search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு - திருப்பூரில் ரெயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்த பெண், சிறுவன் பலி
    X

    கோப்புபடம்.

    குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு - திருப்பூரில் ரெயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்த பெண், சிறுவன் பலி

    • திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • உயிருக்கு போராடிய பெண்ணை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி முன்புறம் ரெயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் குழந்தையுடன் பெண் ரெயிலில் அடிபட்டு கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கை,கால்களில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பெண்ணை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அருகில் 5 வயது சிறுவன் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தான். சிறுவன் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தண்டவாளத்துக்கு அருகில் 2 சிறுமிகள் காயத்துடன் கிடந்தனர். அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கண்ணா கல்லூரி பின்புறம் துவாரகை நகரை சேர்ந்தவர் மீனா (29) என்பதும், அவர் தனது 10 வயது மகள் ஹரிஷ்மா, 2-வது மகள் ஹாசினி (7), மகன் சந்திரன் (5) ஆகியோருடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய வந்துள்ளார். சிறுமிகள் இருவரும் ரெயில் வந்ததும் தண்டவாளத்தை விட்டு தப்பி வெளியே ஓடி வந்து விட்டனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவன் ரெயில் அடிபட்டு இறந்தான். மீனாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

    மீனாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து, இரண்டாவதாக மகாதேவன் நண்பருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×