செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை - பாதுகாப்பு படை அதிரடி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை களைய பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான். #Jammukashmir #militantgunneddown
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து அந்த வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதி யார் என்பது குறித்தும், எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்பது குறித்தும் தகவல் ஏதும் இல்லை. #Jammukashmir #militantgunneddown
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து அந்த வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதி யார் என்பது குறித்தும், எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்பது குறித்தும் தகவல் ஏதும் இல்லை. #Jammukashmir #militantgunneddown