இந்தியா

Real Kerala Story | மோனலிசா - ஃபர்மான் கான் திருமணத்தில் கலந்துகொண்ட கேரள அமைச்சர் பெருமிதம்

Published On 2026-03-11 21:46 IST   |   Update On 2026-03-11 21:47:00 IST
  • பெற்றோர் எதிர்ப்பை மீறி கும்பமேளா அழகி மோனலிசா முஸ்லிம் நபரை காதலித்து திருமணம் செய்தார்
  • பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார்.

மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர் மோனலிசா. பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்.

இதை தொடர்ந்து மோனலிசா சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்று அவரது வாழ்க்கை உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

மோனலிசா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தின் பூவாரில் நடந்து வருகிறது. இங்கிருந்து, மோனலிசாவும் அவரது காதலன் ஃபர்மான் கானும் தம்பனூர் காவல் நிலையத்திற்குச் சென்று தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக புகார் அளித்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லேவும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஃபர்மான் கானும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பேஸ்புக் மூலம் சந்தித்து பேசி பழகி இவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். மோனாலிசாவின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மோனலிசாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்தனர். பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார். மற்ற மாநிலங்களில் தங்கள் உறவுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்படும் என்பதில் உறுதியாக இருந்ததால் கேரளாவைத் தேர்ந்தெடுத்ததாக இருவரும் தெரிவித்தனர்.

இந்நிலையில், மோனலிசா திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலில் வைத்து தனது காதலன் ஃபர்மான் கானை திருமணம் செய்தார். இருவரின் பாதுகாப்புக்கும் கேரளா அரசு உறுதி ஏற்றுள்ளது.

மோனலிசா திருமணத்தில் கேரளா அமைச்சர் சிவன்குட்டி மற்றும் சிபிஎம் கேரளா மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் சிவன்குட்டி, "இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி. இந்த 2 நபர்களின் தைரியத்திற்காக நாம் பெருமைப்பட வேண்டும். கேரளா உண்மையிலேயே சுதந்திரமாக வாழ்வதற்கான இடமாகும்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சிபிஎம் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன், "இரண்டு நபர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த சிறப்பு தருணத்திற்காக அவர்கள் கேரளாவையும், நாராயண குருவால் கட்டப்பட்ட ஒரு கோவிலையும் தேர்ந்தெடுத்தனர்" என்று கூறினார்.

Tags:    

Similar News