search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரிச்சம்பழம்"

    • ராமநாதபுரம் அருகே பேரிச்சம்பழ பண்ணையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நாகராஜன் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

    ராமநாதபுரம் வட்டம், அத்தியூத்து கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறை தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் 0.50 ஏக்கர் பரப்பில் முகமது இர்சாத் என்ற பயனாளி தோட்டத்தில் ரூ.8,790 மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள கொய்யா செடிகளையும், ரூ.4,920 மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள மா செடிகளையும் பார்வையிட்டார்.

    அதனைத் தொடர்ந்து, அழகன்குளம் கிராமத்தில் சிவானந்தம் என்ற பயனாளி தோட்டத்தில் ரூ.2 லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள சிப்பம் கட்டும் அறையையும், என்மனம்கொண்டான் கிராமத்தில் மானாவாரி பகுதி வளர்ச்சி திட்டம் ஒருங்கிணைந்த பண்ணை வளர்ப்பு மூலம் வளர்க்கப்பட்டு வரும் மா மற்றும் கால்நடைகளையும், பேரிச்சம்பழம் பண்ணையையும், அரியமான் கிராமத்தில் பழ வகைகளான கொய்யா, மா, சப்போட்டா ஆகியவை வளர்க்கப்பட்டு வருவதையும், நொச்சி–யூரணி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மல்லி விரிவாக்க திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டு வரும் மல்லிகைப்பூ தோட்டத்தையும், பஞ்சன்தாங்கி கிராமத்தில் வளர்க்கப்பட்டு வரும் அத்திப்பழ தோட்டத்தையும், தெற்குத்தரவை கிராமத்தில் இயற்கை விவசாயத்தின் மூலம் வளர்க்கப்பட்டு வரும் தேனீக்களையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நாகராஜன் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×