தமிழ்நாடு

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடலை வாங்க மறுத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Published On 2024-05-04 12:42 GMT   |   Update On 2024-05-04 12:42 GMT
  • குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்.
  • பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.

2 மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

பிதேர பரிசோதனை முடிந்த பிறகே, இது கொலையா ? தற்கொலையா உ என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

சம்பவ இடத்தில் டிஐஜி ஆய்வு செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News