தமிழ்நாடு

தருமபுரி, கோவை, ஊட்டி சுற்றுவட்டாரத்தில் கோடை மழை - பொதுமக்கள் உற்சாகம்

Published On 2024-05-04 12:22 GMT   |   Update On 2024-05-04 12:22 GMT
  • வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்
  • கோடையை குளிர்விக்க மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது.

இந்நிலையில் கோடையை குளிர்விக்க மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக பல மாவட்டங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.

அதன்படி இன்று, 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், கோவை, சேலம், ஊட்டி, நீலகிரி சுற்றுவட்டாரத்தில் கோடை மழை பெய்தது.

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News