என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடும்ப பிரச்சினை"
- மன அழுத்தத்திற்கான காரணங்கள் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்.
- ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கின்றது.
உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ ஏற்படும் உடல் அல்லது மனரீதியான தாக்கங்களை சரியான முறையில் எதிர்கொள்ள முடியாத ஒரு நிலையே மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்) ஆகும். இது கடுமையான மன அழுத்தம், எபிசோடிக் மனஅழுத்தம், நாள்பட்ட மன அழுத்தம் என்று மூன்று வகைப்படும்.
மன அழுத்தத்திற்கான காரணங்கள் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும் என்றாலும் இதற்கு முக்கிய காரணங்களாக கீழ் கண்டவை கருதப்படுகின்றன:
பணிச்சுமை அல்லது வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சர்க்கரை நோய், புற்றுநோய், உடல் பருமன் போன்ற உடல் ரீதியான பிரச்சினைகள், கடன், உறுதியற்ற வருமானம், அதிர்ச்சிகரமான விபத்துக்கள், குடும்ப பிரச்சினைகள், பொதுவாக மனிதர்களுக்கு தினமும் 9 முதல் 11 மில்லி கிராம் அளவு கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரக்கிறது.
மன அழுத்தம் ஏற்படும் போது இது 10 மடங்குக்கு மேல் அதிகரிக்கிறது. மேலும், மன அழுத்தத்தினால் அட்ரினலின், நார்அட் ரினலின் போன்ற ஹார்மோன்களும் அதிக அளவு சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் அனைத்தும், இன்சுலின் எதிர்மறை நிலையை அதிகரித்து, இன்சுலின் செயல் திறனை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கின்றது.
தினமும் குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் தூக்கம். யோகா அல்லது தியானம் போன்ற மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள், மருத்துவரின் உளவியல் ஆலோசனைகள் ஆகியவற்றை சர்க்கரை நோயாளிகள் பின்பற்றினால் மன அழுத்தத்தினால் ரத்த சர்க்கரை அதிகமாவதை குறைக்கலாம்.
மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்:
* மன அழுத்தத்தை நிர்வகிக்க நீரிழிவு நோயாளிகள் 20 நிமிட நடைபயிற்சி மேற்கொள்ளுதல், ஓடுதல் மற்றும் நீந்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வரலாம்.
* முகத்தில் உள்ள கவலையை போக்க அடிக்கடி சிரித்து மகிழுங்கள்.
* உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து சமூக ஆதரவை பெறுங்கள்.
* தியானம் மற்றும் நினைவாற்றல் பயிற்சியை மேற்கொண்டு வரலாம்.
எப்போதும் தன்னம்பிக்கையோடு இருங்கள். என்னால் இந்த செயலை செய்ய முடியும் என்று நம்புங்கள். உங்கள் பிரச்சனையை அடுத்தவர் மீது திணிக்க முயற்சி செய்யாதீர்கள். யாரையும் எதற்காகவும் கட்டாயப் படுத்தாதீர்கள். மன உளைச்சல் இன்றி மகிழ்ச்சியோடு இருங்கள்.
- ஈஸ்டர் ராஜ் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
- தனியாக இருந்த ஈஸ்டர் ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லத்தாயார்புரத்தை சேர்ந்தவர் அருள் தாமஸ். இவரது மகன் ஈஸ்டர் ராஜ்(வயது 34). இவர் டிப்ளமோ படித்து விட்டு ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி செல்வ மெர்ஸி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று பாவூர்சத்திரம் அருகே மருதடியூரில் தனது மாமனார் வீட்டுக்கு ஈஸ்டர் ராஜ் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத நிலையில், தனியாக இருந்த ஈஸ்டர் ராஜ் அங்குள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குடும்ப பிரச்சினையில் குறி சொல்பவர் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை கருப்பாயூரணி அருகே குன்னத்தூரில் 65 வயது மதிக்கத்தக்க நபர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினார். விசாரணையில் பிணமாக கிடந்தது அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் என தெரியவந்தது.
ஊர், ஊராக சென்று குறி சொல்வது மற்றும் பரிகா பூஜைகள் செய்து வந்த இவருக்கு ராஜேசுவரி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற வெள்ளையன் பின்னர் வீடு திரும்பவில்லை.
முன்னதாக அவர் குன்னத்தூரில் உள்ள ஒரு கடையில் உடுக்கை உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்கி அதனை தனது மனைவியிடம் கொடுத்து விடுங்கள் என அங்கிருந்த ஒரு நபரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் வைத்திருந்த பையில் பெட்ரோல் கேன் இருப்பதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர்.
குன்னத்தூரில் உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்த வெள்ளையன் தீக்குளித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த வெள்ளையன் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
- உயிருக்கு போராடிய பெண்ணை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி முன்புறம் ரெயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் குழந்தையுடன் பெண் ரெயிலில் அடிபட்டு கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கை,கால்களில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பெண்ணை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அருகில் 5 வயது சிறுவன் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தான். சிறுவன் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தண்டவாளத்துக்கு அருகில் 2 சிறுமிகள் காயத்துடன் கிடந்தனர். அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கண்ணா கல்லூரி பின்புறம் துவாரகை நகரை சேர்ந்தவர் மீனா (29) என்பதும், அவர் தனது 10 வயது மகள் ஹரிஷ்மா, 2-வது மகள் ஹாசினி (7), மகன் சந்திரன் (5) ஆகியோருடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய வந்துள்ளார். சிறுமிகள் இருவரும் ரெயில் வந்ததும் தண்டவாளத்தை விட்டு தப்பி வெளியே ஓடி வந்து விட்டனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவன் ரெயில் அடிபட்டு இறந்தான். மீனாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது.
மீனாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து, இரண்டாவதாக மகாதேவன் நண்பருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
- அவரை காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம் அடைந்தார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள தமிழ்பாடியைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டி. இவரும், குல்லூர் சந்தையைச் சேர்ந்த பாண்டிச்செல்வி (27) என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் இருவ ருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக ெதரிகிறது. இதன் காரணமாக அலெக்ஸ்பாண்டி அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக பாண்டிச்செ ல்வி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைதாகாமல் இருக்க அலெக்ஸ்பாண்டி குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தினர். இதைத்தொ டர்ந்து சம்பவத்தன்று அலெக்ஸ்பாண்டி மோட்டார் சைக்கிளில் பாண்டிச்செல்வியை சமரச தீர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார். வழியில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பாண்டிச்செல்வி நடுரோட்டிலேயே தான் கொண்டு வந்திருந்த ஸ்பிரேயை உடலில் அடித்து க்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அலெக்ஸ்பாண்டியன் மனைவியை காப்பாற்ற முயன்றார். அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டிச்செல்வி இறந்தார்.
அலெக்ஸ்பாண்டி சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவக்குமார் சமையல் தொழிலாளி என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார்.
- சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் அப்பர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 28), சமையல் தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டவுன் அண்ணாநகரை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சிவக்குமார் சமையல் தொழிலாளி என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வருவதாக சிவக்குமார் கூறி சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில், எருமாபாளையம் பகுதியில் உள்ள குருவிபனை ஏரியில் மாயமான சிவக்குமார்் பிணமாக கிடப்பதாக நேற்று பிற்பகல் கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் பிணமாக கிடந்த சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வெளியே சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது எப்படி?, தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது. பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- தாக்குதலில் காயமடைந்த வசந்தியை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் மனைவி வசந்தி(வயது51). அதே பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (24). வசந்திக்கு புகழேந்திக்கு மருமகன் ஆவார்.
இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வசந்திக்கும், புகழேந்திக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புகழேந்தி, வசந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த வசந்தியை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மதுரையில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து தல்லாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை தல்லாகுளம், கலைநகர் சாமுவேல் மனைவி ஷீலா சரண்யா (வயது 27). இவருக்கும் கணவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஷீலா சரண்யா சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி ஷீலா சரண்யாவின் தாய் அன்னம்மாள் ஜெயராணி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.அதில், "எனது மகள் ஷீலா சரண்யாவுக்கு, அவரது கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்து வந்தனர். இதன் காரணமாகவே எனது மகள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இது தொடர்பாக போலீசார் விசாரிக்க வேண்டும்" என்று கூறி உள்ளார். இதன் அடிப்படையில் தலாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேர் கைது
- தம்பி ரெஜி தலைமறைவாகியுள்ளார்
அருமனை, ஜூன்.11-
திக்குறிச்சி கடை விளையை சார்ந்தவர் விஜயகுமார் (வயது 52) இவர் இந்த பகுதியல் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தம்பி ரெஜி இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். அண்ணன் தம்பிக்குள் குடும்ப பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் விஜயகுமார் தனது காரில் வரிக்க விளை பகுதியில்சென்று கொண்டிருந்த போது தம்பி ரெஜியும் அவரது நண்பர்கள் வரிக்க விளையை சார்த்த சத்தியன் (49), காட்டு விளையை சார்ந்த புனிதகுமார் (40) ஆகியோர் சேர்ந்து விஜயகுமாரின் காரை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். விஜயகுமாரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர்.
பின்னர் தாக்குதல் நடத்திய 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜயகுமாரை மீட்டு மார்தாண்டம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். இது சம்மந்தமாக சத்தியன், புனிதகுமார் ஆகியோரை அருமனை போலீசார் கைது செய்துள்ளனர்.தம்பி ரெஜி தலைமறைவாகியுள்ளார். இவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்