உள்ளூர் செய்திகள்

வீடு கட்ட பணம் இல்லாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-06-24 10:21 GMT   |   Update On 2022-06-24 10:21 GMT
  • வீடு கட்ட பணம் இல்லாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • மன உளைச்சலில் இருந்த வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா குமரிபாளையம் அருகே சங்கரம்பாளையம் காலனியை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 53). இவருக்கு சவுந்தரராஜன், இளையராஜா, விமல்ராஜ் ஆகிய 3 மகன்கள் உள்ளார்கள்.

கணவன், மனைவி மற்றும் 3 மகன்கள் என 5 பேரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இவர்கள் வசிக்கும் வீடு சிறிய வீடாக இருப்பதால், 5 பேரும் ஒன்றாக வசிக்க போதிய வசதிகள் இல்லாத நிலையில், புதிதாக வீடு கட்டும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் போதிய பண வசதி இல்லாத சூழ்நிலையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் 2-வது மகன் இளையராஜா (22) மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அனைவரும் கூலி வேலை செய்து வரும் வகையில் போதிய வசதி இல்லாத நிலையில் விரக்தி அடைந்த இளையராஜா பூச்சி மருந்தை எடுத்துக்குடித்து விட்டார்.

அக்கம் பக்கம் இருந்த–வர்கள் இளையராஜாவை மீட்டு மோகனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை சிங்காரவேலு, மோகனூர், போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News