இந்தியா

Farooq Abdullah | காஷ்மீரில் பரபரப்பு: பரூக் அப்துல்லா பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு

Published On 2026-03-12 00:17 IST   |   Update On 2026-03-12 00:17:00 IST
  • பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியுடன் இருந்த ஒருவரை கைது செய்தனர்.
  • துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா. இவர் துணை முதல் மந்திரி சுரேந்தர் சவுத்ரியுடன் ஹோட்டலில் நடந்த திருமண விழா ஒன்றில் நேற்று கலந்து கொண்டார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தச் சம்பவத்தில் பரூக் அப்துல்லா பத்திரமாக தப்பினார். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியுடன் இருந்த ஒருவரை கைது செய்தனர். அவர் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரூக் அப்துல்லாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருந்தபோதிலும் இந்தச் சம்பவம் நடந்திருப்பது கவலை அளிக்கிறது எனப்பதாக உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பரூக் அப்துல்லா பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News