செய்திகள்

டெல்லியில் 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2017-10-20 14:31 GMT   |   Update On 2017-10-20 14:32 GMT
டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து பேரீச்சம்பழத்தில் மறைத்து வைத்திருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

டெல்லி:

டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து பேரீச்சம்பழத்தில் மறைத்து வைத்திருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் தங்க கட்டிகளை கடத்துவது கடத்தல்காரர்களின் வாடிக்கையாக உள்ளது. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் மற்றும் சரக்குகள் மீதான சோதனையை விமான நிலைய அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையின்போது ஒருவர் தங்கக் கட்டிகளை பேரீச்சம்பழத்தில் மறைந்து வைத்திருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து 80 லட்ச ரூபாய் மதிப்பிலான 23 தங்க பிஸ்கட்டை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் எடை சுமார் 2.68 கிலோ ஆகும். 

தங்கத்தை கடத்தி வந்த அந்த நபரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News