தமிழ்நாடு செய்திகள்

அதிமுக காவி மயமாகி வருகிறது - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published On 2026-02-21 17:39 IST   |   Update On 2026-02-21 17:39:00 IST
  • இ.பி.எஸ்.காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்
  • அதிமுக வெற்றிபெற்றால் RSS தான் நாட்டை ஆளும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் படத்தை இபிஎஸ் பதிவிட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "அதிமுக காவி மயமாகி வருகிறது, பாஜக பிடியில் சென்றுவிட்டது என்பதை பிரதிபலிக்கும் செயல் இது. அதிமுக வெற்றிபெற்றால் RSS தான் நாட்டை ஆளும்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News