தமிழ்நாடு

நாளை மறுநாள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

Published On 2024-05-08 12:46 GMT   |   Update On 2024-05-08 12:46 GMT
  • ஏப்ரல் 12-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.
  • 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.

சென்னை:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ல் தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நிறைவடைந்தது.

இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.

இதற்காக, மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஏப்ரல் 12-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே10ம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

10 ஆம் தேதி காலை 9.30 மணிமுதல் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

Tags:    

Similar News