இந்தியா
அமித்ஷா போலி வீடியோ வழக்கு: காங்கிரசுக்கு மீண்டும் நோட்டீஸ்
- காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் இன்னும் ஆஜரா கவில்லை.
- நோட்டீஸ் அனுப்ப டெல்லி போலீசார் முடிவு.
திருப்பதி:
மத்திய மந்திரி அமித்ஷாவின் போலி வீடியோ வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த சுமார் 22 பேருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இந்த வழக்கில் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சார்பில் அவருடைய வக்கீல் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் இன்னும் ஆஜரா கவில்லை. அவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.