செய்திகள்

முதலமைச்சர் பழனிசாமியிடம் திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கினார் துரைமுருகன்

Published On 2018-11-21 06:41 GMT   |   Update On 2018-11-21 06:41 GMT
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து கஜா புயல் நிவாரண பணிக்காக திமுக அறிவித்த ரூ. 1 கோடியை துரை முருகன் வழங்கினார். #GajaCyclone #TNCM #Edappadipalaniswami #DMK #DuraiMurugan
சென்னை

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க. பொருளாளர் துரை முருகன் சந்தித்து பேசினார்.

அப்போது கஜா புயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரணத்தை முதல்வரிடம் துரைமுருகன் வழங்கினார்.  #GajaCyclone #TNCM #Edappadipalaniswami #DMK #MKStalin #DuraiMurugan
Tags:    

Similar News