தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழம் வரத்து 250 டன்னாக அதிகரிப்பு

Published On 2024-05-02 08:39 GMT   |   Update On 2024-05-02 08:39 GMT
  • கடந்த சில நாட்களாக அதிகளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளன.
  • தினசரி 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 250 டன் அளவிலான மாம்பழங்கள் குவிந்து வருகிறது.

போரூர்:

மாம்பழம் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் சென்னையில் சாலையோரங்களில் மாம்பழக்கடைகள் அதிக அளவில் முளைத்து உள்ளன. அதிக அளவில் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிக அளவில் மாம்பழங்கள் வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளன. தினசரி 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 250 டன் அளவிலான மாம்பழங்கள் குவிந்து வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை 150 டன் மாம்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது அதன் வரத்து 2மடங்காக அதிகரித்து உள்ளது. காலையிலேயே வெயில் வாட்டி எடுத்து வருவதால் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் மாம்பழம் விற்பனை மந்தமாகவே நடந்து வருவதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழம் விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-

பங்கனபள்ளி-ரூ.50-ரூ.80வரை, மல்கோவா-ரூ.120, இமாம்பசந்த்-ரூ.130-ரூ.170வரை, ஜவாரி-ரூ.60-ரூ.80வரை, செந்தூரா-ரூ.80, அல்போன்சா-ரூ.170.

Tags:    

Similar News