தமிழ்நாடு

கடல் சீற்றம் காரணமாக திருச்செந்தூர் கடலில் குளிக்க போலீசார் தடை

Published On 2024-05-05 08:14 GMT   |   Update On 2024-05-05 08:14 GMT
  • பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
  • இன்று காலை கடல் வழக்கம்போல் காணப்பட்டதால் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

திருச்செந்தூர்:

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தினந்தோறும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

தரிசனத்திற்கு முன்னதாக அவர்கள் கடலில் புனித நீராடி அதன்பின்னரே சுவாமியை தரிசிக்க செல்கின்றனர். இந்நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்றும் கடல் அலைகள் 2 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு எழக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கிடையே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை கடல் வழக்கம்போல் காணப்பட்டதால் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பிற்பகலில் 1 மணி அளவில் கடலில் சீற்றம் ஏற்பட்டு சுமார் 100 அடி தூரம் கடல் நீர் வெளியேறியது. இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.

Tags:    

Similar News