search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே  ஏ.சி. மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    பாவூர்சத்திரம் அருகே ஏ.சி. மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை

    • ஈஸ்டர் ராஜ் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
    • தனியாக இருந்த ஈஸ்டர் ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லத்தாயார்புரத்தை சேர்ந்தவர் அருள் தாமஸ். இவரது மகன் ஈஸ்டர் ராஜ்(வயது 34). இவர் டிப்ளமோ படித்து விட்டு ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி செல்வ மெர்ஸி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று பாவூர்சத்திரம் அருகே மருதடியூரில் தனது மாமனார் வீட்டுக்கு ஈஸ்டர் ராஜ் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத நிலையில், தனியாக இருந்த ஈஸ்டர் ராஜ் அங்குள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×