செய்திகள்
கைது

மணப்பாறை, திருச்சியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

Published On 2021-01-04 10:24 GMT   |   Update On 2021-01-04 10:24 GMT
மணப்பாறை, திருச்சியில் கஞ்சாவிற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணப்பாறை:

மணப்பாறை, திருச்சியில் கஞ்சாவிற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மணப்பாறை பஸ் நிலையம் அருகே 2 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பதாக மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணப்பாறை போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது 2 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். உடனே அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், மணப்பாறை பூசாரிகளம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற டொய் (வயது 20), பூமாலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (20) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுபோல் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீசார் எம்.ஜி.ஆர். நகரில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

அப்போது, அந்த பகுதியில் கஞ்சா விற்றதாக, அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமியை (54) போலீசார் கைது செய்தனர். மேலும் திருச்சி ராம்ஜிநகர் காந்தி நகரில் கஞ்சாவிற்ற டாக்கர் (73) என்ற முதியவரை ராம்ஜிநகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News