செய்திகள்
தற்கொலை

சேர்ந்தமரம் அருகே தூக்குபோட்டு பெண் தற்கொலை

Published On 2019-08-02 16:07 GMT   |   Update On 2019-08-02 16:07 GMT
சேர்ந்தமரம் அருகே குடும்ப பிரச்சினையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை

சேர்ந்தமரம் அருகே உள்ள கரடிகுளம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி கஸ்தூரி (32). இவர் குடும்ப பிரச்சினையில் வீட்டில் தூக்குபோட்டு தொங்கினார்.

சத்தம் கேட்டு அருகில் உள்ள உறவினர்கள் அவரை மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கஸ்தூரியை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News