செய்திகள்
தற்கொலை (கோப்பு படம்)

திண்டுக்கல் அருகே என்ஜினீயரிங் மாணவி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2019-07-02 11:32 GMT   |   Update On 2019-07-02 11:32 GMT
திண்டுக்கல் அருகே என்ஜினீயரிங் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:

திண்டுக்கல் அருகில் உள்ள இடையகோட்டை வடக்கு தெருவை சேர்ந்த காளியப்பன் மகள் மகாலட்சுமி (வயது24). ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார்.

மேலும் தற்போது கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்று வந்தார். தந்தை இறந்து விட்டதால் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்து வந்தார். இதனால் தனது பெரியம்மா வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகாலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது தம்பி தங்கத்துரை கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News