செய்திகள்
காட்டூர் அருகே மணல் கடத்திய தொழிலாளி கைது
காட்டூர் அருகே மணல் கடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
காட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது காட்டூர் அய்யனார் கோவில் அருகில் உள்ள ஒடையில் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
போலீசாரை கண்டதும் தப்பி ஓடமுயன்ற காட்டூர் காலனியை சேர்ந்த தொழிலாளி யுவராஜை கைது செய்தனர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.