தமிழ்நாடு செய்திகள்

துணிச்சல் இல்லாத துரோகி எடப்பாடி பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2026-02-21 18:39 IST   |   Update On 2026-02-21 18:39:00 IST
  • மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் தரவில்லை? என பிரதமர் மோடியிடம் கேளுங்க.
  • மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை.

மதுரையில் நடந்த திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த 2 மாதங்களுக்கு நமக்கு ஓய்வே கிடையாது. அடுத்த 2 மாதங்களுக்கு உங்களுக்கும் சரி எனக்கும் சரி No Rest. வாக்குபதிவு அன்று பூத்துக்கு வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்கு செலுத்தும் வரை ஓய்வே இருக்க கூடாது!

மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் தரவில்லை? என பிரதமர் மோடியிடம் கேளுங்க.

மார்ச் 1ம் தேதி வருகை தரவுள்ள பிரதமரிடம், மதுரைக்கு ஏன் மெட்ரோ ரெயில் திட்டம் தரவில்லை? என மக்கள் கேட்க வேண்டும்.

மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News