய அரசின் அமைப்புகளான ஆர்பிஐ மற்றும் சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை மோடி அரசு அழிக்க முயற்சித்து வருகிறது என தெரிவித்தனர். #TelanganaAssemblyElections #RahulGandhi #ChandrababuNaidu
Tags:    

Similar News