இந்தியா

யுபிஐ - டிஜிட்டல் பேமெண்ட் - அதிகம் செலவு செய்யும் 75% இந்தியர்கள்

Published On 2024-05-08 13:02 GMT   |   Update On 2024-05-08 13:02 GMT
  • 75சதவீத மக்கள் UPI பிற டிஜிட்டல் பேமெண்ட் அதிகசெலவு செய்தனர் என ஆய்வில் தெரியவந்தது
  • இந்த ஆண்டு ஏப்ரல் மாத கணக்கெடுப்பு படி UPI மூலம் ரூ.19.64 லட்சம் கோடி பரிவர்த்தனை நடந்தது

டிஜிட்டல் யுகத்தில் தற்போது ஒரு ரூபாய் முதல் லட்சங்கள் வரை எளிதாக நாம் பண பரிவர்த்தனை செய்ய முடியும். இதற்கு யுபிஐ பணப் பரிமாற்ற சேவை மிகவும் உதவியாக அமைந்துள்ளது. யுபிஐ சேவை மக்கள் மத்தியில் தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு ரூபாய்க்கு பொருள் வாங்கினாலும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கினாலும் அனைத்திற்கும் யுபிஐ பண பரிவர்த்தனை முதன்மையாக திகழ்கிறது. இந்தியாவில் தற்போது டிஜிட்டல் முறை மூலம் பணம் செலுத்துவது புதிய உச்சம் அடைந்துள்ளது,



இணையத்தில் வளர்ந்து வரும் வியாபார பரிவர்த்தனைக்காக இதனை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் செழிக்க பணத்தை செலவழிப்பது ஒரு முக்கிய அங்கமாகும்.

டிஜிட்டல் பணம் மக்களுக்கு நிறைய நன்மைகளை கொண்டுவந்துள்ளதன் மூலம் எளிதாக தொழில் செய்ய முடியும். எல்லா இடங்களிலும் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை. பெரும்பாலான மக்கள் பணத்தை விட டிஜிட்டல் மூலம் அதிகம் செலவிடுகிறார்கள். கிரெடிட் கார்டு மூலம் இது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.





இது தொடர்பாக டெல்லி இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐஐஐடி டெல்லி) ஆய்வு நடத்தியுள்ளது. இதில் யுபிஐ மற்றும் பிற டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் மூலம் முன்பை விட பணப் பரிவர்த்தனை மிகவும் எளிமையாகி உள்ளன.

ரொக்கமில்லா பரிவர்த்தனையால் 'அதிகச் செலவு' காரணமாக பல தனிநபர்கள் தங்கள் பாக்கெட்டுகளை 'காலியாக்கி உள்ளனர். இந்தியாவில் சுமார் 75 சதவீத மக்கள் UPI மற்றும் பிற டிஜிட்டல் பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்துவதன் விளைவாக அதிகமாகச் செலவு செய்துள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.




மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கணக்கெடுப்பு படி UPI மூலம் ரூ.19.64 லட்சம் கோடி மதிப்பில் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 50 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

Tags:    

Similar News