இந்தியா
null

விமான நிலைய பகுதியில் புகுந்த சிறுத்தை

Published On 2024-05-03 10:01 IST   |   Update On 2024-05-03 10:56:00 IST
  • சிறுத்தை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலைய பகுதியில் புகுந்தது.
  • கேமராவில் சிறுத்தையின் நடமாட்டத்தை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தெலுங்கானா மாநிலம், சங்க ரெட்டியில் பசுவை சிறுத்தை ஒன்று கொன்றது. இந்த சிறுத்தை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலைய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்தது.

விமான நிலையத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டத்தை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் 5 கூண்டுகளில் ஆடுகளை அடைத்து விமான நிலைய பகுதியில் வைத்தனர். கூண்டுகளுக்கு அருகில் வரும் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் அந்த பகுதியிலேயே சுற்றி ஆட்டம் காட்டி வருகிறது. இதனால் வனத்துறையினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News