செய்திகள்

கூட்டணி கட்சிகளை திமுக முடிவு செய்யும்- முத்தரசன்

Published On 2019-02-11 08:41 GMT   |   Update On 2019-02-11 08:41 GMT
பா.ம.க.வை சேர்ப்பதா? வேண்டாமா? என்பதை கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. தான் முடிவு செய்யும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். #Mutharasan #PMK #DMK
சென்னை:

சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் ‘மாலைமலர்’ நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும். இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி அப்போது முடிவு செய்து அறிவிக்கப்படும்.

பா.ம.க. குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்து பேசுவது அவர்கள் இருவருக்கும் உள்ள பிரச்சனையாகும்.

தி.மு.க. கூட்டணியில் திருமாவளவன் இடம் பெற்றுள்ளார். இதில் பா.ம.க.வை சேர்ப்பதா? வேண்டாமா? என்பதை கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. தான் முடிவு செய்யும்.



தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கிண்டல், கேலியாக பேசக்கூடியவர். கூட்டணி குறித்து அவர் பேசிய சில கருத்துக்கள் தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்குகிறது.

வருகிற 27-ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு கோவையில் நடைபெறுகிறது.

இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் உள்பட 9 கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.  #Mutharasan #PMK #DMK
Tags:    

Similar News