தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

Published On 2025-12-20 12:03 IST   |   Update On 2025-12-20 12:03:00 IST
  • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
  • அணையில் தண்ணீர் இருப்பு 81.35 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

அதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1847 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் அணையில் தண்ணீர் இருப்பு 81.35 டி.எம்.சி.யாக உள்ளது.

Tags:    

Similar News