செய்திகள்

உ.பி.யில் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டிய 3 பேர் கைது

Published On 2018-07-28 20:55 GMT   |   Update On 2018-07-28 20:55 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு கருப்பு கொடி காட்டிய பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். #BJP #AmitShah #BlackFlag
லக்னோ:

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அலகாபாத்தில் உள்ள கோயிலுக்கு காரில் சென்றார்.

துமன்கஞ்ச் என்ற இடத்தின் அருகில் அமித்ஷா கார் வந்தபோது 2 பெண்கள் உள்பட 3 பேர் திடீரென காரின் முன்னால் வந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் இருந்த கருப்பு கொடியை காட்டி அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சமாஜ்வாதி கட்சியின் மாணவர் பிரிவினர் என தெரிய வந்தது. இதுதொடர்பாக புகைப்பட காட்சிகள் சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #BJP #AmitShah #BlackFlag
Tags:    

Similar News