இந்தியா

Assassination Attempt | நூலிழையில் உயிர்தப்பிய பரூக் அப்துல்லா - வைரலாகும் பகீர் வீடியோ

Published On 2026-03-12 07:21 IST   |   Update On 2026-03-12 07:21:00 IST
  • அப்துல்லாவை நேரடியாகச் சுட முயன்றார்.
  • அப்துல்லா நூலிழையில் உயிர் தப்பினார்.

திருமண விழாவில் கலந்து கொண்ட ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, ஜம்முவில் ஒரு "கொலை முயற்சியில்" இருந்து உயிர் தப்பினார். அதே விழாவுக்கு துப்பாக்கியுடன் வந்த நபர் அப்துல்லாவை நேரடியாகச் சுட முயன்றார்.

தாக்குதல் நடத்தியவர் ஜம்மு காஷ்மீர் தலைவருக்கு சில அடிகள் மட்டுமே பின்னால் இருந்தார், அவரது கை தோள்பட்டைக்கு இணையாக இருந்தது. சட்டென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த அந்த நபர் அப்துல்லாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார், ஆனால் தேசிய பாதுகாப்பு படை (NDG) கமாண்டோக்கள் அவரை கீழே தள்ளினர். இதனால் தோட்டா அதன் இலக்கைத் தவறியது, அப்துல்லா நூலிழையில் உயிர் தப்பினார்.

இந்த பரபரப்பு சம்பவங்கள் வீடியோவில் பதிவாகியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர் கமல் சிங் ஜம்வால் என அடையாளம் காணப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், அவரை மடக்கிப்பிடித்த தேசிய பாதுகாப்பு படையினர் உடனடியாக கைது செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து வெளியான காணொளிகளில் அவர் பிடிபட்ட உடனேயே மக்கள் அவரைத் தாக்குவதைக் காட்டியது.

கைது செய்யப்பட்ட பிறகு, தாக்குதல் நடத்தியவர் ஒரு நாற்காலியில் அமர்ந்து, ஜம்முவில் உள்ள புராணாஸ் மண்டியில் வசிப்பதாக போலீசாரிடம் கூறினார். 65 வயதான தாக்குதல் நடத்தியவருக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், கடந்த 20 ஆண்டுகளாக இந்த தருணத்திற்காக தான் காத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கு நிலையில் இது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.


Tags:    

Similar News