இந்தியா

மாநிலங்களவை தேர்தல்: 4 வேட்பாளர்களை அறிவித்தது திரிணாமுல் காங்கிரஸ்

Published On 2026-02-27 23:07 IST   |   Update On 2026-02-27 23:07:00 IST
  • மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
  • நாடு முழுவதிலும் 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் ஏப்ரலில் காலியாகின்றன.

கொல்கத்தா:

பாராளுமன்றத்தில் மக்களவை, மேல்சபை என 2 அவைகள் உள்ளன. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களவை எம்.பி. ஆகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் மூலம் மேல்சபை எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன.

இதற்கிடையே, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஒடிசா, அசாம், பீகார், சத்தீஸ்கர், அரியானா, இமாச்சல பிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 37 இடங்களுக்கான மேல்சபை தேர்தல் மார்ச் மாதம் 16-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முன்னாள் டிஜிபி ராஜிவ்குமார், மேனகா குருசாமி, கோயல் மாலிக் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News